Google search engine
வடகிழக்கு பருவமழையால் சென்னையில் வயிற்றுப்போக்கு, உணவு ஒவ்வாமையால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வடகிழக்கு பருவமழையால் சென்னையில் வயிற்றுப்போக்கு, உணவு ஒவ்வாமை போன்றவற்றால் அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடல்நலப் பிரச்சினையால் மருத்துவமனைகளுக்கு வருபவர்களில், 40 சதவீதத்தினருக்கு அத்தகைய பாதிப்பு உள்ளது. அதில் பெரும்பாலானோருக்கு இ-கோலி எனப்படும் தீங்கு விளைவிக்கும் ஜீரண மண்டல பாக்டீரியா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், ``எஸ்கெரிச்சியா கோலி எனப்படும் இ-கோலி...
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். கடல் நடுவே விவேகானந்தர் பாறை - திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தையும் திறந்து வைத்தார். கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. இதன் அருகே உள்ள மற்றொரு பாறையில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2000-ம்...
தமிழகத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில் ‘புதுமைப்பெண்’ திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து, மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகள் வழங்கி பேசியதாவது: காமராஜர் ஆட்சியில் அதிகப்படியான பள்ளிகள் திறக்கப்பட்டன....
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு 21 மாதமாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியப் பலன்களை உடனே வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து ஓய்வூதியர்கள் வாயில் கருப்பு மாஸ்க் அணிந்து நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 110 மாத அகவிலைப்படியை நிலுவையுடன் வழங்க வேண்டும், அகவிலைப்படி உயர்வு வழங்க உத்தரவிட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதை கைவிட...
சென்னை மாநகராட்சி சார்பில், பெண்களுக்கான கணினி பயிற்சி மற்றும் தையல் பயிற்சி பள்ளி திட்டம் அனைத்து மண்டலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் மேயர் ஆர்.பிரியா அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இரங்கல் தீர்மானம்...
உயர் நீதி​மன்ற வளாகத்​தில் நிர்வாக பிரிவுக்கென 11 மாடிகள் கொண்ட புதிய அடுக்​கு​மாடி கட்டிடத்தை உச்ச நீதி​மன்ற நீதிப​திகள் நேற்று திறந்து வைத்​தனர். பாரம்​பரிய கட்டிடத்​தில் இயங்கி வரும் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் நீதி​மன்ற அறைகளுக்கு இணையாக நிர்​வாகப் பிரிவுடன் கூடிய பல்வேறு அலுவலகப் பிரி​வும் தனித்தனி அறைகளில் இயங்கி வந்தன. இதனால் ஏற்பட்ட இடநெருக்​கடியை கருத்​தில்​கொண்டு நிர்​வாகப் பிரிவுக்கென புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்​யப்​பட்​டது. அதன்படி, எஸ்பிளனேடு...
தனக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக தென் சென்னை காவல் கூடுதல் ஆணையர் கண்ணனிடம் நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று புகார் மனு அளித்​தார். பின்னர் செய்தி​யாளர்​களிடம் அவர் கூறுகையில், ‘‘தமிழக பாஜக தலைவர் அண்ணா​மலை, சவுக்​கால் அடித்​துக் கொண்டது தொடர்பாக என் கருத்தை சமூக வலைதளங்​களில் பேசினேன். இதனால் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து நிறைய செல்போன் அழைப்புகள் வருகிறது. கொலை மிரட்டல் விடுத்​தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியுள்ளேன்’’...
செல்போன் திருடும் கும்பல், தனது குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு மாதச் சம்பளம், தங்கும் இடம், உணவு, பயண செலவு ஆகிய சலுகைகளை வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. உத்தர பிரேதேசத்தில் ரயில்களில் செல்போன் திருட்டு அதிகளவில் நடைபெறுவதாக புகார் வந்தது. இதையடுத்து உ.பி கோரக்பூர் ரயில்வே போலீஸார் ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்களின் பதிவை ஆராய்ந்தனர். கோரக்பூர் ரயில் நிலையத்துக்கு தொடர்ச்சியாக வந்த சந்தேக நபர்கள் சிலரை ரயில்வே...
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கை தமிழக அரசால் விசாரிக்க முடியவில்லையென்றால் சிபிஐ-யிடம் வழக்கை ஒப்படைக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். சென்னை கோயம்பேட்டில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இந்திய பொருளாதாரத்தில் சினிமா துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தவகையில், ‘‘உலக ஆடியோ, காட்சி மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு’’, இந்தியாவில் முதல்முறையாக 2025-ம் ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கான...
விண்​வெளி ஆய்வு மையத் திட்​டத்​தின் முன்னோட்​டமாக ஸ்பேடெக்ஸ் விண்​கலன்கள் பிஎஸ்​எல்வி சி-60 ராக்​கெட் மூலமாக இன்று (டிச.30) இரவு விண்​ணில் செலுத்​தப்​படு​கின்றன. விண்​வெளி ஆராய்ச்​சி​யில் பல்வேறு சாதனைகளை இந்திய விண்​வெளி ஆய்வு நிறு​வனம் (இஸ்ரோ) நிகழ்த்தி வருகிறது. தற்போது எதிர்கால தேவையை கருத்​தில் கொண்டு பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ஆய்வு மையத்தை 2035-ம் ஆண்டுக்​குள் விண்​வெளி​யில் நிறுவ இஸ்ரோ திட்​ட​மிட்​டுள்​ளது. அதற்கான முன்​த​யாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன....