38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று மகளிருக்கான உயரம் தாண்டுதலில் ஹரியானாவின் பூஜா 1.84 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். தமிழகத்தின் கோபிகா (1.79) வெள்ளிப் பதக்கமும், கர்நாடகாவின் அபினயா ஷெட்டி (1.77) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
மகளிருக்கான 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழகத்தின் வித்யா ராம்ராஜ் பந்தய தூரத்தை 58.11 வினாடிகளில் கடந்து தங்கப்...
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 3-0 என முழுமையாக தொடரை வென்றது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 3 மாற்றங்கள் இருந்தது. முகமது ஷமி, குல்தீப் யாதவ்,...
பும்ரா இல்லாத சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாதிப்பை ‘பேலன்ஸ்’ செய்யுமா இந்திய அணி? – ஓர் அலசல்
admin - 0
வரும் 19-ம் தேதி தொடங்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஐஸ்பிரீத் பும்ரா பங்கேற்கமாட்டார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. இது, இந்த தொடரில் இந்திய அணியை இம்சிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி கலந்து...
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை 142 ரன்களில் வீழ்த்தியது இந்தியா. இதன் மூலம் தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து இந்தியா வென்றுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை 4-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும்...
1996 உலகக் கோப்பையை வென்ற இலங்கை அணி இப்போதைய இந்திய அணியை இந்திய மண்ணிலேயே காலி செய்து விடும் என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா கருத்து தெரிவித்துள்ளார்.
அதாவது தற்போதைய கிரிக்கெட் வீரர்களுக்கு திறமை போதாது என்றும் தனியார் டி20 கிரிக்கெட் லீகுகள் திறமைகளை அழித்து வருகிறது என்றும் கூறும்போது இப்போதைய இந்திய அணியை அவர் வம்புக்கு இழுத்துள்ளார்.
‘தி டெலிகிராப்’ ஊடக நிறுவனத்துக்கு அர்ஜுனா ரணதுங்கா...
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா பங்கேற்கமாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் 19-ம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி கலந்து கொள்ளும் ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளது. மினி உலகக் கோப்பை கிரிக்கெட் என அழைக்கப்படும் இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் கலந்து கொள்ளும் 15 பேர்...
38-வது தேசிய விளையாட்டு போட்டி உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான டிரிப்பிள் ஜம்ப்பில் தமிழகத்தின் பிரவீன் சித்திரவேல் 16.50 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். மற்றொரு தமிழக வீரரான முகமது சலாவுதீன் 16.01 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் பெற்றார். கேரளாவைச் சேர்ந்த முகமது முஹசின் 15.57 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
ஹெப்டத்லானில் தெலங்கானா வீராங்கனை...
கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று மோதல்: தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி
admin - 0
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியிலும், கட்டாக்கில் நடைபெற்ற 2-வது போட்டியிலும் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒருநாள் போட்டித் தொடரை 2-0 என...
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணியை இன்னிங்ஸ் மற்றும் 98 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது குஜராத் அணி.
ராஜ்கோட்டில் நடைபெற்று வந்த கால் இறுதி ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸில் சவுராஷ்டிரா 216 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதேவேளையில் குஜராத் அணி 511 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக உர்வில் பட்டேல் 140, ஜெய்மீட் பட்டேல் 103 ரன்கள் விளாசினர். 295 ரன்கள்...
மகளிர் பிரீமியர் கிரிக்கெட் (டபிள்யூபிஎல்) லீக் தொடரில் உ.பி.வாரியர்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3-வது டபிள்யூபிஎல் சீசன் போட்டிகள் வரும் 14-ம் தேதி முதல் தொடங்கவுள்ளன. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மோதவுள்ளன.
இந்நிலையில் இந்தத் தொடரில் பங்கேற்கும் உ.பி.வாரியர்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா...










