ஐபிஎல் தொடர் வரும் 28-ம் தேதி தொடங்குகிறது. இதில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே தனது முதல் ஆட்டத்தில் 30-ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோத உள்ளது.
இந்நிலையில் சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான நேதன் எல்லிஸ், தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த சீசனில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி இன்னும்...
அதிரடிக்கும், நிதானத்துக்கும் இடையிலான சமநிலையை அபிஷேக் சர்மா கண்டறிய அனில் கும்ப்ளே அறிவுரை
admin - 0
அதிரடி தொடக்க பேட்ஸ்மேனான அபிஷேக் சர்மா, தனது ஆக்ரோஷமான ஆட்டத்துக்கும், களத்தில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடுவதற்கும் இடையிலான சரியான சமநிலையைக் கண்டறிய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் பயிற்சியாளருமான அனில் கும்ப்ளே அறிவுரை கூறியுள்ளார்.
இந்திய டி20 கிரிக்கெட் அணியில் 25 வயதான அபிஷேக் சர்மா சமீப காலங்களில் டாப் ஆர்டர் வரிசையில் மிகவும் அதிரடியான பேட்டர்களில் ஒருவராகத் திகழ்கிறார். அதிக ஆபத்து நிறைந்த...
“ரோஹித், கோலியை போன்று சஞ்சு சாம்சனுக்கு மாற்று வீரர் இல்லை” – ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் மனம் திறப்பு
admin - 0
சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குச் சென்றதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது, டி20 உலகக் கோப்பை நாயகனான சஞ்சுவுக்குப் பதிலாக ஒரு வீரரைக் கண்டறிவது என்பது, இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்களுக்குப் பதிலாக மாற்று வீரர்களைத் தேடுவது எவ்வளவு கடினமானதோ, அதே அளவு சாத்தியமற்றது என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கடந்த...
வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ்.தோனி முன்வரிசையில் களமிறங்குவது சிறப்பாக இருக்கும் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏ.பி. டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஜியோ ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் டிவில்லியர்ஸ் கூறியதாவது: வரும் 28-ம் தேதி தொடங்கும் 2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகவும் சிறப்பான முறையில் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஐபிஎல் போட்டி தொடங்கியது முதல் சென்னை...
வரும் 28-ம் தேதி ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசன் தொடங்க உள்ளது. இந்தச் சூழலில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் இடைக்கால கேப்டனாக இஷான் கிஷன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ், காயம் காரணமாக சர்வதேச அளவிலான கிரிக்கெட்டில் விளையாடாமல் ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில், இந்த சீசனின் தொடக்கத்தில் சில போட்டிகளை அவர் தவறவிடக்கூடும் சூழல் நிலவுகிறது. காயம் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடரில் அவர்...
எப்ஐஹெச் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 14 முதல் 30-ம் தேதி வரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெறுகிறது. இதில் ஆடவர் பிரிவில் 16 அணிகளும், மகளிர் பிரிவில் 16 அணிகளும் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதுகின்றன. இந்நிலையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தொடரில் கலந்து கொள்ளும் 16 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன....
டி20 உலகக் கோப்பை தேர்வின்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் பாபர் அஸாம், ஃபகர் ஸமான் உடற்தகுதியின்றி இருந்ததாக சந்தேகம் எழுந்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்றது. இதில் இந்தியா சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டது. பாகிஸ்தான் அணி,...
ஐபிஎல் தொடரில் ஈடன் கார்டன் மைதானத்தை வருண், நரேனுக்கு சாதகமாக மாற்றவேண்டும்: டு பிளெஸ்ஸிஸ்
admin - 0
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் திருவிழா வரும் 28-ம் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இதில் 3 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 29-ம் தேதி 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் ஜியோஸ்டார் சார்பில் நடைபெற்ற ‘கேம் பிளான்’ நிகழ்ச்சியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடர்பாக தென் ஆப்பிரிக்க...
இந்திய கிரிக்கெட் அணி வீரர் திலக் வர்மாக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பாராட்டு தெரிவித்தார்.
கடந்த 8-ம் தேதி நடைபெற்ற ஐசிசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்தப் போட்டியில், திலக் வர்மா மிகச்சிறப்பாக விளையாடி ரன்களைக் குவித்தார். அண்மையில் அவர் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்துக்குத் திரும்பினார்.
இந்நிலையில் கோப்பையை வென்ற அணியில் இடம்பிடித்த இந்திய வீரர் திலக் வர்மாவை, தெலங்கானா முதல்வர்...
சென்னை கால்பந்து சங்கம் சார்பில் சீனியர் டிவிஷன் லீக் 2025-26 போட்டி செனாய் நகரில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் கால்பந்து மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தமிழக காவல்துறை, டிபிஒய்சி கீழ்ப்பாக்கம் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் தமிழக காவல்துறை அணி 1-0 என்ற கோல் கணக்கில் டிபிஒய்சி கீழ்ப்பாக்கம் அணியை வீழ்த்தியது. தமிழக காவல்துறை அணியின் வீரர் விஜயன் 4-வது நிமிடத்தில் ஒரு கோலடித்து...










