Google search engine
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். கடந்த ஆண்டு ஜூலையில் சக விண்வெளி வீரர் புட்ச் வில்மோருடன் வெறும் 8 நாள் பயணமாக விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார். ஆனால் எதிர்பாராத வகையில் அவர் 9 மாதங்களுக்கு மேல் அங்கு தங்க நேரிட்டது....
நாடாளுமன்ற மக்​களவை​யில் வக்பு சட்​டத் திருத்த மசோதா நேற்று தாக்​கல் செய்​யப்​பட்​டது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்​திர முதல்​வரு​மான சந்​திர​பாபு நாயுடு, சட்ட வல்​லுநர்​களு​டன் விரி​வான ஆலோ​சனை நடத்​தி​யிருக்​கிறார். இந்​நிலை​யில் தெலுங்கு தேசம் கட்சி வட்​டாரங்​கள் கூறும்​போது, ‘‘வக்பு சட்​டத் திருத்த மசோ​தா​வில் உள்ள மற்ற அனைத்து திருத்​தங்​களை​யும் ஆதரிக்​கிறோம். ஆனால், மாநில வக்பு வாரி​யத்​தில் முஸ்​லிம் அல்​லாத ஒரு​வர் இடம்​பெற வேண்​டும்...
பிஹார் மாநிலம் புத்த கயா​வில் அமைந்​துள்ளது மகா போதி கோயில். புத்தருக்கு ஞானம் பிறந்த போதி மரம் இதற்​குள் உள்​ளது. இக்​கோ​யிலை நிர்​வகிக்க, மகா போதி கோயில் சட்​டம் 1949 (பிஜிடிஏ)-ஐ பிஹார் மாநில அரசு இயற்​றியது. இச்​சட்​டத்​தின்​படி, மகா போதி கோயிலின் நிர்​வாக குழு​வில் பவுத்​தர்​கள் மற்​றும் இந்​துக்​கள் தலா 4 பேரை பிஹார் அரசு நியமிக்​கிறது. இக்​குழு​வின் நிரந்தர தலை​வ​ராக புத்த கயா மாவட்ட ஆட்​சி​யர் இருப்​பார்....
மக்களவையில் மத்​திய உள்துறை அமைச்​சர் அமித் ஷா மற்​றும் சமாஜ்​வாதி எம்​.பி அகிலேஷ் யாதவ் இடையி​லான அரசி​யல் கிண்டலால் சிரிப்​பலை எழுந்​தது. வக்பு திருத்த மசோதா மீதான விவாதத்​தின்​போது சமாஜ்​வாதி கட்​சித் தலை​வரும் எம்​.பி.​யு​மான அகிலேஷ் யாதவ் பேசும்​போது, “இந்த மசோதா நம்​பிக்​கையை கொடுக்​கும் என அமைச்​சர் கூறுகிறார். ஆனால் அது எப்​படி என்று ஆங்​கிலத்​தில் அல்​லது இந்​தி​யில் கூட என்​னால் புரிந்​து​கொள்ள முடிய​வில்​லை” என்​றார். அப்​போது அவை​யில் சிரிப்​பலை...
அரசியல் என்பது எனக்கு முழுநேர பணி அல்ல என்றும் உண்மையில் நான் ஒரு துறவி என்றும் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளில் அமைச்சர் பதவியில் இருப்பதில்லை என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்டம்பர் 17-ம் தேதி 76-வது வயதில் அடியெடுத்து வைக்க உள்ளார். எனவே, நரேந்திர மோடி விரைவில் பிரதமர்...
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30-வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140 கி.மீ. தூரம் பாதயாத்திரையாக சென்று துவாரகா கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார். நலிவுற்ற வனவிலங்குகளுக்காக வந்தாரா என்ற முகாமை ஆனந்த் அம்பானி அமைத்துள்ளார். பிரதமர் மோடியும் சமீபத்தில் அங்கு வந்து வனவிலங்குகளை பார்த்து ரசித்தார். அந்த முகாமுக்கு மத்திய அரசின் விருதும் கிடைத்துள்ளது. ஆனந்த் அம்பானியின்...
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று நடைபெற்ற பட்டாசு விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர், 5 பேர் காயம் அடைந்தனர். குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ளது தீசா நகரம். இங்குள்ள பட்டாசு ஆலையில் ஊழியர்கள் நேற்று பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை 9.45 மணியளவில் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த பட்டாசு ஆலை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது....
வரும் 2026-ம் ஆண்டில் மாவோயிஸ்ட் தீவிரவாதம் வேரறுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் குறிப்பிட்ட மாவட்டங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் ஆதிக்கம் இருந்தது. கடந்த 2015-ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்த மாநிலங்களை சேர்ந்த 35 மாவட்டங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாத பிரச்சினை நீடித்தது. கடந்த 2018-ம் ஆண்டில் மாவட்டங்களின் எண்ணிக்கை 30 ஆகவும்...
வக்பு திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதா மீது 8 மணி நேரம் விவாதம் நடத்தப்படும். இதன்பிறகு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் வக்பு வாரிய சொத்துகள் பதிவு செய்யப்படுவதை ஒழுங்குபடுத்த வக்பு சட்டத்தில் (1995) திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த சட்ட திருத்த மசோதா கடந்த ஆண்டு மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் ஆட்சேபத்தால் கடந்த ஆண்டு ஆகஸ்டில்...
கர்​நாட​கா​வின் தாவணகெரே மாவட்​டத்​தில் உள்ள‌ நியாமதி டவுனில் பாரத ஸ்டேட் வங்கி உள்​ளது. க‌டந்த ஆண்டு இந்த வங்​கி​யில் ரூ.13 கோடி மதிப்​பிலான 17.7 கிலோ எடை​யுள்ள தங்க நகைகள் கொள்ளை அடிக்​கப்​பட்​டது. வங்​கி​யில் இருந்த சிசிடிவி கேம​ராக்​களை​யும் திருடிச் சென்​றனர். இதனால் குற்​ற​வாளி​களை உடனடி​யாக கண்​டறிவ​தில் சிக்​கல் ஏற்​பட்​டது. இதனிடையே நியாமதி டவுனை சேர்ந்த உள்​ளூர் குற்​ற​வாளி​களை​யும் பிடித்து விசா​ரணை நடத்​தினர். அப்​போது உள்​ளூரை சேர்ந்த சிலர் அதில்...