Google search engine
கொடுங்கையூர் குப்பை கிடங்கை பயோ மைனிங் முறையில் மீட்டெடுக்க மார்ச் 1-ம் தேதி முதல் நாளொன்றுக்கு 10 ஆயிரம் டன் குப்பை கழிவுகளை கையாள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார். வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் சேகரமாகும் குப்பை முழுவதும், கடந்த 40 ஆண்டுகளாக கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில் கொட்டப்பட்டு வருகிறது. அந்த குப்பை கிடங்கை சுற்றி 100 மீட்டர் தொலைவிலேயே...
போரூர் சுங்கச்சாவடி முன்பாக போக்கு​வரத்​துக்கு இடையூறு ஏற்படுத்​தி​யதாக 100-க்கும் மேற்​பட்​ட​ தவெக​வினர் மீது மதுர வாயல் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​துள்ளனர். தவெக கட்சி​யின் சென்னை கிழக்கு மாவட்ட செயலா​ளராக பாலமுருகன் நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அவருக்கு போரூர் சுங்​கச்​சாவடி முன்பு நேற்று முன்​தினம் வரவேற்பு அளித்து தவெக கட்சி​யினர் கொண்​டாட்​டத்​தில் ஈடுபட்​டனர். அப்போது கிரேன் மூலம் 15 அடி பிரம்​மாண்ட மாலையை அணிவித்​தும் ஜேசிபி மூலம் மலர்​களைத் தூவி​யும் வரவேற்​றனர். இந்நிகழ்ச்​சி​யில்,...
நடிகர் விஜய்-ன் தமிழக வெற்றிக் கழக கொடிகம்பம் அமைக்க அனுமதி கோரிய விண்ணப்பத்தின் மீது 6 வாரங்களில் முடிவெடுக்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அமைந்தகரை திருவீதி அம்மன் கோயில் தெருவில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கம்பம் அமைக்க அனுமதி அளிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரி, அக்கட்சியின் வழக்கறிஞர் அணி மாவட்டச் செயலாளரான சரத்குமார், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், திருவீதி அம்மன் கோயில்...
ஜிபிஎஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்தார். சிறுவனுக்கு ஏற்கெனவே இதய பிரச்சினை இருந்ததால், அது தான் சிறுவன் உயிரிழப்புக்கு காரணம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். திருவள்ளூரை அடுத்த திருவூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த பிரேம்குமார் என்பவரின் 9 வயது மகன் மைதீஸ்வரன்(9). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக, கால்களில் உணர்விழப்பு...
பட்ஜெட்டில் மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய பாதுகாப்பு துறை ஊழியர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அகில இந்திய பாதுகாப்பு துறை ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.ஸ்ரீகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய பட்ஜெட்டில், மத்திய அரசு ஊழியர்களுக்கான 18 மாத நிலுவை அகவிலைப்படி வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் இடம் பெறவில்லை. இதேபோல், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, மத்திய அரசு அலுவலகங்களில் காலியாக...
மெரினா கடற்பரப்பில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர், ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நடுக்குப்பத்தைச் சேர்ந்தவர்கள் பாஸ்கர்(61), ராஜி(35). மீனவர்களான இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை வழக்கம்போல் ஒரே படகில் மெரினா கடற்பரப்பில் மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில், காலை 7 மணியளவில் இவர்கள் சென்ற படகு மற்றும் வலை ஆகியவை விவேகானந்தர் இல்லம் எதிரே கடற்கரை பகுதியில்...
இந்திய அயலகப் பணிப் பிரிவைச் சேர்ந்த 7 அலுவலர்கள், தலைமைச் செயலர் நா.முருகானந்தத்தை சந்தித்ததுடன், தமிழகத்தின் பாரம்பரிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஆய்வு செய்கின்றனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் தேசிய அளவில் பொருளாதாரத்தில் சிறந்த 2-வது பெரிய மாநிலமாகத் திகழ்கிறது. தொழில் வளர்ச்சியிலும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும் சிறந்த மாநிலமாகவும் விளங்குகிறது. தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை விளக்கிடும் கீழடி முதலான தொல்லியல் அகாழய்வு மையங்கள் என பல்வேறு...
காரைக்காலில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அப்போது, இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 மீனவர்கள் காயம் அடைந்தனர். காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவேல் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கவேல்(39), தினேஷ் (30), காரத்திகேசன்(27), செந்தமிழ் (27), பட்டினச்சேரியை சேர்ந்த மைவிழிநாதன்(22),...
ஆமைகள் உயிரிழக்க காரணமான இழுவை மடிவலைகளைப் பயன்படுத்திய மீன்பிடி கப்பல்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் 31-ம் தேதிக்குள் தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா முதல் கோவளம் வரை கடற்கரைப் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. இந்நிலையில், தென் மண்டல பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா,...
சென்னை மாவட்​டத்​தில் கட்சி அமைப்பு​ரீ​தியாக கள ஆய்வு பிப்​.4-ல் நடைபெறும் என்று அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமி அறிவித்​துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்கை​: அதிமுக கிளை, வார்டு, வட்டம் மற்றும் சார்பு அமைப்பு​களின் பணிகள் மற்றும் செயல்​பாடுகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் சென்னை மாவட்டம் தவிர மற்ற மாவட்டங்களில் கள ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்து, விவரங்களை கட்சி தலைமைக்கு சமர்ப்​பித்​தனர். இந்நிலை​யில், சென்னை மாவட்​டத்​தில் கட்சி...