Google search engine

குமரி: மீன் பிடி வலையில் சிக்கிய இறந்த திமிங்கலம்

நேற்று (9-ம் தேதி) மிடாலம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, சுமார் 15 அடி நீளமுள்ள இறந்த திமிங்கலம் வலையில் சிக்கியது. குளச்சல் கடலோர காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். தற்போதைய புயல் காரணமாக இலங்கை கடல் பகுதியிலிருந்து இறந்த நிலையில் திமிங்கலம்...

குமரி: முகநூலில் தந்தை மகளின் படத்துடன் ஆபாச பதிவு – வழக்கு

திருப்பரங்குன்றம் மலை கார்த்திகை தீபம் தொடர்பாக முகநூலில் நண்பரின் கருத்துக்கு பதிலளித்த பைங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், அதற்கு எதிர் கருத்தாக தனது மகளுடன் இருக்கும் படத்தை ஆபாசமாக வெளியிட்ட நபர் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சைபர் கிரைம் பரிந்துரையின் பேரில், குளச்சல்...

அருமனை: பஸ்ஸில் ஆசிரியையின் 9 பவுன் நகை பறிப்பு – வழக்கு

குழித்துறையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியை ரோசம்மாள் (74), நேற்று (9-ம் தேதி) பஸ்ஸில் ஏறியபோது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி அவரது 9 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. இது குறித்து அருமனை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை...

அஞ்சுகிராமம் தனியார் விடுதியில் போதை விருந்து: தம்பதி உட்பட 7 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே ஒரு தனியார் விடுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களைப் பயன்படுத்தி நடைபெற்ற விருந்து தொடர்பாக, விருந்து ஏற்பாடு செய்த குலசேகரமெ பகுதியைச் சேர்ந்த கோகுல் மற்றும் அவரது மனைவி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து உயர் ரக போதை...

களியக்காவிளை: வீட்டில் திருட முயன்ற கொள்ளையன் கைது

குழித்துறையைச் சேர்ந்த நாகேந்திரன் நாயர் (64) என்பவரின் வீட்டில் கடந்த 3ஆம் தேதி கதவை உடைத்து திருட முயன்ற சம்பவம் தொடர்பாக, கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த பாபு என்ற கல்யாணராமன் (57) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர். பீரோவில்...

நடைக்காவு: சோனியா பிறந்தநாள்; நலஉதவி வழங்கிய எம்எல்ஏ

நடைக்காவு பகுதியில் நேற்று நடைபெற்ற சோனியா காந்தியின் 79-வது பிறந்தநாள் விழாவில், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் 55 ஏழை நோயாளிகளுக்கு தலா ரூ. 5000 மருத்துவ நிதியுதவி வழங்கினார். மேலும், 15 ஏழை மாணவ மாணவிகளுக்கு ரூ. 3.60 லட்சம் கல்வி...

நாகர்கோவிலில் போக்குவரத்து மாற்றம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரட்டை ரயில் பாதை பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், நுள்ளிவிளை பகுதியில் உள்ள பழைய ரயில்வே மேம்பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைக்கும் பணி நாளை தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ரயில்வே துறை செய்து வருகிறது. இந்த பணிகளை ஒட்டி, திங்கள் சந்தை-நாகர்கோவில் சாலையில்...

நுள்ளிவிளை: ரயில்வே பாலம் பணி; போக்குவரத்து மாற்றம்

இரணியல், நுள்ளிவிளையில் ரயில்வே மேம்பாலப் பணி நடைபெற உள்ளதால், நாளை (10 ஆம் தேதி) முதல் திங்கள்நகரில் இருந்து நாகர்கோவிலுக்குச் செல்லும் வாகனங்கள் இரணியல் சந்திப்பில் இருந்து கல்குறிச்சி, தக்கலை வழியாகச் செல்ல வேண்டும். நாகர்கோவிலில் இருந்து வரும் கனரக வாகனங்கள் தக்கலை, இரணியல் வழியாக திங்கள்நகருக்குச்...

குமரி: பைக்கில் இளைஞர்கள் ஆபாச சைகை – மன்னிப்பு வீடியோ

மார்த்தாண்டம் மேம்பாலம் பகுதியில் இருசக்கர வாகனங்களில் சென்ற நான்கு இளைஞர்கள், அவ்வழியாகச் சென்றவர்களிடமும் பெண்களிடமும் ஆபாச சைகை செய்துள்ளனர். இதை இளைஞர் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டார். இந்த வீடியோ பரவலானதை அடுத்து, குமரி எஸ்.பி. ஸ்டாலின் விசாரணைக்கு உத்தரவிட்டார். மனோஜ் ராஜ் (23) மற்றும் ஆசிக்...

குமரி: அறநிலைய துறை ஊழியர் விபத்தில் உயிரிழப்பு

குழித்துறை தபால் நிலையம் சந்திப்பு பகுதியை சேர்ந்த 52 வயதான கோபகுமார், தமிழக இந்து அறநிலை துறையின் ஊழியராக குழித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார். கேரளாவில் உள்ள உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்றுவிட்டு திரும்பும் போது அமரவிளை பகுதியில் விபத்தில் சிக்கி, திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி...