Google search engine
கச்​சத்​தீவு பகுதி மீதான பாரம்​பரிய உரிமையை நிலை​நாட்ட வலி​யுறுத்​தி, குடியரசு தினத்தன்று கச்​சத்​தீவுக்​குச் சென்று இந்​திய தேசி​யக் கொடியை ஏற்​று​வோம் என்று காவிப் புலிப்​படை கட்சி அறிவித்திருந்தது. இதன்​படி, கட்​சித் தலை​வர் புல​வஞ்சி போஸ் தலை​மை​யில் ஏராள​மானோர் தஞ்​சாவூரிலிருந்து ராமேசுவரத்​துக்கு நேற்று வந்​தனர். அவர்​கள் நேற்று மதி​யம் ராம​நாத சுவாமி கோயி​லி்ல் இருந்து ஊர்​வல​மாகப் புறப்​பட்டு அக்னி தீர்த்த கடற்​கரைக்​குச் சென்​ற​போது, அங்கு பாது​காப்​புக்கு நின்​றிருந்த போலீ​ஸார் அவர்​களைத் தடுத்து நிறுத்​தினர். பின்​னர்,...
சென்னையில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குடியரசு தினத்தையொட்டி தேசியக் கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. நாட்டின் 77-வது குடியரசு தினத்தையொட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில், தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா தேசியக் கொடியை ஏற்றிவைத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியா தையை ஏற்றுக்கொண்டார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், எஸ்.எம்.சுப்ரமணியம், அனிதா சுமந்த் உள்ளிட்ட...
வடசென்னை அனல் மின் நிலைய 3-ம் அலகில் வணிக ரீதி​யான முழு உற்​பத்தி தொடங்​கப்​பட்​டுள்​ள​தாக மின் வாரி​யம் தெரி​வித்​துள்​ளது. வடசென்னை அனல் மின் நிலை​யம் 3-ல் 800 மெகா​வாட் அளவுக்கு மின்​னுற்​பத்தி செய்ய முடி​யும். இந்த அனல் மின் நிலை​யத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கி வைத்​தார். இதையடுத்து அனல் மின் நிலை​யத்​தில் சோதனை ஓட்​டம் உள்​ளிட்ட பணி​கள் தொடர்ச்​சி​யாக மேற்​கொள்​ளப்​பட்​டன. இந்​நிலை​யில் கடந்த ஆண்டு இறு​தி​யில் வடசென்னை...
மொரீஷியஸில் உள்ள முரு​கன் கோயில்​களில் நடை​பெறும் தைப்பூச விழா​வில் தமிழ் பக்​திப் பாடல்​களை பாட 7 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அனுப்​பி​யுள்​ளது. ஆப்​பிரிக்க கண்​டத்​தில் உள்ள குட்டி தீவு மொரீஷியஸ். இதன் மக்​கள்​தொகை 12 லட்​சம். இந்​திய வம்​சாவளி​யினர் இங்கு அதி​க​மாக உள்​ளனர். குறிப்​பாக தமிழர்​கள் அதி​க​மாக வசிக்​கின்​றனர். அங்கு கரும்​புத் தோட்​டங்​கள் மற்​றும் கட்​டு​மானப் பணி​களில் வலு​வான அடித்​தளமிட்ட இவர்​கள், இந்து சமய அடை​யாளத்​துடன் தைப்பூச விழாக்​களை​யும்,...
மாபெரும் தமிழ்க் கனவு திட்​டத்​தின்​கீழ் ஆசிரியர்களுக்கான பயிற்​சிப் பட்​டறை நடத்​து​வதற்​காக ரூ.1.08 கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து உயர்​கல்​வித் துறைச் செயலர் பொ.சங்​கர் வெளி​யிட்ட அரசாணை விவரம்: தமிழ் மண்​ணின் சிறப்​பு​களை இளைய தலை​முறை​யினருக்கு கொண்டு செல்ல வேண்​டி​யுள்​ளது. இதற்​காக தமிழர் மரபும்-நாகரி​க​மும், தமிழகத்​தில் சமூகநீ​தி, பெண்​கள் மேம்​பாடு, சமூகப் பொருளா​தார முன்​னேற்​றம் உள்​ளிட்ட தலைப்​பு​களில் ஆளு​மை​களைக் கொண்டு அமர்​வு​களை நடத்​தலாம். அதில் மொழிப்​பற்​றாளர்​கள், கல்​வி​யாளர்​கள், ஆய்​வறிஞர்​கள் உள்​ளிட்​டோரை கொண்டு மாபெரும்...
அரசுப் பணி​களில் புதி​தாக விண்​ணப்​பிப்​பவர்​களுக்கு மட்​டுமே இனி தமிழ் வழி​யில் கல்வி படித்​தமைக்​கான முன்​னுரிமை வழங்​கும் திருத்​தச் சட்ட முன்​வடிவு சட்​டப்​பேர​வை​யில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. தமிழக சட்​டப்​பேர​வை​யில் நேற்று கேள்வி நேரம் முடிந்​ததும், அரசுப் பணி​களில் தமிழ் வழி​யில் படித்​தவர்​களுக்கு முன்​னுரிமை வழங்​குதல் குறித்த திருத்​தச் சட்ட முன்​வடிவை அமைச்​சர் கயல்​விழி செல்​வ​ராஜ் தாக்​கல் செய்​தார். அதன் நோக்க காரண உரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அரசுப் பணி​களில் நேரடி பணி நியமனம் மூலம்...
காஞ்சி காமகோடி பீடத்​துக்கு சொந்​த​மான 3 யானை​களை​ மீண்​டும் மடத்​திடம் ஒப்​படைக்க எதிர்ப்பு தெரி​வி்த்து வனத்துறை தாக்​கல் செய்த மேல்​முறை​யீட்டு மனு தள்​ளு​படி செய்யப்பட்​டுள்​ளது. காஞ்​சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்​தில் நடை​பெறும் வழி​பாடு​கள், பூஜைகள், கோயில் திரு​விழாக்​களுக்​காக இந்​து, ஜெயந்​தி, சந்​தியா ஆகிய 3 யானை​கள் பயன்​படுத்​தப்​பட்டு வந்​தன. இந்த யானை​களை கவனித்து வந்த யானைப்​பாகன் கடந்த 2015-ல் உயி​ரிழந்​து​விட்​ட​தால் இந்த 3 யானை​களும் வனத்துறையிடம் ஒப்​படைக்​கப்​பட்​டன. அதன்​படி இந்த...
குடியரசு தினத்தை முன்​னிட்டு வரும் 26-ம் தேதி மெரினா கடற்​கரை​யில் உழைப்​பாளர் சிலை எதிரே ஆளுநர் ஆர்​.என்​.ரவி தேசிய கொடியை ஏற்ற உள்​ளார். இவ்​விழா​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் உள்பட பலர் கலந்து கொள்ள உள்​ளனர். இதை முன்​னிட்டு மெரினா மற்​றும் அதைச் சுற்றி போக்​கு​வரத்​தில் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக, போக்​கு​வரத்து போலீ​ஸார் நேற்று வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: வரும் 26-ம் தேதி காம​ராஜர் சாலை​யில், காந்தி சிலை முதல் போர்...
நிலு​வை​யில் உள்ள வழக்​கு​கள் தொடர்​பாக​வும், வழக்​கின் விசா​ரணை அதி​காரி​கள் தொடர்​பாக​வும் எந்த வீடியோக்​களை​யும் வெளி​யிடக்​கூ​டாது என்​றும், பிப்​.2-ம் தேதி அரசு மருத்துவர்கள் முன்​பாக மருத்​துவ பரிசோதனைக்கு ஆஜராக வேண்​டுமென்​றும் சவுக்கு சங்​கருக்கு உயர் நீதி​மன்ற நீதிப​தி​கள் உத்​தர​விட்​டுள்​ளனர். சவுக்கு மீடியா தலைமை செயல் அதி​காரி​யான பிரபல யூடியூபர் சவுக்கு சங்​கரை ஆதம்​பாக்​கம் மற்​றும் சைதாப்​பேட்டை போலீ​ஸார் இரு மோசடி வழக்​கு​களின்​கீழ் கடந்த டிச.13-ம் தேதி கைது செய்​தனர். சவுக்கு சங்​கருக்கு மருத்​துவ...
பிரதமர் மோடி​யின் பொதுக்​கூட்​டத்​தில் பங்கேற்க வந்த ஐஜேகே நிறு​வனர் பாரிவேந்​தர் காரை மறித்த போலீஸார், அவரை அனு​ம​திக்​க​வில்​லை. இதனால், பொதுக்​கூட்​டத்​தில் பங்​கேற்​காமல் பாதி​யிலேயே திரும்​பிய​தால் பரபரப்பு ஏற்​பட்​டது. மது​ராந்​தகத்​தில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் பிரச்​சார பொதுக்​கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி, அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி உள்​ளிட்ட கூட்​டணி கட்சி தலை​வர்​கள் பங்​கேற்​றனர். இந்​தக் கூட்​டத்​தில் கலந்​து​கொள்​வதற்​காக கூட்​டணி கட்​சித் தலை​வ​ரான இந்​திய ஜனநாயக கட்​சி​யின்​(ஐஜேகே) நிறு​வனத்...