Google search engine

குளச்சல்: காதலனுடன் தனிமையில் இருந்த மகள்.. அதிர்ந்து போன தந்தை

குமரி மாவட்டம் குளச்சல் அருகே கோணங்காடு பகுதியில் வசிக்கும் கொத்தனாரின் மகள் (17), ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். நேற்று கேரளாவில் இருந்து வீடு திரும்பிய கொத்தனார், தனது மகள் காதலனுடன் தனிமையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவர் வீட்டைப் பூட்டிவிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்து நடந்ததை கூறியுள்ளார்....

மார்த்தாண்டம்: வரதட்சனை கேட்டு பெண் சித்திரவதை – வழக்கு

அரியூர்கோணம் பகுதியைச் சேர்ந்த சரிதா (30) என்பவர், தனது கணவர் அஜித்குமார் (40) மற்றும் அவரது உறவினர்களான ஜஸ்டின், லதா, ராஜகுமார், கீதா ஆகிய 5 பேர் மீது அதிக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக குழித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் மார்த்தாண்டம்...

குளச்சல்: மனைவின் கள்ளக்காதலன் கழுத்தை அறுத்த மீனவர்

குளச்சல் கடற்கரை கிராமத்தில், மீனவரின் மனைவி வேறொரு வாலிபருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கள்ளக்காதலனை வீட்டிற்கு வரவழைத்து அவருடன் மனைவி உல்லாசமாக இருந்தபோது, மீனவர் அவர்களைக் கண்டு ஆத்திரமடைந்துள்ளார். கதவைத் திறந்து உள்ளே நுழைந்த அவர், இருவரையும் தாக்கி, பிளேடால் மனைவியின்...

கருங்கல்: பைக்கை அரசு பஸ்ஸில் மோதிய போதை வாலிபர்

தேங்காப்பட்டணம் செல்லும் அரசு பஸ் கருங்கல் பகுதியில் நேற்று வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த ஒருவர் போதையில் பைக்கை ஓட்டி வந்து பஸ் மீது மோதினார். இதில் காயம் அடைந்த வாலிபர், ஆம்புலன்சில் ஏற மறுத்து அடம்பிடித்தார். பின்னர் அவரது தாயும் நண்பர்களும் வந்து அவரை மீட்டு...

குமரியில் மருத்துவர் மீது பாய்ந்த வழக்கு

நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரியும் 19 வயது இளம்பெண்ணை, மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராதாகிருஷ்ணன் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து செவிலியரின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ராதாகிருஷ்ணன் மீது ஏற்கனவே பல பெண்களை இதேபோல் துன்புறுத்தியதாக உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்....

புத்தேரியில் ரெயில் மோதி மூதாட்டி பலி

நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் நேற்று மாலை புத்தேரி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, தண்டவாளத்தை கடக்க முயன்ற 65 வயது மூதாட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த மூதாட்டி, மீட்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு...

திக்கணம்கோடு: கொத்தனார் திடீர் சாவு போலீஸ் விசாரணை

திக்கணம்கோடு பகுதியைச் சேர்ந்த கொத்தனார் சுகுமாரன் (48) மதுபோதையில் வீட்டில் சாப்பிட்டுவிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்தபோது உயிரிழந்தார். அவரது மகன் அஜித் அவரை அசைவற்ற நிலையில் கண்டறிந்தார். தக்கலை போலீசார் உடலைக் கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குமரி: மதுபோதையில் ரகளை; பெண் மீது பாலியல் தொல்லை

மணலிக்கரை பகுதியைச் சேர்ந்த ரைமண்ட் என்பவர், அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் கிளார்க்காகப் பணிபுரிகிறார். மது அருந்திவிட்டு வீட்டு முன்பு ரகளையில் ஈடுபட்ட அவரை, அதே பகுதியைச் சேர்ந்த ஜெனிபா தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ரைமண்ட், ஜெனிபா வீட்டில் நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்து,...

நித்திரவிளை: முன்னாள் காதலியை தாக்கிய வாலிபர் மீது வழக்கு

நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த ஜெர்சிலின் நிஜி (31) என்பவரை காஞ்சாம்புறம் பகுதியைச் சேர்ந்த ஷெரின் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், 3 லட்சம் ரூபாய் தரவில்லை என்றால் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை முகநூலில் வெளியிடுவதாக ஷெரின் மிரட்டியுள்ளார். பணம் தராததால், புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டு, நிஜியின் கணவருக்கும்...

கூட்டாலுமூடு: பாரதிய ஜனதா பூத் கமிட்டி மாநாடு

கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி பூத் கமிட்டி மாநாடு நேற்று கூட்டாலுமூட்டில் நடைபெற்றது. இதில் தொகுதி இணை அமைப்பாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் சுடர்சிங், மாவட்ட துணைதலைவர் மில்ற்றா செல்லத்துரை, மாவட்ட செயலாளர் ராதிகா முருகன், கன்னியாகுமாரி கிழக்கு மாவட்ட அரசு தொடர்பு பிரிவு...