Google search engine
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக் திருமணம் மும்பையின் இன்று (மார்ச் 5) நடைபெற்றது. இதில் சச்சின் குடும்பத்தினருடன் விளையாட்டு, தொழில் துறையினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரைத் துறையை சேர்ந்த பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். மும்பையின் தெற்கு பகுதியில் பிரத்யேக நிகழ்வாக இந்த திருமண விழா நடைபெற்றது. இதில் சச்சின் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். கடந்த...
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு 254 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் சஞ்சு சாம்சன், இங்கிலாந்து பவுலர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். அவர் கொடுத்த சிறப்பான தொடக்கத்தை மற்ற இந்திய வீரர்கள் பயன்படுத்தி ரன் குவித்தனர். மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து...
ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் 2-வது அரை இறுதி ஆட்​டத்​தில் நேற்று மும்பை வான்​கடே மைதானத்​தில் நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி, இங்​கிலாந்​துடன் பலப்​பரீட்சை நடத்​தி​யது. டாஸ் வென்ற இங்​கிலாந்து அணி​யின் கேப்​டன் ஹாரி புரூக் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். பேட்​டிங்கை தொடங்​கிய இந்​திய அணிக்கு சஞ்சு சாம்​சன் அதிரடி தொடக்​கம் கொடுத்​தார். ஜோப்ரா ஆர்ச்​சர் வீசிய முதல் ஓவரில் சஞ்சு சாம்​சன் மிட் ஆன் திசை​யில்...
மும்பையில் நேற்று நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் வீசப்பட்ட 40 ஓவர்களில் 499 ரன்கள் குவிக்கப்பட்டன. இத்தகைய மட்டரகமான மட்டைப் பிட்சில் பும்ரா நிகழ்த்தியது உண்மையில் மிகப்பெரிய அற்புதம் என்றுதான் கூற வேண்டும். அதே போல் அக்சர் படேலின் 2 ‘மேட்ச் டர்னிங்’ கேட்ச்களும் இந்திய வெற்றியில் மிக மிக முக்கியமானவை. சஞ்சு சாம்சன் இன்னிங்ஸ் பற்றி சொல்வதற்கில்லை, இனி அவர் அப்படித்தான் ஆடுவார். ஆடப்போகிறார்......
சென்னை கால்பந்து சங்​கம் சார்​பில் சீனியர் டிவிஷன் லீக் 2025-26 போட்​டிகள் இன்று (5-ம் தேதி) செனாய் நகரில் உள்ள பாவேந்​தர் பார​தி​தாசன் கால்​பந்து மைதானத்​தில் தொடங்​கு​கிறது. இதில் தளபதி ஸ்டா​லின் எஃப்​சி, வரு​மான வரித்​துறை ஆர்சி, மத்​திய கலால் துறை, ஆக்​டோபஸ் மரைன், ஐசிஎஃப், சென்னை நகர காவல்​துறை, இந்​தி​யன் வங்கி எஸ்​&ஆர்​சி, டிபிஒய்சி கீழ்ப்​பாக்​கம், சென்னை சுங்​கவரித்துறை, தமிழக காவல்​துறை,தாவூத் மெமோரியல் எஃப்​சி, ஏஜிஓஆர்சி ஆகிய 12...
இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் கேப்​டனும் சிஎஸ்கே அணி​யின் சீனியர் நட்​சத்​திர​மு​மான எம்.எஸ்​.தோனியின் வீடு ஜார்க்​கண்ட் மாநிலம் ராஞ்​சி​யில் உள்ள சிமாலியா பகு​தி​யில் அமைந்​துள்​ளது. சமீபத்​தில் தோனி தனது வீட்​டின் அருகே அனு​ம​திக்​கப்​பட்ட வேகத்தை​விட கூடு​தல் வேகத்​தில் காரை ஓட்​டிச் சென்​றது காவல்​துறை​யின் தானி​யங்கி கேம​ரா​வில் பதிவாகி​யுள்​ளது. இதனைத் தொடர்ந்​து, மோட்​டார் வாக​னச் சட்​டத்​தின் பிரிவு 183-ன் கீழ், தோனிக்கு ரூ.1,000 அபராதம் விதிக்​கப்​பட்​டிருப்​ப​தாக ராஞ்சி போக்​கு​வரத்து காவல் துறை​யினர் தெரி​வித்​துள்​ளனர். தோனி...
சென்​னையை அடுத்த கவரப்​பேட்​டை​யில் உள்ள ஆர்எம்கே பொறி​யியல் கல்​லூரி​யில் மண்டல அளவி​லான பொறியியல் கல்​லூரி​களுக்கு இடையி​லான மஞ்​சுளா முனிரத்​தினம் நினைவு கோப்​பைக்​கான கிரிக்கெட் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் நேற்று நடை​பெற்ற கால் இறுதி ஆட்​டம் ஒன்​றில் ஆர்​எம்கே - வேலம்​மாள் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த வேலம்​மாள் கல்​லூரி அணி 19.5 ஓவர்​களில் 117 ரன்களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக மிதுன் 48, ரோஹித் 44 ரன்​கள் சேர்த்​தனர்....
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் முதல் அரை இறுதி ஆட்​டத்​தில் நேற்று தென் ஆப்​பிரிக்கா - நியூஸிலாந்து அணி​கள் கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் மோதின. முதலில் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 20 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்புக்கு 169 ரன்​கள் எடுத்​தது. அந்த அணி ஒரு கட்​டத்​தில் 10.2 ஓவர்​களில் 77 ரன்​களுக்கு 5 விக்​கெட்​களை இழந்து தவித்​தது. குயிண்​டன் டி காக்...
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரின் 2-வது அரை இறுதி ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான இந்​திய அணி, முன்​னாள் சாம்​பிய​னான இங்​கிலாந்​துடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்​டம் இரவு 7 மணிக்கு மும்பை வான்​கடே மைதானத்​தில் நடை​பெறுகிறது. சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான நடப்பு சாம்பியனான இந்​திய அணி லீக் சுற்​றில் அனைத்து ஆட்டங்​களி​லும் வெற்றி கண்ட நிலை​யில் சூப்​பர் 8 சுற்​றில் தென் ஆப்​பிரிக்​கா​விடம் அதிர்ச்சி தோல்வி கண்​டிருந்​தது....
உலக பீச் வாலிபால் போட்டி ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஷ்வரில் இன்று முதல் ​(​மார்ச் 4) வரும் 8-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளது. ஒடிசா மாநிலத்​தி​லுள்ள கேஐஐடி பல்​கலைக்​கழகம் இந்​தப் போட்​டிக்கு ஏற்​பாடு செய்​துள்​ளது. ஆடவர், மகளிர் என இரு பிரி​விலும் போட்​டிகள் நடை​பெறவுள்​ளன. இரு பிரிவிலும் சேர்த்து 52 நாடு​களைச் சேர்ந்த 82 அணி​கள் இந்தப் போட்​டி​யில் பங்​கேற்​க​வுள்​ளன. லீக் மற்​றும் நாக்​-அவுட் அடிப்​படை​யில் போட்​டிகள் நடைபெறும். கேஐஐடி பல்​கலைக்​கழக...