ஒருநாள் கிரிக்கெட் போட்டி, சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணியினர் நேற்று ஆஸ்திரலியாவுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளிலும், 5 சர்வதேச டி20 போட்டிகளிலும் பங்கேற்கிறது. முதலில் ஒருநாள் போட்டிகளும், அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன.
வரும் 19-ம் தேதி ஒருநாள் போட்டித் தொடர் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர்கள் நேற்று டெல்லி...
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய மகளிர் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
13-வது மகளிர் உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கடந்த 12-ம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, இந்திய அணியை வென்றது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தின்போது பந்துவீச இந்திய அணி கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. இந்த புகாரின் அடிப்படையில் இந்திய அணிக்கு போட்டி...
தமிழக அணிக்கெதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் எலைட் பிரிவு ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷன் அபாரமாக விளையாடி சதம் விளாசினார்.
ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் எலைட் பிரிவு ஆட்டங்கள் நேற்று நாடு முழுவதும் தொடங்கின. தமிழ்நாடு, ஜார்க்கண்ட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோவை ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
டாஸில் ஜார்க்கண்ட் அணி வென்று முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்கார்களாக ஷிகர் மோகன், சரண்தீப்...
மே.இ தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா: ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ், தொடர் நாயகன் ஜடேஜா
admin - 0
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது.
டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று இந்த 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 518 ரன்கள் குவித்து டிக்ளேர்...
பிராயா: 2026-ம் ஆண்டு பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டிகள் மூலம் தேர்வு செய்யப்படும். இந்நிலையில் ஆப்பிரிக்க மண்டல பிரிவில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் கேப் வெர்டே அணியும், எஸ்வாட்டினி அணியும் மோதின.
இதில் கேப் வெர்டே 3-0 என்ற கணக்கில் எஸ்வாட்டினி...
லாகூர்: பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 378 ரன்கள் குவித்தது.
இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 67 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. டோனி டி ஸோர்ஸி 81 ரன்களும், செனுரன் முத்துசாமி 6 ரன்களும் சேர்த்து களத்தில்...
வேல்ஸ் - பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று போட்டியின் போது மைதானத்துக்குள் எலி நுழைந்ததால் ஆட்டம் சிறிது நேரம் தாமதமானது.
வேல்ஸ் நாட்டின் கார்டிப் நகரில் நேற்று பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் வேல்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதின. பெல்ஜியம் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்த போது திடீரென கோல் கீப்பர் திபோ கோர்டோயிஸ்...
ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 13 முதல் 15-ம் தேதிக்குள் நடைபெறக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. வீரர்கள் ஏலம் தொடர்பாக அணிகளின் உரிமையாளர்கள் பிசிசிஐ நிர்வாகிகளிடம் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஐபிஎல் ஆட்சிமன்றக்குழு இதுதொடர்பாக இதுவரை எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மேலும் இம்முறை ஏலம் வெளிநாட்டில் நடைபெறுமா? என்பதும் தெரியவில்லை. கடந்த இரு ஆண்டுகளாக ஐபிஎல் வீரர்கள் ஏலம் வெளிநாடுகளில்தான் நடத்தப்பட்டு வருகிறது....
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 173*, சாய் சுதர்சன் 87 ரன் விளாசல்: முதல் நாளில் இந்திய அணி 318 ரன் குவிப்பு
admin - 0
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 318 ரன்கள் குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய சாய் சுதர்சன் அரை சதம் அடித்தார்.
டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான ஷுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு...
கிரிக்கெட்டில் சில சமயம் எல்பிடபிள்யூ விஷயத்தில் களத்தில் இருந்த நடுவர் ஏற்கெனவே முடிவு எடுத்திருப்பார். ஆனால் டிஆர்எஸ் முறையில் வேறு மாதிரியான முடிவு வருவது போன்று தெரிந்தாலும் போதுமான ஆதாரங்களுடன் நடுவர் எடுத்த முடிவு தவறு என நிரூபிக்க முடியாத சூழ்நிலை வந்தால் அது அம்பர்யர்ஸ் கால் என்ற முடிவுக்கு வருவார்கள்.
களத்தில் உள்ள நடுவர் எடுத்த முடிவை டிஆர்எஸ் முறையில் மாற்ற வேண்டுமென்றால் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய...










