Google search engine
மத்திய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கான பங்கை குறைக்கும் முடிவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். ராமதாஸ்: மத்திய அரசின் வரி வருவாய் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பங்கின் அளவை இப்போதுள்ள 41 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று 16-ம் நிதி ஆணையத்தை கேட்டு கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. மாநிலங்களின் நலன்களுக்கு எதிரான...
இந்திய பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று சென்னை ஐஐடியில் நடைபெற்ற தொழில்நுட்பக் கண்காட்சி தொடக்கவிழாவில் மத்திய கல்வி இணை அமைச்சர் சுகாந்தோ மஜும்தார் பாராட்டு தெரிவித்தார். சென்னை ஐஐடி-யில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பான 2 நாள் தொழில்நுட்ப கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை மத்திய கல்வி இணை அமைச்சர் சுகாந்தோ மஜும்தார் தொடங்கிவைத்துப் பேசியதாவது: கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதுமை கண்டுபிடிப்பு ஆகிய...
ரம்ஜான் நோன்பு நாளை (மார்ச் 2) தொடங்குவதாக அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். ரம்ஜான் மாதத்தின் முந்தைய மாதத்தில் வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் ரம்ஜான் நோன்பு தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும். அந்த வகையில், நாளை (மார்ச் 2) முதல் ரம்ஜான் நோன்பு தொடங்கும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘வெள்ளிக்கிழமை மாலை ரம்ஜான் மாத பிறை...
தமிழகத்தில் திருநெல்வேலி உள்ளி்ட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக இன்று (மார்ச் 1) தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தென் தமிழகத்தில்...
நடிகை விஜயலட்​சுமி அளித்த பாலியல் புகாரில், சீமானிடம் வளசர​வாக்கம் போலீ​ஸார் நேற்று இரவு விசாரணை நடத்​தினர். நாம் தமிழர் கட்சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான். திரைப்பட இயக்​குனராக பணியாற்றிய​போது அவருக்​கும், நடிகை விஜயலட்​சுமிக்​கும் பழக்கம் ஏற்பட்​டது. இந்நிலை​யில், தன்னை திரு​மணம் செய்து கொள்​வ​தாகக் கூறி உடல் ரீதி​யாக​வும், மன ரீதி​யாக​வும் ஏமாற்றி​விட்​டதாக சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்​சுமி சென்னை​யில் உள்ள வளசர​வாக்கம் காவல் நிலை​யத்​தில் 2011-ல் புகார் அளித்திருந்​தார். இதையடுத்து,...
நாடாளுமன்ற தொகுதிகள் மறுவரையறை தொடர்பாக, சென்னையில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும், என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு, சேலம் புறநகர் மாவட்ட அதிமுக, புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி ஆகியவை சார்பில் சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணத்தில் ரத்த தான முகாம் நேற்று நடைபெற்றது. சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். மாநிலங்களவை...
சிறுமி பாலியல் துன்​புறுத்​தலுக்கு உள்ளான விவ​காரம் தொடர்பாக மயிலாடு​துறை ஆட்சியர் மகா​பாரதி தெரி​வித்த கருத்து சர்ச்​சையை ஏற்படுத்​தி​யுள்​ளது. இதற்​கிடையே, அவரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தர​விட்​டுள்​ளது. மயிலாடு​துறை மாவட்டம் சீர்​காழி அருகே​யுள்ள அரசூர் பகுதி​யில் செயல்​பட்டு வரும் அங்கன்வாடி​யில் பயின்று வரும் மூன்றரை வயது சிறுமி ஒருவர், கடந்த 24-ம் தேதி உணவு இடைவேளை​யின்​போது கை கழுவுவதற்காக வெளியே சென்ற நிலையில், அவரைக் காண​வில்லை. ஆசிரியை மற்றும் உதவி​யாளர்...
நான் சொல்வதை கலெக்​டர், எஸ்.பி. ஆகியோர் கேட்க வேண்​டும் என்று திமுக மாவட்டச் செயலாளர் பேசி​யதாக வெளி​யாகியுள்ள ஆடியோ, சமூக வலைதளங்​களில் வைரலாகி வருகிறது. தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலா​ளராக சில நாட்களுக்கு முன்பு தர்மச்​செல்வன் நியமிக்​கப்​பட்​டார். அவர் தலைமை​யில் நேற்று முன்​தினம் தருமபுரி​யில் கட்சி செயற்​குழுக் கூட்டம் நடந்​தது. இதில் தர்மச்செல்வன் பேசி​யதாக வெளியான ஆடியோ, சமூக ஊடகங்​களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோ​வில், “நான் சொல்வதை...
நாடாளு​மன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்​தில், மக்கள் தொகையை கட்டுப்​படுத்திய தமிழகம் ஏன் பாதிக்​கப்பட வேண்​டும் என்று சென்னை​யில் நடைபெற்ற பிறந்​தநாள் விழா பொதுக்​கூட்​டத்​தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்​டா​லின் கேள்வி எழுப்​பினார். திமுக தலைவரும் தமிழக முதல்​வருமான மு.க.ஸ்​டா​லினின் 72-வது பிறந்​தநாள் விழா பொதுக்​கூட்டம் சென்னை கொட்​டிவாக்கம் ஒய்எம்சிஏ மைதானத்​தில் நேற்று நடைபெற்​றது. இதற்கு திமுக பொதுச்​செய​லாளர் துரை முருகன் தலைமை தாங்​கினார். மு.க.ஸ்​டா​லின் ஏற்புரை​யாற்றி பேசி​ய​தாவது: கடந்த 2019-ம் ஆண்டு முதல்...
தினசரி பால் கொள்முதலை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மேலாளர்களுக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவுறுத்தினார் அனைத்து மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் உள்ள பொது மேலாளர்கள் மற்றும் இணையத்தில் உள்ள அனைத்து துறைத் தலைவர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில், பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஆவின் பொது மாவட்ட கூட்டுறவு...