ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களின் ஒருங்கிணைப்பு பணியானது இன்று (ஜனவரி 10) தொடங்கும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு நிலையத்தை 2035-ம் ஆண்டுக்குள் விண்ணில் நிறுவமுடிவு செய்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் (SPADEX–Space Docking Experiment) எனும் திட்டத்தின்கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் பரிசோதனையை மேற்கொள்ள இஸ்ரோ முடிவு செய்தது.
இதற்காக...
எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்காக சைபர் பாதுகாப்பு உதவிப் பிரிவும், கோவையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்காக பிரத்யேகமாக ‘தகவல் தொழில்நுட்ப வெளியும்’ ஏற்படுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) சார்பில் ‘உமாஜின் தமிழ்நாடு 2025’ என்ற தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. சென்னையில் 3-வது முறையாக நடைபெறும் இந்த...
ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
admin - 0
கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதிமுதல் ஊதிய உயர்வு வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் சென்னையில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசின் கைத்தறி, துணிநூல் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் கோ-ஆப்டெக்ஸ், இந்திய அளவில் முன்னணி கைத்தறி நிறுவனமாகச் செயல்படுகிறது. இதற்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் 150 விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் விற்பனை பிரிவு ஊழியர்கள், பல்வேறு...
போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கை நிறைவேறாவிட்டால் வேலைநிறுத்தம்: சிஐடியு மாநில தலைவர் எச்சரிக்கை
admin - 0
போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் எச்சரித்துள்ளார்.
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பணியில் இருப்போரின் ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை பல்லவன் சாலையில் நேற்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் திரண்டு கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம்...
சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.2.69 கோடியில் அமைக்கப்பட்ட சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடியில் உள்ள கடைகளுக்கு மாத வாடகை ரூ.625 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.2 கோடியே 69 லட்சத்தில் 82 கடைகள் கொண்ட நவீன மீன் அங்காடி சிந்தாதிரிப்பேட்டையில் கூவம் ஆற்றின் கரையோரம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 1,247 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தில் 1,022 சதுர மீட்டர் பரப்பளவில்...
விஐடி சென்னையில் சர்வதேச சமத்துவ பொங்கல் விழா: விளையாட்டு போட்டிகளை வெளிநாட்டு விருந்தினர்கள் ரசித்தனர்
admin - 0
வி.ஐ.டி பல்கலைக்கழகம் சென்னை வளாகம் சார்பில் சர்வதேச சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் நடைபெற்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளை வெளிநாட்டு விருந்தினர்கள் கண்டு ரசித்தனர்.
வி.ஐ.டி பல்கலைக்கழகம் சென்னை வளாகம் சார்பில் சர்வதேச சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. வி.ஐ.டி சென்னை மாணவர்களிடையே கடந்த ஜன. 3-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை கபடி, கவிதை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் ஏராளமான...
சென்னை: “மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள். அவர் மீது அவதூறு பரப்பி விளம்பரம் தேட நினைக்கும் இழிவான - மலிவான அரசியல் பேர்வழிகளைப் புறக்கணிப்போம். எதையாவது செய்து, தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்கலாமா என நினைப்பார்களேயானால் சட்டம் தன் கடமையை நிச்சயம் செய்யும்.” என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று புதுச்சேரியில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “திராவிடத்தையும்,...
பொங்கல் பண்டிகையின்போது மக்கள் பொங்கல் வைக்கும் பானையில் கட்டப்படும் மஞ்சள் செடிகள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், இந்த ஆண்டு லாபகரமான விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர்.
அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகையின்போது, பொங்கல் வைக்கும் பானையில் மஞ்சள் செடி மங்கல அடையாளமாக கட்டப்படுகிறது. மஞ்சள் கட்டப்பட்ட பானையில் பொங்கும் பொங்கல், அந்த வீட்டின் வளத்தை குறிப்பதாக கருதப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சித்தரேவு, செங்கட்டாம்பட்டி...
அதிமுக உறுப்பினர் இல்லை என சொல்லும் உரிமை பழனிசாமிக்கு இல்லை: தேர்தல் ஆணையத்தில் பெங்களூரு புகழேந்தி மனு
admin - 0
அதிமுக உறுப்பினர் இல்லை என மற்றவர்களை சொல்லும் உரிமை பழனிசாமிக்கு இல்லை என தேர்தல் ஆணையத்தில் பெங்களூரு வா.புகழேந்தி நேற்று மனு அளித்துள்ளார்.
தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை வேட்பாளர்களுக்கு வழங்க, படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம் பழனிசாமிக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி, தூத்துக்குடியை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பெங்களூரு வா.புகழேந்தி ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். தேர்தல் ஆணையம் புகாரை பரிசீலிக்கவில்லை...
அதிமுகவினர் மீதான உரிமை மீறல் நடவடிக்கை வாபஸ்: முதல்வர் வேண்டுகோளை ஏற்று அப்பாவு அறிவிப்பு
admin - 0
ஆளுநர் உரையின்போது சட்டப்பேரவைக்கு அதிமுகவினர் பதாகைகளுடன் வந்த விவகாரத்தில், முதல்வர் கேட்டுக் கொண்டதால் உரிமை மீறல் நடவடிக்கையை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாபஸ் பெற்றார்.
பேரவையில் நேற்று அப்பாவு பேசும்போது, "ஆளுநரை பேசவிடாமல், அதிமுக உறுப்பினர்கள், அந்த சார் யார் என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகளைக் காட்டி நெருக்கடி கொடுத்தனர். பின்னர் சில மணித் துளிகளில் ஆளுநர் வெளியேறிவிட்டார். பேரவை நடவடிக்கைகளை தொடர்வதற்காக அதிமுக உறுப்பினர்களை வெளியேற்றினோம். பொதுவாக ஆளுநர்...










