நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாளை ஆர்ப்பாட்டம்: திராவிடர் கழகத்துடன், கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்பு
admin - 0
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடர் கழகம் ஒருங்கிணைப்பில் நாளை தமிழகம் முழுவதும் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக, அக்கட்சிகள் வெளியிட்ட அறிக்கைகள்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்று பல லட்சக்கணக்கான மாணவர்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பில் நாளை (16-ம் தேதி) தமிழகம்...
பாஜக ஆட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு ஜூன் 30-ம் தேதியுடன் முடிவு கட்டப்பட உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஏழைகளுக்கு சாதகமான சட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய பாஜக ஆட்சியாளர்களுக்கு எப்போதுமே அக்கறை இல்லை.
இந்த நிலையில், ‘விபி-ஜிராம்ஜி’ என்ற புதிய திட்டம் ஜூலை 1-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தை அமல்படுத்த மாநில அரசுகள் 40 சதவீத நிதியை...
‘இன்று இல்லை என்றால், நாளை வெல்வோம்’ என கட்சியினருடன் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தது.
இந்நிலையில் தேர்தலில் படுதோல்வியடைந்ததை அடுத்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சியினருக்கு ஆறுதல் தெரிவித்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிகளவில் பகிரப்பட்டு...
திமுக கூட்டணியில் சரியான மரியாதை வழங்கவில்லை என்று மதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் வைகோவுடன் வாதிட்டனர், அவர்களை வைகோ சமாதானப்படுத்தினார்.
மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ் தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதல்வர் விஜய்க்கு வாழ்த்து, திமுக கூட்டணிக்கும், மதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி, நீட் தேர்வு ரத்து கோரிக்கை, பி.எம். திட்டத்துக்கு எதிர்ப்பு என்பன...
முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து 1,600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
admin - 0
முகூர்த்தம், வார இறுதி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து 1,600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மே 14ம் தேதி முகூர்த்த நாள், மே 15, 16, 17 வார விடுமுறை நாட்களை முன்னிட்டு, சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம்...
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், அந்தமான் - நிகோபார் தீவுப் பகுதிகளில் மே 16-ம் தேதி வாக்கில் தென்மேற்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால், இன்று (மே 14) டெல்டா, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும்,...
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான ‘கியூட்’ நுழைவுத் தேர்வு தொடங்கியது
admin - 0
இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கியூட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் தொடங்கியது. முதல் நாள் தேர்வில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் சேர கியூட் எனப்படும் பல்கலைக்கழக பொதுநுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இத்தேர்வை மத்திய அரசு சார்பில் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது....
தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் பாஜக ஆட்சி திட்டம் முறியடிப்பு: ஸ்டாலினுக்கு பழ.நெடுமாறன் பாராட்டு
admin - 0
தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் பாஜக ஆட்சி அமைக்க வகுக்கப்பட்ட சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது என்று, தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனர் பழ.நெடுமாறன், தலைவர் செ.ப.முத்தமிழ்மணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, அவர்கள் கூட்டாக நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி, அதிக இடங்களில் வெற்றிபெற்ற தவெக தலைவர் விஜய் முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
அவருக்கும், அவரது கட்சியை சார்ந்த அமைச்சர்கள் மற்றும்...
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறியது: “நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வராக விஜய் வரவேண்டும் என்று மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். அந்த தீர்ப்பை அதிமுக தலைவணங்கி வரவேற்கிறது. தேர்தலுக்குப் பிறகு கலந்தாலோசித்தபோது கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி சில முன்மொழிவுகளை எங்கள் முன்வைத்தார்.
இந்த இயக்கம் திமுகவை எதிர்த்து...
தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை சபாநாயகராக ரவிசங்கர் தேர்வு செய்யப்பட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற தவெக, சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக விஜய், மே 10-ம் தேதி பதவி ஏற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
அவர்களுக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். மேலும், புதிய எம்எல்ஏ.க்களுக்கு பதவிப்பிர மாணம் செய்து வைப்பதற்காக சட்டப்பேரவை தற்காலிக தலைவராக...










