ஐபிஎல் தொடரில் நேற்று பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), 5 முறை சாம்பியனான சிஎஸ்கேவுடன் மோதியது. டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதனால் ஆர்சிபி முதலில் பேட் செய்தது. முதல் ஓவரின் 4-வது பந்தில் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ரன் அவுட் ஆவதில் இருந்து தப்பித்த விராட் கோலி 7...
“நான் மெஷின் அல்ல. எனது கிரிக்கெட் சீசன் சார்ந்த செயல்பாட்டில் ஏற்றம், இறக்கம் இருக்கும்” என எல்எஸ்ஜி அணியின் பந்து வீச்சாளர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகள் விளையாடின. இதில் எல்எஸ்ஜி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை ஷமி வென்றார். 4 ஓவர்கள் வீசி 9 ரன்கள்...
ஞாயிற்றுக்கிழமை அன்று சிஎஸ்கே அணியை 43 ரன்களில் வீழ்த்தியது ஆர்சிபி. இந்த தோல்விக்கு தானே காரணம் என பொறுப்பேற்றுள்ளார் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.
நடப்பு ஐபிஎல் சாம்பியனான ஆர்சிபி உடன் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் சிஎஸ்கே விளையாடியது. 251 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே, 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது இந்த சீசனில் அந்த அணிக்கு ஹாட்ரிக் தோல்வியாக அமைந்தது. கேப்டனாக ருதுராஜ்...
பணம் பெற்றுக்கொண்டு கேரளாவுக்கு வந்து விளையாடாமல் அர்ஜெண்டினா கால்பந்து அணி ஏமாற்றிவிட்டதாக கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் வி.அப்துரஹிமான் தெரிவித்துள்ளார்.
அர்ஜெண்டினா கால்பந்து அணியும் நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸியும் கடந்த மார்ச் மாதம் கேரளாவுக்கு வருகை தருவார்கள் என கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துரஹிமான் கடந்த 2025-ம் ஆண்டு நவம்பர் மாதம் தெரிவித்திருந்தார். ஆனால் திட்டமிட்டபடி அர்ஜெண்டினா அணி கடந்த மாதம் கேரளா வருகை தரவில்லை.
இந்நிலையில் அப்துரஹிமான் நேற்று தொலைக்காட்சி...
சைப்ரஸ் நாட்டில் உள்ள பாஃபோஸ் நகரில் கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் 4-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் மத்தியாஸ் ப்ளூபாமுடன் மோதினார். இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 37-வது நகர்த்தலின் போது டிரா செய்தார்.
உஸ்பெகிஸ்தானின் ஜவோகிர் சிந்தாரோவ், அமெரிக்காவின் ஃபேபியானோ கருனாவுடன் மோதினார். இதில் 36-வது நகர்த்தலின் போது ஜவோகிர் சிந்தாரோவ் வெற்றி பெற்றார். இன்னும் 10 சுற்றுகள் உள்ள...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக நீதிமன்ற அனுமதியை இலங்கை வீரர் நுவான் துஷாரா நாடியுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் நுவான் துஷாரா. இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் விளையாட ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் துஷாரா. ஆனால், அவர் உடற்தகுதித் தேர்வில் தோல்வி அடைந்ததால் அவருக்கு ஆட்சேபம் இல்லாத சான்றிதழ் (என்ஓசி) வழங்கப்படவில்லை.
இந்த சான்றிதழ் இருந்தால்தான் அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க...
நடப்பு ஐபிஎல் சீசனில் லக்னோ அணி விளையாடிய முதல் லீக் ஆட்டத்தில் தோல்வியடைந்த பின்னர் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா இடையிலான கள உரையாடல் சமூக வலைதளத்தில் வைரலானது.
நடப்பு சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த நிலையில்...
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி தனது முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. டாப் ஆர்டர் பேட்டிங்கில் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறினர். நடுவரிசையில்...
ரபாடா கடந்த 3 ஐபிஎல் சீசன்களாகவே சரியாக வீசுவதில்லை, அவரது சிக்கன விகிதமும் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது. நேற்று பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 3 ஓவர்களில் 34 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரேயொரு விக்கெட்டைக் கைப்பற்றினார். கிட்டத்தட்ட ஓவருக்கு 12 ரன்கள் என்ற சிக்கன விகிதம் ரபாடா போன்ற திறமையான பவுலர்களுக்கானதல்ல. அவர் செய்யும் தவறு என்ன?
ரபாடா கடந்த காலத்தில் ஐபிஎலில் தனது தாக்கத்தை வெளிப்படுத்திய முன்னணி...
நடப்பு ஐபிஎல் சீசனின் 5-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி.
லக்னோவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதல் பந்து வீசியது. 18.4 ஓவர்களில் 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது லக்னோ. அந்த அணிக்காக அப்துல் சமாத் 36 மற்றும் மிட்செல் மார்ஷ் 35 ரன்கள் எடுத்தனர். டெல்லி தரப்பில் நடராஜன் மற்றும்...










