Google search engine
பொங்கல் பண்டிகையையொட்டி, வரைவு வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜன.28-ம் தேதி வரை நீட்டிப்பு செய்ய, தலைமை தேர்தல் அதிகாரியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டு பணிகளை செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஜன.18-ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது. இதை நீட்டிக்கக் கோரி, சென்னை தலைமைச் செயலகத்துக்கு...
“அரசியலில் இருந்து ஒதுக்கப்பட்ட முதியவர்களின் முகாம் ஆகிறதா தவெக?” புலனாய்வு பத்திரிகை ஒன்றில் வாசகர் ஒருவர் இப்படியான கேள்வி ஒன்றைக் கேட்டிருந்தார். உண்மையில் தவெக-வை கட்டமைக்க விஜய்க்கு துணையாக வந்தவர்கள் இப்படியான முகாமைத்தான் இப்போது அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். விசிக-விலிருந்து ஆதவ் அர்ஜுனா விஜய் கட்சிக்கு வந்தபோது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஏனென்றால், மிகக் குறுகிய காலத்திலேயே விசிக-வுக்கு வித்தியாசமான முகத்தைக் கொடுத்தவர் ஆதவ். ஆனால், விசிக-வில் இருந்த விசாலமான சுதந்திரம்...
தேர்தலில் சீட் பிடிக்க பலரும் பலவிதமான உத்திகளை கையில் எடுப்பார்கள். நாமக்கல் அதிமுக-வில், சீட் பிடிப்பதற்காக வாரம் தோறும் கட்சியினருக்கு கறி விருந்து ‘கவனிப்பு’களை நடத்தியும் யார் கேட்டாலும் கோயிலுக்கு நன்கொடைகளை வாரி வழங்கியும் இரண்டு பேர் பணத்தை இறைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 தொகுதிகளுக்கும் சேர்த்து அதிமுக-வில் விருப்ப மனு அளித்த 151 பேர் நேர்காணலில் பங்கேற்றார்கள். இதில், நாமக்கல் தொகுதிக்கு மட்டும் 27...
காணும் பொங்கல் பாது​காப்​புப் பணி​யில் சென்​னை​யில் 16 ஆயிரம் போலீ​ஸார் ஈடுபட உள்​ளனர். குழந்​தைகள் காணா​மல் போவதைத் தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளதோடு, மெரி​னா​வில் குளிக்​க​வும் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. பொங்கல் பண்​டிகை​யின் ஒரு பகு​தி​யாக காணும் பொங்கல் வரும் 17-ம் தேதி (சனிக்​கிழமை) கொண்​டாடப்​படுகிறது. அன்​றைய தினம் பொது​மக்​கள் கடற்​கரை, பூங்கா உட்பட பொழுது​போக்கு மையங்​களுக்கு செல்​வது வழக்​கம். மக்​கள் அதி​கள​வில் கூடும் இடங்​களில் எவ்​வித அசம்​பா​வித​மும் நிகழாமல் இருக்க காவல்...
சம வேலைக்கு சம ஊதி​யம் வழங்க வலி​யுறுத்தி சென்​னை​யில் நேற்று 18-வது நாளாக போராட்​டத்​தில் ஈடு​பட்ட 1,000-க்​கும் மேற்​பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்​யப்​பட்​டனர். தமிழகத்​தில் கடந்த 2009 ஜூன் 1-ம் தேதிக்கு முன்பு பணி​யில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்​களுக்​கும், அதன் பின்​னர் பணி​யில் சேர்ந்​தவர்​களுக்​கும் அடிப்​படை ஊதி​யத்​தில் பெரிய அளவில் வேறு​பாடு உள்​ளது. இதனால் பாதிக்​கப்​பட்​டுள்ள 20 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ஆசிரியர்கள் ஊதிய முரண்​பாட்டை சரிசெய்​யக் கோரி நீண்ட...
சென்னை உள்​ளிட்ட வட மாவட்​டங்​களில் நில​வும் கடும் குளி​ரால் மக்கள் பாதிப்​புக்​கு உள்ளாகினர். இயல்​புக்கு மாறான வானிலை காரண​மாக கடும் குளிர் நில​வுவ​தாக இந்​திய வானிலை ஆய்வு மையத்​தின் தென் மண்டல தலை​வர் பி.அ​முதா தெரி​வித்​துள்​ளார். கடந்த சில தினங்​களாக சென்​னை, வேலூர், திருப்​பத்​தூர் உள்​ளிட்ட வட மாவட்​டங்​களில் கடும் குளிர் நிலவி வரு​கிறது. பொதுமக்கள் ஸ்வெட்​டர், மஃப்​ளர் சகித​மாக காலை, மாலை வேளை​களில் வலம் வரு​கின்​றனர். விடு​முறை தினத்​தில்​கூட குழந்​தைகள்...
தமிழகத்​தில் பொங்​கல் பண்​டிகையை கொண்​டாட சென்னை போன்ற பெரு நகரங்​களில் வசிப்​பவர்கள் தங்​கள் சொந்த ஊர்​களுக்கு செல்​வது வழக்​கம். இதற்​காக ஆண்​டு​தோறும் தமிழக அரசு சார்​பில் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும். அந்த வகை​யில் கடந்த 9-ம் தேதி​ முதல் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன. அரசுப் பேருந்​துகளில் இடம் கிடைக்​காதவர்​கள் ஆம்னி பேருந்​துகளை தேர்வு செய்​வார்​கள். இந்த சூழ்​நிலையை பயன்​படுத்தி சில ஆம்னி பேருந்துகளில் அதிக கட்​ட​ணம் வசூலிக்​கின்​றனர். சென்​னை​யிலிருந்து மதுரை, கோவை,...
நம்​முடைய மொழியை​யும், கலாச்​சா​ரத்​தை​யும், பண்​பாட்​டை​யும் மறந்​து​விடக் கூடாது என்று அயல​கத் தமிழர்​களை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கேட்​டுக் கொண்​டார். அயல​கத் தமிழர் நலன் மற்​றும் மறு​வாழ்​வுத் துறை சார்​பில் “தமிழால் இணைவோம் - தரணி​யில் உயர்​வோம்” என்ற தலைப்​பில் 2 நாள் நடை​பெறும் அயல​கத் தமிழர் தினம்​-2026 விழா சென்​னை​யில் நேற்று தொடங்​கியது. இணை​ய​வழி​யில் நடத்​திய பேச்​சு, ஒப்​பு​வித்​தல், மாறு​வேடம், கதை சொல்​லுதல் போட்​டிகளில் வெற்​றி ​பெற்ற 15 பேருக்கு...
பொங்கல் சிறப்பு பேருந்​துகளில் இரண்டு நாட்​களில் 2.47 லட்​சம் பேர் பயணம் செய்​துள்​ள​தாக போக்​கு​வரத்து துறை தெரி​வித்​துள்​ளது. பொங்கல் பண்​டிகையை கொண்​டாட சொந்த ஊர்​களுக்​குச் செல்​லும் மக்​களுக்​காக ஆண்​டு​தோறும் தமிழக அரசு சார்​பில் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​படும். 2,092 பேருந்​துகள் இயக்​கம்: அந்த வகை​யில் கடந்த ஜன.9-ம் தேதி முதல் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்​பட்டு வரு​கிறது. சென்​னை​யில் இருந்து தின​மும் 2,092 பேருந்​துகள் இயக்​கப்​படும் நிலை​யில், கடந்த 9-ம் தேதி கூடு​தலாக...
அரசு மருத்​து​வர்​களின் கோரிக்​கைகளை நிறைவேற்​றாமல் தமிழக அரசு இரட்டை வேடம் போடு​வ​தாக​ பாஜக கண்​டனம் தெரி​வித்​துள்​ளது. பாஜக மாநில துணைத் தலை​வர் கரு.​நாக​ராஜன் வெளியிட்டுள்ள அறிக்​கை: கடந்த 2019-ம் ஆண்டு அரசு மருத்​து​வர்​கள் ஊதிய உயர்வு கோரி போராடிய ​போது, அன்​றைய எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக இருந்த மு.க.ஸ்​டா​லின் ஆதரவு அளித்​தார். திமுக ஆட்​சிக்கு வந்​தவுடன் அரசாணை 354-ன் படி உரிய ஊதி​யம் வழங்​கப்​படும் என்று மருத்​து​வர்​களிடம் அவர் சத்தி​யம் செய்​தார். ஆனால்...