Google search engine
அ​தி​முகவை தோழமை கட்​சி​யாக கரு​தியே அவர்​களது கூட்​டணி குறித்து விமர்​சிக்​கிறேன் என்று விசிக தலை​வர் திருமாவளவன் தெரி​வித்​துள்​ளார். சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: அதி​முக கூட்​ட​ணி​யில் இருந்து நான் வெளி​யேறியபோது, ‘‘தம்பி திருமாவளவன் எங்​கிருந்​தா​லும் வாழ்​க’’ என முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா என்னை வாழ்த்​தி​னார். அவருக்கு தம்​பி​யாக களத்​தில் நான் பணி​யாற்​றியது அதி​முக தலை​வர்​களுக்கு தெரி​யும். பாஜக​வால் அதி​முக​வுக்கு ஏற்​படும் பாதிப்பு குறித்து பழனிசாமி அறி​யாமல் இருக்​கிறார். அதி​முக - பாஜக...
 மத்​திய தொழிற்​சங்​கங்​களின் நாடு தழு​விய பொது வேலை நிறுத்​தத்​தின் ஒரு பகு​தி​யாக, பல்​வேறு கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, சென்​னை​யில் எழும்​பூர், சென்ட்​ரல், பெரம்​பூர் உள்​ளிட்ட பல்​வேறு இடங்​களில் எஸ்​ஆர்​எம்​யு, டிஆர்​இ​யு, எஸ்​ஆர்​இஎஸ் உள்​ளிட்ட ரயில்வே தொழிற்​சங்​கத்​தினர் நேற்று கண்டன ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். தனி​யார்​மய​மாக்​கல், பெரு (கார்ப்​பரேட்) நிறு​வனங்​களுக்கு ஆதர​வான மத்​திய அரசின் கொள்​கைகளை கண்​டித்​து, மத்​திய தொழிற்​சங்​கங்​கள் சார்​பில், நாடு தழு​விய வேலை நிறுத்​தம் நேற்று நடை​பெற்​றது. இதன் ஒரு பகு​தி​யாக,...
பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் தைலாபுரத்தில் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. அப்போது நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டார். ராமதாஸின் லெட்டர் பேடில் இருந்தும் அன்புமணியின் பெயர்...
பராமரிப்​புப் பணி​கள் காரண​மாக மெரினா நீச்​சல் குளம் நாளை முதல் ஜூலை 31 வரை இயங்​காது. இது தொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​ குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநகராட்சி சார்​பில் மெரினா கடற்கரை​யில் நீச்​சல்குளம் பராமரிக்கப்​பட்டு வரு​கிறது. பொது​மக்​கள் கட்டண அடிப்​படை​யில் பயன்​படுத்த அனு​ம​திக்​கப்​பட்டு வரு​கின்​றனர். இந்த நீச்​சல் குளத்​தில் தண்​ணீர் சுத்​தி​கரிப்பு மையம் தங்​கு தடை​யின்றி இயங்க ஏது​வாக, 135 மீ குழாய் அமைத்​தல், 1.80 மீ. விட்​டம்...
 திருவாரூரில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சுமார் 4 கி.மீ தூரம் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார். தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள 2 நாள் பயணமாக நேற்று பிற்பகல் திருவாரூர் வந்தார். காட்டூர் கலைஞர் கோட்டத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்த அவர், பின்னர் அங்குள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து, பவித்திர...
பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணி நேற்று தொடங்கியது. முதல்கட்டமாக 5 கிராமங்களைச் சேர்ந்த 19 பேரின் 17.52 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 19 கிராமங்களில் புதிய பசுமைவெளி விமான நிலையம் அமைக்க 2023 அக்டோபர் 31-ல் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு உயர்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று நில உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்ததாகவும், அதன்படி...
தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகம் தொலை​தூரக்​கல்வி வாயி​லாக பல்​வேறு பாடப்​பிரிவு​களில் இளங்​கலை, முதுகலை, டிப்​ளமோ மற்​றும் சான்​றிதழ் படிப்​பு​களை நடத்தி வரு​கிறது. தொலை​தூரக்​கல்​வி​யில் சேரும் மாணவர்​களுக்கு செமினார் வகுப்​பு​கள் நடத்​து​வதற்​கும், பாடப்​புத்​தகங்​கள் விநி​யோகம் தொடர்​பான இதர பணி​களைக் கவனிப்​ப​தற்​கும் உதவி பேராசிரியர்​கள் மற்​றும் இணை பேராசிரியர்​கள், பேராசிரியர்​கள் என 40-க்​கும் மேற்​பட்​டோர் உள்​ளனர். இந்​நிலை​யில், அண்​மை​யில் நடந்த பல்​கலைக்​கழக நிதிக்​குழு கூட்​டத்​தி​லும், தொடர்ந்து நடை​பெற்ற சிண்​டிகேட் கூட்​டத்​தி​லும், இந்த பேராசிரியர்​களை, ஆசிரியர்...
​சென்னை தேனாம்​பேட்​டை​யில் காங்கிரஸ் அறக்​கட்​டளைக்கு சொந்​த​ மாக பல கோடி ரூபாய் மதிப்​புள்ளநிலம் உள்ளது. காம​ராஜர் அரங்​கத்​துக்கு அரு​கில் அமைந்துள்ள இந்த நிலத்​தில் வணிக வளாகம் கட்​டு​வதற்​காக ப்ளூ பேர்ல் என்ற தனியார் நிறு​வனத்துடன் காங்கிரஸ் அறக்​கட்​டளை கடந்த 1996-ம் ஆண்டு ஒப்​பந்​தம் செய்​தது. அதன்​பிறகு அந்த நிறு​வனம் வசம் ஒப்​படைக்​கப்​பட்ட அந்த நிலத்தை பராமரிப்பது தொடர்​பாக ஆட்​சேபமில்லா சான்று வழங்கப்படாத​தால் கட்​டு​மானப் பணி​கள் தொடங்​கப்​பட​வில்​லை. இந்​நிலை​யில் தனி​யார் நிறு​வனத்​துடன்...
ராஜ்​தானி, துரந்​தோ, சதாப்தி உள்​ளிட்ட விரைவு ரயில்​களில் டைனமிக் கட்டண முறையை நீக்​கக் கோரி, ரயில்வே அமைச்​சருக்கு அகில பார​திய கிராஹக் பஞ்​சா​யத்து நுகர்​வோர் அமைப்பு நிர்​வாகி​கள் மனு அளித்​தனர். புதுடெல்​லி​யில், ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவை அகில பார​திய கிராஹக் பஞ்​சா​யத்து நுகர்​வோர் அமைப்பு (ஏ.பி.ஜி.பி. நுகர்​வோர் அமைப்​பு) நிர்​வாகி​கள் அண்​மை​யில் சந்​தித்​து, பிரீமி​யம் ரயி​லில் டைனமிக் கட்டண முறையை நீக்​கு​வது உட்பட பல்​வேறு கோரிக்​கைகள் தொடர்​பாக...
ஈ​ரான் நாட்​டில் சிக்​கித் தவித்த தமிழக மீனவர்​கள் 15 பேர் மத்​திய வெளி​யுறவுத் துறையின் முயற்​சி​யால் மீட்​கப்​பட்டு சென்னைக்கு அழைத்து வரப்​பட்​டனர். சென்னை விமான நிலை​யத்​தில் அவர்​களை வரவேற்ற தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், அனைத்து செல​வு​களை​யும் தமிழக பாஜக ஏற்​றுள்​ள​தாக தெரி​வித்​தார். ஈ​ரானில் சிக்​கித் தவித்த தமிழகத்​தின் திருநெல்​வேலி மாவட்​டம் உவரியை சேர்ந்த 15 மீனவர்​கள், மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சகத்​தின் மூலம் மீட்​கப்​பட்​டனர். ஈரானிலிருந்து கப்​பலில்...