டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர் ஜஸ்பிரீத் பும்ரா 2 இடங்கள் முன்னேறி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பெர்த் டெஸ்ட் போட்டியில் பும்ரா இரு இன்னிங்ஸையும் சேர்த்து கூட்டாக 8 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் அவர், தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னர் தரவரிசையில் பும்ரா 3-வது இடத்தில் இருந்தார். தற்போது 883...
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி வரும் 6-ம் தேதி அடிலெய்டு நகரில் தொடங்குகிறது. இந்த...
சைம் அயூப் 62 பந்துகளில் 113 ரன்கள் விளாசல்: ஜிம்பாப்வே அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாக்.
admin - 0
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சைம் அயூப்பின் அதிரடி சதத்தால் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி.
புலவாயோ நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 32.3 ஓவர்களில் 145 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக டியோன் மேயர்ஸ் 33, சீயன் வில்லியம்ஸ் 31, கேப்டன் கிரெய்க் எர்வின் 18, சிகந்தர் ராஸா 17 ரன்கள் எடுத்தனர்....
நியூஸிலாந்து – இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கு ஜாம்பவான்களின் மட்டைகளால் செய்யப்பட்ட டிராபி
admin - 0
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் கிறைஸ்ட்சர்ச் நகரில் நாளை (28-ம் தேதி) தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 5 சானல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
இந்த டெஸ்ட் தொடருக்கு குரோவ்-தோர்ப் டிராபி என பெயரிடப்பட்டுள்ளது. மறைந்த நியூஸிலாந்து கிரிக்கெட்...
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரின் ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை, இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயதான டி.குகேஷ் எதிர்த்து விளையாடி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் முதல் சுற்றில் டிங் லிரென் வெற்றி பெற்றிருந்தார்.
இந்நிலையில், இன்று 2-வது சுற்றில் இருவரும் மோதினார்கள். இதில் குகேஷ் கருப்பு காய்களுடனும், டிங்...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
பெர்த் நகரில் உள்ள ஆப்டஸ் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களும், ஆஸ்திரேலியா 104 ரன்களும் எடுத்தன. 46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 487 ரன்கள் குவித்து டிக்ளேர்...
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரின் ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் நேற்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை, இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயதான டி.குகேஷ் எதிர்த்து விளையாடினார். முதல் சுற்றில் குகேஷ் வெள்ளை காய்களுடனும், டிங் லிரென் கருப்பு காய்களுடனும் விளையாடினார்கள்.
இதில் 42-வது காய் நகர்த்தலின் போது டிங் லிரென் வெற்றி பெற்றார். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய...
பெர்த் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியோடு நிறைவு செய்தது. ஆஸ்திரேலியாவுக்கு இது உண்மையில் மிகப்பெரிய தோல்வி. அந்த அணி இதிலிருந்து மீள்வது கடினம். ஆனால், அணியை பேட்டர்கள், பவுலர்கள் என்று ஜோஷ் ஹேசில்வுட் பேசியிருப்பது கடும் அதிருப்தி அலைகளை உருவாக்கியுள்ளது.
3-ம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 12 ரன்கள் என்று மடிந்ததையடுத்து ஜோஷ் ஹேசில்வுட் பேட்டியளித்த போது...
உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி சுற்றுப் போட்டி இன்று முதல் (நவம்பர் 25) டிசம்பர் 13-ம் தேதி வரை சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த கிராண்ட்மாஸ்டரான டி. குகேஷ், நடப்பு உலக சாம்பியனும், சீன வீரருமான டிங் லிரெனை எதிர்கொண்டு விளையாடவுள்ளார்.
இந்தப் போட்டி சிங்கப்பூரின் ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் நடைபெற உள்ளது.
உலக கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பட்டம் வென்றதன் மூலமாக டி....
சவுதி அரேபியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் மெகா ஏலத்தில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனை ரூ.10.75 கோடிக்கு வாங்கியது டெல்லி கேபிடல்ஸ் அணி.
33 வயதான நடராஜன், கடந்த 2017 முதல் ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். முதல் சீசனை பஞ்சாப் கிங்ஸ் (அப்போது ‘கிங்ஸ் லெவன் பஞ்சாப்’) அணிக்காக விளையாடினார். 2018 முதல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடி வருகிறார். யார்க்கர்கள் வீசுவதில் வல்லவர்.
மெகா ஏலத்துக்கு...










