Google search engine
 தமிழகத்​தில் வெயில் அதி​கரித்து வரு​வ​தால், இயல்பை விட அதி​க​மான வெப்​பநிலை பதி​வாகும் என்று எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது. அதனால், முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளை மேற்​கொள்​ளு​மாறு சுகா​தா​ரத் துறை​யினருக்கு அறி​வுறுத்​தல் விடுக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக, தமிழக பொது சுகா​தா​ரத்​துறை அதி​காரி​கள் கூறிய​தாவது: உப்பு சர்க்​கரை கரைசல் (ஓஆர்எஸ்) பாக்​கெட்​டு​களை போதிய கொள்​முதல் செய்ய வேண்​டும். அத்​தி​யா​வசிய மருந்​துகள், ரத்த நாளங்​கள் வழியே செலுத்​தப்​படும் திரவ மருந்​துகளும் கையிருப்பு இருப்​பதை உறுதி செய்ய வேண்​டும். ஹீட் ஸ்ட்​ரோக் எனப்​படும்...
தேர்தல் காலங்​களில் வங்​கி​யில் எடுக்​கும் பணத்​துக்கு அதன் மேலா​ளர் சான்​றிதழ் வழங்க வங்​கி​களுக்கு வழி​காட்​டு​தல் வெளி​யிட ரிசர்வ் வங்கி கவர்​னருக்கு, தமிழக வணி​கர் சங்​கங்​களின் பேர​வைத் தலை​வர் எஸ்​.சவுந்​தர்​ராஜன் கடிதம் எழு​தி​யுள்​ளார். ​கடிதத்​தில் அவர் தெரி​வித்​துள்​ள​தாவது: தேர்தல் காலங்​களில் சட்​ட​விரோத பணப் பரிவர்த்​தனை செய்​யப்​படு​வதைத் தடுக்​கும் நோக்​கில், தேர்தல் ஆணை​யம்,கண்​காணிப்​புக் குழுக்​கள் பல்​வேறு இடங்​களில் தீவிர சோதனை​களை மேற்​கொண்டு வரு​கின்​றன. தினசரி வணிக நடவடிக்​கைகளுக்​காக வங்​கி​களி​லிருந்து பணம் எடுத்து பயன்​படுத்​தும் உண்​மை​யான...
‘​மார்ச் இறு​திக்​குள் பணி​யில் இணைந்​தால் மட்​டுமே 2 ஆண்​டு​கள் முடி​வில் நீட் தேர்​வில் பங்​கேற்க முடி​யும் என்​ப​தால், தேர்​தல் ஆணை​யத்​தின் சிறப்பு அனு​மதி பெற்று 751 மருத்​து​வர்​களுக்கு பணி நியமன ஆணை​களை வழங்க வேண்​டும்’ என்று அரசு மருத்​து​வர்​கள் கோரிக்கை விடுத்​துள்​ளனர். அரசு மருத்​து​வ​மனை​களுக்கு 1,100 உதவி மருத்​து​வர்​களை தேர்ந்​தெடுப்​ப​தற்கு கடந்த ஜன.25-ம் தேதி நடந்த தேர்​வில் தேர்ச்சி பெற்ற 20 ஆயிரம் பேரில் சுமார் 2 ஆயிரம் பேரின்...
சென்​னை​யில் தேர்தல் விதி​மீறல்​களை கண்​காணிக்க மாநக​ராட்​சி​யின் ரிப்​பன் கட்​டிட வளாகத்​தில், 24 மணிநேர தேர்தல் கட்​டுப்​பாட்டு அறை திறக்​கப்​பட்​டுள்​ளது. இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தின் உத்​தர​வின்​படி, தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்​டு, சென்னை மாவட்ட தேர்​தல் அலு​வல​கத்​தின் கீழ் இயங்​கும் தேர்​தல் ஊடக கண்​காணிப்பு மையம் மற்​றும் கட்​டுப்​பாட்டு அறை, மாநக​ராட்சி ரிப்​பன் கட்​டிட வளாகத்​தில் அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த மையத்​தில், தேர்​தல் நடத்தை விதி​முறை​கள் 24 மணி நேர​மும் தீவிர​மாக கண்​காணிக்க ஏற்​பாடு...
தமிழகத்​தில் செயற்​கை​யான எரிபொருள் தட்​டுப்​பாட்டை திமுக உரு​வாக்​கு​கிறது என்று மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் தெரி​வித்​தார். சென்னை விமான நிலை​யத்​தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: ஆந்​தி​ரா, புதுச்​சேரி, கர்​நாட​கா, கேரளா என எந்த மாநிலத்​தி​லும் பெட்​ரோல் பங்​கில் கூட்​டம் கிடை​யாது. திமுக​வினர் வேண்​டு​மா​னால், நேரில் வந்து பார்க்​கலாம். எங்​கும் இல்​லாத பதற்​ற​மான சூழ்​நிலையை தமிழகத்​தில் திமுக உரு​வாக்​கிக் கொண்​டிருக்​கிறது. பல நாடு​களில் பெட்​ரோல், டீசல் விலை உயர்த்​தப்​பட்​டிருக்​கிறது. ஆனால், இந்​தி​யா​வில்...
தேர்தல் பிரச்​சார அனு​ம​தியை இணைய வழி​யில் விண்​ணப்​பித்து பெற வேண்​டும் என்று, அரசி​யல் கட்​சிகளுக்கு மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் அறி​வுறுத்​தி​யுள்​ளார். சென்னை மாவட்​டத்​தில் அமலில் இருக்​கும் தேர்​தல் நடத்தை விதி​கள் தொடர்​பாக, அனைத்து அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சிகளின் பிர​தி​நி​தி​களிடம் விளக்​கும் கூட்​டம், மாவட்ட தேர்​தல் அதி​காரி ஜெ.குமரகுருபரன் தலை​மை​யில் ரிப்​பன் மாளி​கை​யில் நேற்று நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தின் முடி​வில் குமரகுருபரன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:சென்​னை​யில் உள்ள 16 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில் 28.30 லட்​சம்...
கரூரில் தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற கூட்​டத்​தில் ஏற்​பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலி​யான சம்​பவத்​தையடுத்​து, அரசி​யல் கட்​சிகளின் ரோடு-ஷோக்​கள், பேரணி​களுக்கு நிலை​யான வழி​காட்டு நெறி​முறை​களை வகுத்து, தமிழக அரசு கடந்த ஜன.5 அன்று அரசிதழில் வெளி​யிட்​டது. அரசின் இந்த வழி​காட்டு நெறி​முறை​கள் அங்​கீ​காரம் பெற்ற கட்​சிகள் மற்​றும் அங்​கீ​காரம் பெறாத கட்​சிகள் என பாரபட்​ச​மாக நிறை வேற்​றப்​பட்​டுள்​ள​தால் அதை ரத்து செய்ய வேண்​டும் என தவெக இணைப்...
மருத்துவர்கள் 320 பேருக்கு மட்​டுமே பணி நியமன ஆணை வழங்​கி​விட்​டு, 1071 மருத்​து​வர்​களுக்கு பணி நியமன ஆணை வழங்​கப்​பட்​டுள்​ள​தாக திமுக அரசு பொய் சொல்​கிறது என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ், தலை​வர் அன்​புமணி ஆகியோர் தெரி​வித்​துள்​ளனர். இதுதொடர்பாக, அவர்கள் இருவரும் நேற்று வெளியிட்ட அறிக்கை: ராம​தாஸ்: தமிழகம் முழு​வதும் உள்ள அரசு மருத்​து​வ​மனை​களுக்கு 1,100 உதவி மருத்​து​வர்​களை தேர்​தெடுக்க, விண்​ணப்​பித்​தவர்​களுக்கு போட்​டித் தேர்வு நடத்​தப்​பட்​டு, தேர்ச்சி பெற்​றவர்​களுக்கு சான்​றிதழ் சரி​பார்ப்பு செய்​யப்​பட்டு 1,071...
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்​கள் அலு​வல் நேரத்​தில் அரசி​யல் விவாதங்​களில் ஈடு​பட தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் இ.எம்​.ஆர்​.ஐ. கிரீன் ஹெல்த் சர்​வீஸ் நிறு​வனம் மூல​மாக 108 ஆம்​புலன்ஸ் சேவை செயல்​படுத்​தப்​படு​கிறது. மாநிலம் முழு​வதும் மொத்​த​மாக 1,353 ஆம்புலன்ஸ்கள் இயக்​கப்​பட்டு வரு​கின்​றன. ஆம்புலன்ஸ் வாக​னங்​கள் அனைத்​தி​லும் தேர்​தல் கட்​டுப்​பாட்டு விதி​கள் ஒட்​டப்​பட்​டுள்​ளன. இது தொடர்​பாக 108 நிர்​வாகத்​தின் மாநிலத் தலை​வர் செல்​வகு​மார், மண்​டலத் தலை​வர் முகமது பிலால் ஆகியோர் கூறிய​தாவது: தேர்​தல் காலத்​தில்...
தேர்​தல் பறக்​கும் படை​யினர் மேற்​கொண்ட சோதனை​யில் மெரினா உட்பட 3 இடங்​களில் லட்​சக்​கணக்​கில் பணம் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது. தமிழக சட்​டப்​பேரவை தேர்​தல் ஏப்​ரல் 23-ம் தேதி நடை​பெற உள்​ளது. தேர்​தல் நடத்தை விதி​முறை​கள் நேற்று முன்​தினம் மாலை முதல் அமலுக்கு வந்​துள்​ளன. இதையடுத்​து, அரசி​யல் கட்​சிகள், பணம் கொடுத்து வாக்​காளர்​களை கவர்​வதைதடுக்க தேர்​தல் ஆணை​யம் பறக்​கும் படைகளை அமைத்​துள்​ளது. இந்த பறக்​கும் படை​யினர் முக்​கிய பகு​தி​களில் கண்​காணித்து வரு​கின்​றனர். அதன்​படி, மெரினா...