Google search engine
பின்​னணி பாடகர்​கள் திருச்சி லோக​நாதன், சீர்​காழி கோவிந்​த​ராஜன், இசையமைப்​பாளர் எம்​.எஸ்​.​விஸ்​வ​நாதன் ஆகியோரின் பெயர்களை, அவர்​கள் வசித்த தெருக்களுக்கு சூட்​டி, அதன் பெயர் பலகைகளை முதல்​வர் ஸ்​டா​லின் திறந்து வைத்​தார். இதுகுறித்து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: பழம்​பெரும் பின்​னணிப் பாடகரும், தமிழக அரசின் கலை​மாமணி விருதும், அண்​ணா​வால் இசைத்​தென்​றல் பட்​டம் பெற்​றவரும், 2 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட திரைப்​பாடல்​களைப் பாடிய​வரு​மான திருச்சி லோக​நாதனின் கலைச்​சேவையை சிறப்​பிக்​கும் வகை​யில் அவர் வசித்​து​வந்த மந்​தைவெளிப்​பாக்​கம்...
மாநகர் போக்​கு​வரத்து கழகம் வெளி​யிட்ட செய்திக் குறிப்பு: எழும்​பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரண​மாக சென்னை கடற்​கரை - தாம்​பரம் - செங்​கல்​பட்டு மார்க்​கத்​தில் இயக்​கப்​படும் புறநகர் மின்​சார ரயில்​களின் சேவை​யில் வரும் பிப்​. 20 முதல் ஏப்​ரல் 5 வரை 45 நாட்​களுக்கு மாற்​றம் செய்யப்​பட்​டுள்​ளது. மாநகர் போக்​கு​வரத்து கழகம் தற்​போது ராயபுரம் தற்​காலிக பேருந்து நிலை​யத்​தில் இருந்து தாம்​பரம், கிளாம்​பாக்​கம் வழி​யாக கூடு​வாஞ்​சேரி வரை இயக்​கப்​படும்...
தமிழகம் வளர்ச்சி மாநில​மாக தொடர இளைஞர்​கள் துணை நிற்க வேண்​டும். அடுத்து அமைய இருக்​கும் திரா​விட மாடல் 2.0 ஆட்​சி​யில் இன்​னும் பல திட்​டங்​கள் வரிசை கட்ட இருக்​கின்றன என்று ‘சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்​நாடு’ விழா​வில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​தார். தமிழக இளைஞர் நலன், விளை​யாட்டு மேம்​பாட்​டுத் துறை சார்​பில் ‘சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்​நாடு’ விழா சென்னை நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் நேற்று நடை​பெற்​றது. இந்த விழா​வில், விளை​யாட்டு வீரர்​களுக்​கான 3...
மும்பை பெண் மருத்​து​வருக்கு நவீன சிகிச்சை மூலம் மீண்​டும் பார்​வைத்​திறனை வழங்கி டாக்​டர் அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ​மனை சாதனை படைத்​துள்ளது. மும்​பையை சேர்ந்த 44 வயதான மகப்​பேறியல் பெண் மருத்​து​வர் ஒரு​வருக்​கு, கடுமை​யான கண் அழுத்த நோய் (குளுக்​கோ​மா) மற்​றும் தவறாகப் பொருத்​தப்​பட்ட செயற்கை லென்ஸ் காரண​மாக 2 கண்​களி​லும் பார்வை முற்​றி​லும் பறி​போ​யிருந்​தது. ஏற்​கெனவே பல இடங்​களில் அறுவை சிகிச்​சைகள் செய்​தும் பலன் கிடைக்​காத நிலை​யில், அந்த மருத்​து​வர் சென்னை...
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயதான பார்த்திபன், சென்னையில் மின்சாதனப் பழுது நீக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் அவருக்கு முதுகெலும்பைப் பிளப்பது போன்ற தாங்க முடியாத வலியும், கடுமையான வயிற்று வலியும் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், இதயத்திலிருந்து உடலின் முக்கிய உறுப்புகளுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் பெருந்தமனி வெடித்திருப்பது கண்டறியப்பட்டது. மேலும், சுமார் 1.5 லிட்டர் ரத்தம் கசிந்து நுரையீரல் மற்றும்...
விழுப்​புரம் மாவட்​டம் கிளியனூர் பஞ்​சா​யத்து தலை​வர் பதவிக்​கான தேர்​தல் முன்​விரோதத்​தில் பெட்​டிக்​கடைக்​காரரை கொலை செய்த வழக்​கில் விடுவிக்​கப்பட்ட, முன்​னாள் பஞ்சா​யத்து தலைவி மற்​றும் அவரது மகன்​கள் உள்​ளிட்ட 21 பேருக்கு உயர் நீதி​மன்​றம் ஆயுள் தண்​டனை விதித்​துள்​ளது. கிளியனூர் அரு​கே​யுள்ள காட்​ராம்​பாக்​கத்​தைச் சேர்ந்த முன்​னாள் பஞ்​சா​யத்து தலை​வர்​களான கிருஷ்ணவேணி தரப்​புக்​கும், வில்​வ​மணி தரப்​புக்​குமிடையே தேர்​தல் முன்​விரோதம் இருந்​துள்​ளது. இந்​நிலையில், அங்கு பெட்​டிக்​கடை நடத்தி வந்த பாஸ்​கர் என்​பவர், வில்​வ​மணிக்கு ஆதர​வாக...
தமிழக இடைக்கால பட்ஜெட்டை வரவேற்றும், அதிருப்தி தெரிவித்தும் பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர். திருச்சி ஏற்றுமதி இறக்குமதி கூட்டமைப்பின் தலைவர் என்.கனகசபாபதி: சிறு, குறு ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் தாமதமான பணப் பட்டுவாடா பிரச்சினைக்கு தீர்வாகவும், நிதி ஆதாரத்தின் உயிர்நாடியாகவும் விளங்கும் TN TReDS என்ற தளத்துக்கு தமிழக அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதுவரை ரூ.5,171 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகள் மூலம் எம்எஸ்எம்இ துறைக்கு உதவியிருப்பதை பாராட்டுகிறோம். இந்த நிதிசார்ந்த நடவடிக்கைகள்...
தமிழக அரசு துறை​களுக்​கான ஊழியர்​களை தேர்வு செய்​யும் பணியை டிஎன்பிஎஸ்சி எனப்​படும், தமிழ்​நாடு அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் மேற்​கொண்டு வரு​கிறது. அந்த வகை​யில், சார்​-ப​தி​வாளர், உதவி தொழிலா​ளர் ஆய்​வாளர், சிறைத்​துறை நன்​னடத்தை அலு​வலர், முது​நிலை வரு​வாய் ஆய்​வாளர் உள்​ளிட்ட பதவி​களுக்​கான குரூப்-2 மற்​றும் குரூப்-2 மெயின் தேர்​வு​கள் கடந்த 8-ம் தேதி காலை​யும், பிற்​பகலும் நடை​பெறு​வ​தாக இருந்​தன. ஆனால், அன்​று காலை​யில் சென்​னை​யில் 3 தேர்வு மையங்​களில் தேர்​வர்​களுக்கு இடங்​கள் ஒதுக்​கு​வ​தில்...
புதுக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் தவெகவில் இணைந்தார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே நம்பம்பட்டியைச் சேர்ந்தவர் என்.சுப்பிரமணியன் (57). அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான இவர் வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் விருப்ப மனு அளித்திருந்தார். நேர்காண லிலும் பங்கேற்றார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் அதிமுகவில் இருந்து விலகி, விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். இதுதொடர்பாக அவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது: எம்ஜிஆர்,...
எழும்​பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரண​மாக, சென்னை கடற்​கரை - தாம்​பரம், செங்​கல்​பட்டு மார்க்​கத்​தில் மின்​சார ரயில்​களின் சேவை​யில் கடந்த 5-ம் தேதி முதல் வரும் ஏப்​.5-ம் தேதி வரை 45 நாட்​களுக்கு சுமார் 44 ரயில் சேவை​கள் ரத்து செய்​யப்பட உள்​ளன. இதுகுறித்​து, தெற்கு ரயில்​வே​யின் சென்னை கோட்ட மேலா​ளர் சைலேந்​திர சிங் நேற்று கூறிய​தாவது: சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் மேற்​கொள்​ளப்​படும் மறுசீரமைப்பு பணி​கள் காரண​மாக,...