அருமனை: பிளஸ் 1 மாணவர் மாயம் – போலீசில் புகார்
அருமனை, மாங்கோடு பகுதியைச் சேர்ந்த ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியின் 16 வயது மகன், பள்ளிப் படிப்பில் கவனம் செலுத்தாததால் தந்தை திட்டியதால் மனமுடைந்து வீட்டை விட்டுச் சென்றான். நேற்று முழுவதும் தேடியும் கிடைக்காததால், இன்று (18-ம் தேதி) தந்தை அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்....
கடையாலுமூடு: குவாரியில் எஸ்பி ஆய்வு – ஒருவர் கைது
கடையால் பேரூராட்சிக்குட்பட்ட கட்டச்சல் பகுதியில் தடை செய்யப்பட்ட குவாரியில் திருட்டுத்தனமாக பாறைகள் உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்பி ஸ்டாலின் குவாரியில் ஆய்வு மேற்கொண்டார். இதன் விளைவாக, குவாரியில் பணியில் இருந்த மேற்பார்வையாளர் ஸ்டாலின் (41), கடையாலுமூடு பேரூராட்சி அதிமுக கவுன்சிலர், கைது...
மார்த்தாண்டம்: பேருந்தை இயக்க மறுக்கும் போக்குவரத்து நிர்வாகம்
கடந்த 2 ஆண்டுகளாக முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்ட 86 ஒருநூறாம்வயல் - மார்த்தாண்டம் பேருந்து சேவையை மீண்டும் இயக்க அரசு போக்குவரத்து கழகம் மறுப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆறுகாணி, பத்துகாணி, அணைமுகம், ஒருநூறாம்வயல் பகுதி மக்கள் காலை 3.45 மணி முதல் 7.45 மணி வரை பேருந்து இன்றி...
விளவங்கோடு: 3 தடங்களில் அரசு பஸ்கள் – எம்எல்ஏ துவக்கினார்
விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட மேல்புறம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 20 ஆண்டுகளாக சாலைகள் சீரமைக்கப்படாததால் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது சாலைப் பணிகள் நிறைவடைந்த நிலையில், மேல்புறம் சந்திப்பிலிருந்து 3 வழித்தடங்களுக்கு பேருந்து சேவையை நேற்று தாரகை கத்பட் எம்எல்ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சி...
இரணியல்: பஸ்ஸில் பர்ஸ் திருடிய பெண்கள் கும்பல்
கருங்கலில் இருந்து அரசு பேருந்து ஒன்று நேற்று திங்கள்சந்தை பேருந்து நிலையம் வந்தபோது, அதில் இருந்த பெண்ணின் பர்ஸ் மாயமானது. பர்ஸில் 5 ஆயிரம் ரூபாய் மற்றும் ஏடிஎம் கார்டு இருந்தன. இதற்கிடையில், 3 பெண்கள் 2 குழந்தைகளுடன் பேருந்திலிருந்து இறங்கி தப்ப முயன்றபோது, பர்ஸ் மீட்கப்பட்டது....
நித்திரவிளை: பாறாங்கற்கள் திருடிய 6 பேர் மீது வழக்கு
நித்திரவிளை அருகே மங்காடு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் செல்வராஜின் நிலத்தில் கட்டுமானத்திற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த 2 லோடு பாறாங்கற்களை அஜின், புஷ்பம், சரத், சுதா, ஆஸ்டின் ரூபி, சபீனா ஆகியோர் திருடியதாக செல்வராஜின் மகன் அஸ்வின் குழித்துறை நீதிமன்றத்தில் புகார் அளித்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில்,...
குமரி: சென்டர் மீடியனில் லாரி மோதி போக்குவரத்து பாதிப்பு.
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் நேற்று இரவு சரக்கு ஏற்றி வந்த லாரி சாலையில் அமைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியன் கல் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் லாரி சேதமடைந்ததோடு, அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு...
குளச்சல்: ஆலயப்பணி சம்மந்தமாக மோதல்; 14 பேர் மீது வழக்கு
குளச்சல் அருகே வடக்கு கல்லுகூட்டத்தில் உள்ள புனித பாத்திமா அன்னை ஆலயம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஆலய கட்டுமானப் பணியை பன்னீர் கிங்ஸ்லி என்பவர் கடந்த 14ஆம் தேதி கேட்டபோது, ஜெரால்டு தலைமையிலான 14 பேர் கும்பல் அவரைத் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளது. காயமடைந்த...
திற்பரப்பு: நோய் பாதிப்பு; சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (17) அம்மை நோயால் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது பெற்றோர் அளித்த தகவலின் பேரில் குலசேகரம் போலீசார் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை...
குமரி: மத்திய நிதி அமைச்சகத்தின் மேம்பாட்டு பயிற்சி முகாம்
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நிதி உதவியுடன், குறுமத்தூர் புரடியூசர் கம்பெனியின் தொழில் முனைவோருக்கான இரண்டாம் கட்ட மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்று குழித்துறையில் தொடங்கியது. கேடர் இந்தியா நிர்வாக இயக்குனர் மோகன் குமார் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நாகர்கோவில் அலுவலக துணை...













