வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்
admin - 0
வளைகுடா நாடுகளில் போர் பரவியுள்ளதால் அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஈரான் மீதான தாக்குதலால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி: ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதட்டமான சூழலை கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் மற்றும் பணிபுரியும் நம்...
இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நடந்து வருவதால், மத்திய கிழக்கு பகுதிகளில் விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்துக்கு துபாய், அபுதாபி, பஹ்ரைன், மஸ்கட் ஆகிய நாடுகளுக்கு இயக்கப்படும் 16 வருகை விமானங்களும், புறப்பாடு விமானங்கள் 12 என, மொத்தம் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
2-ம் நாளான நேற்று சென்னையில் இருந்து துபாய், அபுதாபி, சார்ஜா, பஹ்ரைன், குவைத், மஸ்கட் உள்ளிட்ட 17...
தமிழகத்தில் ரூ.378 கோடியில் 8 அம்ரித் பாரத் நிலையங்கள் திறப்பு மற்றும் கடற்கரை - எழும்பூர் 4-வது பாதை நாட்டுக்கு அர்ப்பணிப்பு ஆகிய ரயில் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, மதுரையில் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை நேற்று தொடங்கி வைத்தார். இவற்றில், ரயில்வே துறையில் ரூ.378 கோடி மதிப்பில், மேம்படுத்தப்பட்ட 8 அம்ரித் பாரத் ரயில் நிலையங்களை திறந்து வைத்தார். சென்னை எழும்பூர் -...
தமிழகத்தில் சென்னை, புதுக்கோட்டை, சிதம்பரத்தில் தலா ஓர் அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகின்றன. இவை தவிர அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட, தாலுகா, மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல் மருத்துவப் பிரிவுகள் உள்ளன.
மொத்தம் 565 அரசு பல் மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் 400-க்கும் மேற்பட்ட பல் மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். சிறப்பு தேர்வு மூலம் பணிநிரந்தரம் செய்யப்படாததால்,...
வருவாய்த் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மூட்டைகளை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்கு, அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் வழங்கும் அடையாள சான்று கட்டாயமாகும்.
இந்தச் சான்று இருந்தால் மட்டுமே கொள்முதல் நிலையங்களில் நெல்லை...
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் துறைமுகம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பிராட்வே, டேவிட்சன் தெருவில் ரூ.27.50 கோடியில் 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்கத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டி தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பங்கேற்று கீழ்நிலைநீர்த்தேக்கத் தொட்டியின் செயல்பாட்டைத் தொடங்கிவைத்தனர்.
இத்திட்டத்தின்...
சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட உள்ளதாக மனிதநேய ஜனநாயகக் கட்சி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மனிதநேய ஜனநாயகக் கட்சியின் 10-ம் ஆண்டு நிறைவு விழா மற்றும் செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் மு.தமிமுன் அன்சாரி தலைமையில், சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது.
‘வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிப்பதுடன், 234 தொகுதிகளிலும் கூட்டணி கட்சியினரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு பெயரில் நுழைவுவாயில்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் பயன்பாடற்ற 34 கிலோ நகைகளை உருக்கி தங்கக் கட்டியாக மாற்ற வங்கியிடம் ஒப்படைப்பு
admin - 0
இந்து சமய அறநிலையத் துறைகட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்களிடமிருந்து காணிக்கையாகப் பெறப்பட்டு பயன்படுத்த இயலாத பொன் இனங்களில் கல், அரக்கு, அழுக்குநீக்கப்பட்டு, மும்பையில் உள்ள மத்திய அரசின் தங்கஉருக்காலையில் உருக்கி, பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி ராஜு, ரவிச்சந்திர பாபு, செல்வி மாலா ஆகியோரின் கண்காணிப்பில்...
சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
admin - 0
சென்னை உயர் நீதிமன்றத்தி்ன் புதிய தலைமை நீதிபதியாக கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றி வரும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சுஷ்ருத் அர்விந்த் தர்மாதிகாரியை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மார்ச் 5-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறவுள்ளார்.
அதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக தற்போது கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப்...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 14 பேருக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டி ருந்தது. இவர்களுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீனில் இருந்த அஞ்சலை, பொற்கொடி தவிர்த்து எஞ்சிய அஸ்வத்தாமன், பிரதீப், ஹரிஹரன், சதீஷ்குமார், சிவா, புதூர் அப்பு,...










