கச்சத்தீவு பகுதி மீதான பாரம்பரிய உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி, குடியரசு தினத்தன்று கச்சத்தீவுக்குச் சென்று இந்திய தேசியக் கொடியை ஏற்றுவோம் என்று காவிப் புலிப்படை கட்சி அறிவித்திருந்தது.
இதன்படி, கட்சித் தலைவர் புலவஞ்சி போஸ் தலைமையில் ஏராளமானோர் தஞ்சாவூரிலிருந்து ராமேசுவரத்துக்கு நேற்று வந்தனர்.
அவர்கள் நேற்று மதியம் ராமநாத சுவாமி கோயிலி்ல் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு அக்னி தீர்த்த கடற்கரைக்குச் சென்றபோது, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
பின்னர்,...
சென்னையில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குடியரசு தினத்தையொட்டி தேசியக் கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. நாட்டின் 77-வது குடியரசு தினத்தையொட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில், தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா தேசியக் கொடியை ஏற்றிவைத்து, மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களின் அணிவகுப்பு மரியா தையை ஏற்றுக்கொண்டார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், எஸ்.எம்.சுப்ரமணியம், அனிதா சுமந்த் உள்ளிட்ட...
வடசென்னை அனல் மின் நிலைய 3-ம் அலகில் வணிக ரீதியான முழு உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது. வடசென்னை அனல் மின் நிலையம் 3-ல் 800 மெகாவாட் அளவுக்கு மின்னுற்பத்தி செய்ய முடியும்.
இந்த அனல் மின் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இதையடுத்து அனல் மின் நிலையத்தில் சோதனை ஓட்டம் உள்ளிட்ட பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் வடசென்னை...
மொரீஷியஸில் உள்ள முருகன் கோயில்களில் நடைபெறும் தைப்பூச விழாவில் தமிழ் பக்திப் பாடல்களை பாட 7 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அனுப்பியுள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள குட்டி தீவு மொரீஷியஸ். இதன் மக்கள்தொகை 12 லட்சம். இந்திய வம்சாவளியினர் இங்கு அதிகமாக உள்ளனர். குறிப்பாக தமிழர்கள் அதிகமாக வசிக்கின்றனர்.
அங்கு கரும்புத் தோட்டங்கள் மற்றும் கட்டுமானப் பணிகளில் வலுவான அடித்தளமிட்ட இவர்கள், இந்து சமய அடையாளத்துடன் தைப்பூச விழாக்களையும்,...
மாபெரும் தமிழ்க் கனவு திட்டத்தின்கீழ் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறை நடத்துவதற்காக ரூ.1.08 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உயர்கல்வித் துறைச் செயலர் பொ.சங்கர் வெளியிட்ட அரசாணை விவரம்: தமிழ் மண்ணின் சிறப்புகளை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது.
இதற்காக தமிழர் மரபும்-நாகரிகமும், தமிழகத்தில் சமூகநீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப் பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட தலைப்புகளில் ஆளுமைகளைக் கொண்டு அமர்வுகளை நடத்தலாம். அதில் மொழிப்பற்றாளர்கள், கல்வியாளர்கள், ஆய்வறிஞர்கள் உள்ளிட்டோரை கொண்டு மாபெரும்...
அரசுப் பணிகளில் தமிழ்வழி கல்விக்கு முன்னுரிமை: புதிய திருத்தச் சட்ட முன்வடிவு பேரவையில் தாக்கல்
admin - 0
அரசுப் பணிகளில் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே இனி தமிழ் வழியில் கல்வி படித்தமைக்கான முன்னுரிமை வழங்கும் திருத்தச் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், அரசுப் பணிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குதல் குறித்த திருத்தச் சட்ட முன்வடிவை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தாக்கல் செய்தார்.
அதன் நோக்க காரண உரையில் கூறியிருப்பதாவது: அரசுப் பணிகளில் நேரடி பணி நியமனம் மூலம்...
3 யானைகளை மீண்டும் சங்கர மடத்தில் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து வனத்துறை தாக்கல் செய்த மனு தள்ளுபடி
admin - 0
காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமான 3 யானைகளை மீண்டும் மடத்திடம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவி்த்து வனத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தில் நடைபெறும் வழிபாடுகள், பூஜைகள், கோயில் திருவிழாக்களுக்காக இந்து, ஜெயந்தி, சந்தியா ஆகிய 3 யானைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த யானைகளை கவனித்து வந்த யானைப்பாகன் கடந்த 2015-ல் உயிரிழந்துவிட்டதால் இந்த 3 யானைகளும் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.
அதன்படி இந்த...
குடியரசு தினத்தை முன்னிட்டு மெரினாவில் போக்குவரத்து மாற்றம்: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ட்ரோன்கள் பறக்க தடை
admin - 0
குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 26-ம் தேதி மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை எதிரே ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்ற உள்ளார். இவ்விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். இதை முன்னிட்டு மெரினா மற்றும் அதைச் சுற்றி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, போக்குவரத்து போலீஸார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் 26-ம் தேதி காமராஜர் சாலையில், காந்தி சிலை முதல் போர்...
நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாகவும், வழக்கின் விசாரணை அதிகாரிகள் தொடர்பாகவும் எந்த வீடியோக்களையும் வெளியிடக்கூடாது என்றும், பிப்.2-ம் தேதி அரசு மருத்துவர்கள் முன்பாக மருத்துவ பரிசோதனைக்கு ஆஜராக வேண்டுமென்றும் சவுக்கு சங்கருக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சவுக்கு மீடியா தலைமை செயல் அதிகாரியான பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீஸார் இரு மோசடி வழக்குகளின்கீழ் கடந்த டிச.13-ம் தேதி கைது செய்தனர்.
சவுக்கு சங்கருக்கு மருத்துவ...
பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் காரை மறித்த போலீஸார், அவரை அனுமதிக்கவில்லை. இதனால், பொதுக்கூட்டத்தில் பங்கேற்காமல் பாதியிலேயே திரும்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரச்சார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கூட்டணி கட்சித் தலைவரான இந்திய ஜனநாயக கட்சியின்(ஐஜேகே) நிறுவனத்...
