Google search engine
விரு​கம்​பாக்​கத்​தில் ஏவி.எம்​.சர​வணனின் நினை​வேந்​தல் படத்​திறப்பு நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், நிகழ்ச்சி முடிந்து காரில் புறப்​பட்டு சென்​றார். முதல்​வரின் பாது​காப்பு அணிவகுப்பு வாக​னம் ஆற்​காடு சாலை​யில் வரும்​போது, இளைஞர் ஒரு​வர் முதல்​வரிடம் மனு கொடுக்க முயன்​றார். அவரை போலீ​ஸார் தடுத்து நிறுத்​தினர். விசா​ரணை​யில், மனு அளிக்க முயன்​றவர் விழுப்​புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த செல்​வ​ராஜ் (33) என்​பதும், திமுக ஒன்​றிய மாணவரணி துணைச் செயலர் என்​பதும் தெரிய​வந்​தது. இவரது...
வெனிசுலா மீது தாக்​குதல் நடத்​திய அமெரிக்​காவை கண்​டித்து உலக நாடு​கள் உரக்க குரல் எழுப்ப வேண்​டும் என்று மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம் அறி​வுறுத்​தி​யுள்​ளார். இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: வெனிசுலா போதைப் பொருள் மையம் என்ற போலி​யான குற்​றச்​சாட்டை முன்​வைத்து தாக்​குதல் நடத்​தப்​பட்​டுள்​ளது. வெனிசுலா மீது அமெரிக்கா தொடுத்​திருக்​கும் தாக்​குதல் ஒரு சட்டவிரோத அடாவடி தாக்​குதல் மட்​டுமல்ல, அந்த நாட்​டின் இறை​யாண்​மையை காலில் போட்டு...
அதிமுகவில் 2008-ம் ஆண்டிலிருந்து பயணிக்கும் சிங்கை ராமச்சந்திரன், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்று, அவரால் கட்சியின் ஐடி விங் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த 2016 தேர்தலில் அதிமுக வெற்றிக்கு டிஜிட்டல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தார். இப்போது மாணவரணி மாநில செயலாளராக இருக்கிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், மாவட்டங்கள்தோறும் பயணித்து, கட்சி பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். இந்த பரபரப்பான பணிகளுக்கிடையே ‘ஜனநாயகத்...
போராட்டங்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் நிறைந்த திமுக அரசை முடிவுக்கு கொண்டு வருவதே எங்கள் வேலை என சசிகலா தெரிவித்துள்ளார். ஆங்கில புத்தாண்டையொட்டி, சசிகலா சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் தொண்டர்களைச் சந்தித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சி வந்ததிலிருந்து தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. திருத்தணி ரயில் நிலையத்தில் சிறுவர்கள், வட மாநில இளைஞரை போதையில் கடுமையாக தாக்கியுள்ளனர். அடுத்த...
சட்டப்பேரவை தேர்தலில் தங்களது கூட்டணி திமுக-வுடனா அதிமுக-வுடனா என இறுதி செய்யும் முயற்சியில் தேமுதிக தீவிரமாக இருக்கிறது. இது தொடர்பாக சென்னையில் வரும் 5-ம் தேதி மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தேமுதிக எந்தப் பக்கம் சாயும் என்பதும் தற்போது விவாதப் பொருளாகி இருக்கிறது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு சந்திக்கும் முதல் சட்டப்பேரவை தேர்தல்...
கடந்த டிசம்பர் 26-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், “கடந்த நான்கரை ஆண்டுகளில் நாங்கள் செய்ததில் 5 சதவீதமாவது அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்ததா..? அவர்களால் இதற்கு பதில் சொல்ல முடியுமா..? இது என்னுடைய ஓபன் சேலஞ்ச்” என்று சவால் விடுத்திருந்தார். இந்த சவாலுக்கு வரும் 5-ம் தேதி பதிலளிக்க தயாராகி வருகிறது கள்ளக்குறிச்சி அதிமுக. ஸ்டாலின் சேலஞ்ச் வைத்த...
பழனிசாமியுடன் பன்னீர்செல்வம் இணைய வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் வடகரை பகுதியில் பேச்சி ஓடையின் குறுக்கே நபார்டு நிதி உதவியுடன் ரூ.6 கோடியில் அமைய உள்ள பாலத்திற்கு நேற்று அடிக்கல் நாட்டிய அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தினமும் கொலை கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. போதைப் பொருட்கள் புழக்கம் கிராமங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் அதிகரித்துவிட்டது. மாணவர்கள்...
 தாம்​பரம் காவல் ஆணை​ய​ராக கடந்த ஜூலை மாதம் பதவி​யேற்ற அபின் தினேஷ் மோதக் பணி​மாற்​றம் செய்​யப்​பட்ட நிலை​யில், ஏற்​கெனவே இங்கு ஆணை​ய​ராக இருந்த ஏடிஜிபி அமல்​ராஜ் மீண்​டும் தாம்​பரம் மாநகர காவல் ஆணை​ய​ராக நியமிக்​கப்​பட்​டார். அவர் நேற்று பொறுப்​பேற்​றார். அவருக்கு காவல் துறை அதி​காரி​கள் வாழ்த்து தெரி​வித்​தனர். இதே​போல, ஆவடி காவல் ஆணை​ய​ராக இருந்த ஏடிஜிபி கி.சங்​கர், சிறைத் துறை இயக்​குந​ராகப் பணி​யிடம் மாற்​றம் செய்​யப்​பட்​டார். இதையடுத்​து, தென் மண்டல ஐ.ஜி.​யாகப்...
காசி ஆன்​மிகத் தலைநக​ராக இருந்​தா​லும் தமிழ் இலக்​கி​யங்​கள் அங்கு ஓங்கி ஒலிக்​கின்றன என்று குடியரசு துணைத் தலை​வர் சி.பி ராதாகிருஷ்ணன் கூறி​னார். உத்தர பிரதேச மாநிலம் வாராணசி​யில் ‘காசி தமிழ் சங்​கமம் நிகழ்ச்​சி-4.0 டிச. 2 முதல் 15-ம் தேதி வரை நடை​பெற்​றது. இதன் நிறைவு விழா ராமேசுவரத்​தில் நேற்று நடந்​தது. இதில், குடியரசு துணைத் தலை​வர் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசி​ய​தாவது: முன்​னாள் குடியரசுத் தலை​வர் அப்​துல் கலாமை தந்த...
ராமேசுவரம் மீன்​பிடித் துறை​முகத்​திலிருந்து நேற்று முன்​தினம் 500-க்​கும் மேற்​பட்ட விசைப்​படகு​களில் 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்​றனர். இந்நிலையில், நேற்று அதி​காலை நெடுந்​தீவு அருகே மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​த​போது, அங்கு வந்த இலங்கை கடற்​படை​யினர் கிரசி​யன் என்​பவரது விசைப்​படகை சிறைபிடித்து, படகில் இருந்த நாக​ராஜ் (47), பிரபு (49), ரூபன் (45) ஆகியோரைக் கைது செய்​து, காரைநகர் கடற்​படை முகா​முக்கு கொண்டு சென்​றனர். பின்​னர் அவர்​களை இலங்கை மீன்​வளத்​துறை அதி​காரி​களிடம் ஒப்​படைத்​தனர்....