பாகிஸ்தான் மற்றும் உக்ரைன் ட்ரோன்களை முடக்கிய இந்திய தயாரிப்பு டி4 கருவிக்கு அமெரிக்காவைச் சேர்ந்த போர் நிபுணர் ஜான் ஸ்பென்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
எதிரி நாட்டு ட்ரோன்களை முடக்கி செயல் இழக்கச் செய்வதற்காக டி4 என்ற கருவியை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) உருவாக்கியது. இதில் எலக்ட்ரானிக் ஜாமர்கள், லேசர் கருவிகள் எதிரி நாட்டு ட்ரோன்களை கண்டுபிடித்து முடக்கும். இவற்றை பெல் நிறுவனம் தயாரித்தது. இந்த டி4 கருவியை ஆபரேஷன்...
முதல்முறையாக பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. தொலைவில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன: அமித் ஷா பெருமிதம்
admin - 0
முதல்முறையாக பாகிஸ்தானுக்குள் புகுந்து 100 கி.மீ தொலைவில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. இது பாகிஸ்தானை அச்சமடையச் செய்தது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
குஜராத்தில் இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காந்திநகர் மாவட்டம் கோலாவாடா கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் பேசியதாவது:
மோடி பிரதமராவதற்கு முன்பு, நாட்டில் தீவிரவாத தாக்குதல் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து நடந்து வந்தது....
காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் மீட்கப்பட்ட 42 வெடிக்காத குண்டுகளை இந்திய ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீஸார் நேற்று செயலிழக்கம் செய்தனர். இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரில் காஷ்மீரை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியது.
இதில் எல்லை கிராமங்களில் உள்ள மக்கள் பலர் இறந்தனர். பூஞ்ச் பகுதியில் மட்டும் 12 பேர் உயிரிழந்தனர், 42 பேர் காயம் அடைந்தனர். வீடுகளும் சேதமடைந்தன.
இந்நிலையில் இங்கு வெடிக்காத...
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட நவீன விபாட் ட்ரோன்கள் இந்தியா வந்துள்ளன. இவற்றால் செங்குத்தாக மேலெழும்பவும், தரையிறங்கி தாக்குதல் நடத்தவும் இயலும். இதனால் இவை வி -டால் ட்ரோன்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இனிமேல் போர்க்களத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும் ட்ரோன்கள்தான் ஆதிக்கம் செலுத்தும். இதனால் அமெரிக்கா மற்றும் இதர நாடுகளின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட விடால் மற்றும் விபாட் ட்ரோன்கள் இந்தியா வந்துள்ளன. இவற்றின் மூலம் போர்க்களத்தில்...
"ஆபரேஷன் சிந்தூர்" தொடர்பாக சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட அசோகா பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறையின் தலைவர் அலி கான் மஹ்முதாபாத்தை ஹரியாணா போலீஸார் நேற்று கைது செய்தனர்.
பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதனை, கும்பல் கொலை மற்றும் புல்டோசர்களை கொண்டு வீடுகள் இடிக்கப்படுவதுடன் ஒப்பிட்டு அசோக...
'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கை தொடர்பான புதிய வீடியோவை இந்திய ராணுவம் நேற்று வெளியிட்டது. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலடியாக கடந்த 7-ம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப் படை ஏவுகணைகளை வீசி அழித்தது. அப்போது தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது தொடர்பான செயற்கைக்கோள்...
காஷ்மீர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட 6 தீவிரவாதிகளில் 2 பேர் பெரிய தாக்குதல்களில் தொடர்புடையவர்கள்: இந்திய ராணுவம்
admin - 0
ஜம்மு-காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில் இறந்த 6 தீவிரவாதிகளில் 2 பேர் பெரிய தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் கடந்த 48 மணிநேரத்தில் 6 தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்காக நிகழ்த்தப்பட்ட 2 ஆபரேஷன்கள் குறித்து காஷ்மீர் போலீஸ் ஐஜி வி.கே. பேர்டி, ராணுவ மேஜர் ஜெனரல் தனஞ்செய் ஜோஷி ஆகியோர் காஷ்மீரின் அவந்திபோரா நகரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.
அப்போது போலீஸ் ஐஜி வி.கே. பேர்டி கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரின்...
திருப்பதி ஏழுமலையானுக்கு கொல்கத்தாவை சேர்ந்த சஞ்சீவ் கோயங்கா எனும் பக்தர் 5.267 கிலோ எடையில் 2 தங்க ஹஸ்தங்களை (கைகள்) நேற்று காணிக்கையாக வழங்கினார்.
ரூ.3.63 கோடி மதிப்புடைய இந்த தங்க ஹஸ்தங்களை திருமலை திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கய்ய சவுத்ரி பெற்றுக்கொண்டார். முன்னதாக ஏழுமலையானை சஞ்சீவ் கோயங்கா தரிசனம் செய்தார். அவருக்கு ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.
'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கை நிறைவடையவில்லை. தற்காலிகமாகவே நிறுத்தி வைத்திருக்கிறோம். பாகிஸ்தானின் செயல்பாடுகளை பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 7-ம் தேதி பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே 4 நாட்கள் அதிதீவிர போர்...
மகாராஷ்டிர நகரசபை நிர்வாக அதிகாரி வீட்டிலிருந்து ரூ.31 கோடி மதிப்புள்ள ரொக்கம், நகைகள், தங்கக்கட்டிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலம் வாசை விரார் நகராட்சி அலுவலகத்தின் (விவிஎம்சி) துணை இயக்குநராக (நகரத்திட்டமிடல்) பணியாற்றுபவர் ஒய்.எஸ். ரெட்டி. இவர் மீது பல்வேறு புகார்கள் அமலாக்கத்துறைக்கு வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் இவரது வீடு, அலுவலகங்கள், உறவினர் வீடுகளில் சோதனை நடத்தினர்.
மும்பை, ஹைதராபாத் ஆகிய...










