Google search engine
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தேடுதல் குழு அமைத்து அரசு எடுத்த நடவடிக்கை மாநில அரசு பல்கலைக்கழக சட்டப்பிரிவுகளுக்கு உட்பட்டு எடுக்கப்பட்ட முடிவு என்று ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பதிலளித்துள்ளார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக புதிய துணைவேந்தரை தேர்வுசெய்வதற்காக தமிழக அரசு அமைத்துள்ள தேடுதல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெறவில்லை என்றும் இது யுஜிசி விதிமுறைகளுக்கும் உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் முராணனது என்று பல்கலைக்கழக வேந்தரான...
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் தமிழக அரசு, ஆளுநர் இடையேயான மோதல் தேவையற்றது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிப்பதில் தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் புதிய துணைவேந்தர்கள்...
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆந்திர கரையை நெருங்கும் என்பதால் தமிழகத்துக்கு கனமழை அச்சம் நீங்கியுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது, வடமேற்கு திசையில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை...
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.177.85 கோடி மதிப்பீட்டில் 18 மாவட்டங்களில் 34 உயர்மட்டப் பாலங்கள் கட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்த 2024-25-ம் ஆண்டில், ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள், முதல்வரின் அறிவிப்புகள் மற்றும் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் இணைப்பு வசதி இல்லாத குடியிருப்பு பகுதிகளில் தேவைப்படும் உயர்மட்ட பாலங்களை முன்னுரிமை அடிப்படையில் கட்ட...
அம்பேத்கர் குறித்த அமித் ஷா பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, நாடாளுமன்றத்தில் 2 நாட்களாக கடும் அமளி நிலவியது. இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துமாறு திமுக நிர்வாகிகளுக்கு தலைமை அறிவுறுத்தியது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் பகுதிவாரியாக திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில்...
சித்த மருத்துவ கல்வி, ஆராய்ச்சியில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என மத்திய அரசு பாராட்டி உள்ளது. மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், தமிழகத்தின் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகம் இணைந்து, 8-வது தேசிய சித்த மருத்துவ தினத்தை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில், ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் வைத்திய ராஜேஷ் கோட்டெச்சா, மத்திய...
விசாரணை கைதிகளுக்கு சிறைத் துறை அதிகாரிகளே அவசரகால விடுப்பு வழங்கும் வகையில் வழிகாட்டு விதிகளை வகுக்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் விசாரணை கைதியாக உள்ளவர் சதீஷ். இவரது தந்தை அருள்தாஸ், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எனது மனைவி இறந்துவிட்டதால், இறுதி சடங்கில் பங்கேற்க எனது மகனுக்கு அவசரகால விடுப்பு வழங்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் அமர்வில் இந்த...
பைக் டாக்சியை தடை செய்யக்கோரி சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் பேரணி நடத்தினர். பைக் டாக்சியை தடை செய்யக்கோரி கோட்டை நோக்கி பேரணி நடைபெறும் என ஆட்டோ ஓட்டுநர்கள் ஏற்கெனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில், சென்னை, எழும்பூர் லேங்க்ஸ் தோட்டச் சாலையின் இருபுறமும் நேற்று காலை முதலே ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து, கூவம் ஆறு பாலத்தில் இருந்து பேரணியாக ஆட்டோ ஓட்டுநர்கள் கோட்டையை நோக்கிப் புறப்பட்டனர். வழிநெடுகிலும், பைக் டாக்சியை தடை...
பல வகையிலும் ஏழை மக்களின் பாவங்களை சேர்த்த திமுகவை, 2026-ல் வீட்டுக்கு அனுப்புவதே தமிழக மக்களுக்கு புண்ணியம் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய கருத்துக்கு பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதல்வர் ஸ்டாலினும், ‘‘அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தை பற்றி கவலைப்பட வேண்டும். நாட்டை பற்றியும், மக்களை பற்றியும், அரசியலமைப்பு...
வேளச்சேரி ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தில் 5 ஆண்டுகளாக வழக்கு நடைபெற்று வருவதாக அமர்வின் உறுப்பினர்கள் நேற்று அதிருப்தி தெரிவித்தனர். வேளச்சேரி ஏரியில் விடப்படும் கழிவுநீரால் ஏரி மாசுபட்டு இருப்பதாக கடந்த 2020-ம் ஆண்டு நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறது. வேளச்சேரி ஏரி தொடர்பாக தனிநபர் தொடர்ந்து...