ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூத விடுமுறை கொண்டாட்டத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர். இந்தக் கொடூரமான துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் பாகிஸ்தானைச் சேர்ந்த தந்தையும், மகனும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. சிட்னியின் போண்டி கடற்கரையில் யூத மத பண்டிகையான ஹனுக்கா கொண்டாட்ட நிகழ்வின் போது நேற்று மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 16 பேர் கொல்லப்பட்டனர். ஆஸ்திரேலிய அதிகாரிகள் இதனை திட்டமிட்ட யூத எதிர்ப்புத்...
ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடியை, அந்நாட்டு பிரதமர் ஜாபர் ஹசன் விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார். ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கான அரசுமுறைப் பயணத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கினார். முதல் பயணமாக, இன்று ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்தார். இந்தியா - ஜோர்டான் இடையேயான நெருக்கமான உறவை பிரதிபலிக்கும் வகையில் அந்நாட்டு பிரதமர் ஜாபர் ஹசன், பிரதமர் மோடியை விமான நிலையத்துக்கே...
ஆஸ்​திரேலி​யா​வின் சிட்​னி​யில் தீவிர​வாத தாக்​குதலில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 16 ஆக அதி​கரித்​துள்​ளது. சிட்னி நகரின் போன்டி கடற்​கரை​யில் யூதர்​களின் வரு​டாந்​திர ஹனுக்கா திரு​விழா நேற்று முன்​தினம் தொடங்​கியது. மாலை​யில் பெண்​கள், குழந்​தைகள் என நூற்​றுக்​கணக்​கான யூதர்​கள் கூடி​யிருந்​தனர். அப்​போது இரு​வர் துப்​பாக்​கி​யால் சுட்டு கண்​மூடித்​தன​மாக தாக்​குதல் நடத்​தினர். இதில் ஒரு தீவிரவாதி உட்பட 11 பேர் இறந்தனர். ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். இந்நிலையில், மேலும் 4 பேர் நேற்று உயிரிழந்தனர். ​இதையடுத்து...
அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் தனது போக்கை மாற்​றிக்​கொள்​ளா​விட்​டால் இந்​தி​யா​வின் நடப்​புறவை இழக்க நேரிடும் என்று கலிபோர்​னி​யா​வைச் சேர்ந்த ஜனநாயக கட்சி எம்.பி.சிட்னி காம்​லாகர்-டோவ் எச்​சரிக்கை விடுத்​துள்​ளார். இதுகுறித்து அவர் கூறிய​தாவது: இந்​தி​யாவை நோக்​கிய அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் கொள்கை இரு​நாடு​களுக்கு இடையிலான நீடித்த நம்​பிக்கை மற்​றும் பரஸ்பர புரிதலுக்கு சேதத்தை ஏற்​படுத்​தும் விதத்​தில் அமைந்​துள்​ளது. இந்த விவகாரத்​தில் ட்ரம்ப் தனது கடின​மான போக்கை மாற்​றிக் கொள்ள வேண்​டும். அப்​படி மாற்​றிக்​கொள்​ளா​விட்​டால்...
பாகிஸ்​தான் விமானப் படை​யின் எப்16 ரக போர் விமானங்​களை மேம்​படுத்த அமெரிக்க அரசு ஒப்​புதல் வழங்கி உள்​ளது. பாகிஸ்​தான் விமானப் படை​யில் எப்16 ரகத்தை சேர்ந்த 76 போர் விமானங்​கள் உள்​ளன. இவை அமெரிக்க தயாரிப்பு போர் விமானங்​கள் ஆகும். கடந்த 1990-ம் ஆண்டு முதல் எப்16 போர் விமானங்​களுக்கு தேவை​யான உதிரி பாகங்​கள், தொழில்​நுட்​பங்​களை பாகிஸ்​தானுக்கு வழங்க அமெரிக்கா மறுத்து வந்​தது. இதன் ​காரண​மாக பாகிஸ்​தானின் பெரும்​பாலான எப்16...
2023-ஆம் ஆண்டுக்கான அமைதி நோபல் பரிசை வென்ற மனித உரிமைப் போராளி நர்கெஸ் முகமதியை, ஈரானிய பாதுகாப்புப் படையினர் இன்று கைது செய்தனர். அண்மையில் காலமான ஒரு வழக்கறிஞரின் நினைவேந்தல் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு நர்கெஸ் முகமதிசென்றபோது, இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரான் அதிகாரிகள் நர்கெஸ் முகமதியை பலவந்தமாகப் பிடித்துச் சென்றதாக அவருடைய ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. நர்கெஸ் முகமதி,...
குறைந்தபட்சம் 10 லட்சம் அமெரிக்க டாலர் கட்டணம் செலுத்தி விரைவாக விசா பெருவதற்கான கோல்டு கார்டு திட்டத்தை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிவைத்தார். அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் குடியேறுவதைக் கட்டுப்படுத்தவும், குடியுரிமை பெறுவதைக் கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை அதிபர் ட்ரம்ப் எடுத்து வருகிறார். இதனால், அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டினர் நாடு கடத்தப்பட்டனர். பல அமெரிக்க நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களும் வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில்,...
மியான்மரில் ராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், மருத்துவமனை மீது ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரகைன் மாகாணத்தின் மிராக்-யூ நகரில் உள்ள அரசு பொது மருத்துவமனையை குறிவைத்து, ஆளும் மியான்மர் ராணுவத்தின் போர் விமானம் புதன்கிழமை இரவு வான்வழி தாக்குதல் நடத்தியதாக மியான்மர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அராக்கன் படை எனப்படும் கிளர்ச்சி...
எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து பிரதமர் மோடி - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு முதலில் 25 சதவீத வரி விதித்தது. இதைத் தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றம் சாட்டி கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இந்திய பொருட்களுக்கு மேலும் 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக இந்திய பொருட்களுக்கு அமெரிக்க...
‘அவர்கள் குழந்தைகளாகவே இருக்கட்டும்’ (Let Them Be Kids) என்ற தலைப்பில் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஒரு மிகப் பெரிய பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு சர்வதேச கவனத்தை ஈர்த்தது. அதன் எதிரொலியாகத்தான் இப்போது, ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை செய்யும் சட்டம் அமலாகியுள்ளது. கடந்த ஆண்டு நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் 16 வயதுக்கு உட்பட்டோர் சமூக வலைதளப் பயன்படுத்துவதற்கான தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆஸ்திரேலியாவில்...