முதன் முதலாக பாகிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரை வென்று வரலாறு படைத்தது வங்கதேச அணி. 20 ஓவர்களில் 133 ரன்களை மட்டுமே எடுத்த வங்கதேசம் பிறகு பாகிஸ்தானை 125 ரன்களுக்கு மட்டுப்படுத்தி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்று கைப்பற்றி வரலாறு படைத்தது.
ஷெரே பங்ளா ஸ்டேடியம் நேற்று நிரம்பி வழிந்தது. 15/5லிருந்து பாகிஸ்தான் அணி எதிர்த்துப் போராடியது, ஃபாஹிம் அஷ்ரப் ஃபைட் பேக் அரைசதம் விளாச,...
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான நித்திஷ் குமார் ரெட்டி முழங்கால் காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-2 என பின்தங்கி உள்ளது. 4-வது டெஸ்ட் போட்டி நாளை (23-ம் தேதி) மான்செஸ்டர்...
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 2025 – 2026-ம் ஆண்டுக்கான 16 வயதுக்குட்பட்டோருக்கான வீரர்கள் தேர்வை வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி சென்னை சேப்பாக்கம் ‘பி’ கிரவுண்டில் நடத்த உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் 2009-ம் ஆண்டு செப்டம்பர் 1 அல்லது அதற்கு பிறகு மற்றும் 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 31 அன்று அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
இந்த தகுதியுடையவர்கள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் இணையதள...
4-வது மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் தொடர் சென்னை ஐசிஎஃப் உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வந்தது. இதன் ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் பாலமுருகன் (ஐடிடிசி) 8-11, 14-12, 11-6, 8-11, 11-3, 10-12, 11-8 என்ற செட் கணக்கில் கார்த்திக்கேயனையும் (எஸ்கேஅகாடமி), மகளிர் பிரிவில் யாஷினி (எஸ்கே அகாடமி) 11-9, 12-14, 11-9, 11-6, 11-2 என்ற செட் கணக்கில் அம்ருதாபுஷ்பக்கையும் (ஆர்பிஐ)தோற்கடித்து பட்டம் வென்றனர். யு-17...
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலிய அணி.
கிங்ஸ்டனில் உள்ள சபினா பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ராஸ்டன் சேஸ் 32 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன்...
ஃப்ரீஸ்டைல் கிராண்ட் ஸ்லாம் டூர் செஸ் தொடரின் 4-வது கட்ட போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் லெவன் அரோனியன் 1.5-0.5 என்ற கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த ஹான்ஸ் மோக் நீமனை தோற்கடித்து முதலிடம் பிடித்தார்.
3-வது இடத்துக்கான ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் 1.5-0.5 என்ற கணக்கில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுராவை தோற்கடித்தார். இந்தியாவின் அர்ஜுன்...
பாகிஸ்தான் உடனான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது வங்கதேசம். வேகப்பந்து வீச்சாளர்கள் டஸ்கின் அகமது மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் அபாரமாக பந்து வீசி வங்கதேச அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை அன்று டாக்காவில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற...
2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் 20 ஓவர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய வீரர்கள் விலகியதால் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெறஇருந்த போட்டி ரத்தானது.
ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் 20 ஓவர் லீக் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவு, தென் ஆப்பிரிக்கா ஆகிய...
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணியில் 2 வீரர்கள் காயமடைந்துள்ளதால் வேகப்பந்து வீச்சாளர் அன்ஷுல் காம்போஜ் இணையவுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில்...
சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் 2014-ம் ஆண்டு வரை நடைபெற்றது.
கிரிக்கெட் ரசிகர்களின் போதிய ஆதரவின்மை, ஸ்பான்சர்ஷிப் ஆகிய பிரச்சினைகள் காரணமாக 2015-ம் ஆண்டு இந்த தொடரை நிறுத்துவதாக ஐசிசி அறிவித்தது. இந்நிலையில் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரை மீண்டும் நடத்த ஐசிசி அனுமதி...










