Google search engine
 ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக கடும் குளிர் நிலவி வரும் சூழலில் பள்ளிகளுக்கு பிப்ரவரி 28 வரை குளிர்கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக கடும் குளிர் நிலவி வருகிறது. நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 3 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது.இந்நிலையில் ஜம்முவின் குளிர் மண்டலம் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் குளிர்கால...
வாக்​குரிமையை தவறாமல் பயன்​படுத்தி ஜனநாயகத்தை வலுப்​படுத்த வேண்​டியது நமது பொறுப்பு என அரசமைப்பு தினத்​தில் பிரதமர் மோடி வலி​யுறுத்தி உள்​ளார். நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு உரு​வாக்​கப்​பட்ட அரசி​யல் சாசன வரைவு, இந்​திய அரசி​யல் நிர்ணய சபை​யால் கடந்த 1949-ம் ஆண்டு நவம்​பர் 26-ம் தேதி ஏற்​றுக் கொள்​ளப்​பட்​டது. இதையொட்டி ஆண்​டு​தோறும் நவம்​பர் 26-ம் தேதி அரசி​யலமைப்பு தின​மாக கொண்​டாடப்​படும் என கடந்த 2015-ம் ஆண்டு மத்​திய அரசு அறி​வித்​தது. இதன்​படி,...
உத்தர பிரதேசம், தமிழ்​நாடு, புதுச்​சேரி உள்​ளிட்ட 11 மாநிலங்​களில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்​ஐஆர்) நடை​பெற்று வரு​கிறது. இந்​தப் பணியை வரும் டிசம்பர் 4ம் தேதிக்​குள் முடிக்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், பணிச்​சுமை காரண​மாக எஸ்​ஐஆர் பணி​யில் ஈடுபட்டுள்ள அதி​காரி​கள் தற்​கொலை செய்து கொள்​ளும் சம்பவம் ஆங்​காங்கே நடை​பெறுகிறது. இந்​நிலை​யில், எஸ்​ஐஆர் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டிருந்த உத்தர பிரதேச மாநிலம் பதேபூரைச் சேர்ந்த அதி​காரி சுதிர் குமார் (25)...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இதையடுத்து, எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் ஜீலம் நதியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள உரி நீர் மின் நிலையத்தை குறிவைத்தும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிஐஎஸ்எப் வீரர்கள் பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு...
 மும்​பை​ தாக்குதலின்போது அஜ்மல் கசாப் துப்பாக்கியால் சுட்​டபோதும், தப்​பித்த மும்பை பெண் அந்த பயங்கர​மான இரவை நினைவு கூர்ந்​துள்ளார். 2008-ம் ஆண்டு நவம்​பர் 26-ம் தேதி மகா​ராஷ்டிர மாநிலம் மும்பைக்கு இரவில் படகில் வந்த பாகிஸ்​தான் தீவிர​வா​தி​கள் 10 பேர் சரமாரி​யாக துப்​பாக்​கி​யால் சுட்​டுத் தாக்​குதல் நடத்​தினர். இதில் 166 பேர் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதல் நடந்து நேற்றுடன் 17 ஆண்​டு​கள் நிறைவடைந்துள்ளது. இந்த தாக்குதலில் உயிர் பிழைத்த மும்பை பெண்...
நாட்​டின் வர்த்தக தலைநக​ரான மும்​பை​யில் போக்​கு​வரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதி​கரித்து வரு​கிறது. இதுதொடர்​பாக மகா​ராஷ்டிர முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ் மும்​பை​யில் நேற்று கூறிய​தாவது: மும்​பை​யில் புதிய சாலைகள், மெட்ரோ வழித்​தடங்​கள் அமைக்​கப்​பட்டு வரு​கின்​றன. தற்​போது மும்பை பெருநகர போக்​கு​வரத்​தின் சராசரி வேகம் ஒரு மணிக்கு 20 கி.மீ. ஆக இருக்​கிறது. காலை, மாலை நேரங்​களில் 15 கி.மீ. ஆக இருக்​கிறது. மும்​பை​யின் போக்​கு​வரத்து நெரிசல் பிரச்​சினைக்கு தீர்வு காண சுரங்​கப்...
மேற்கு வங்​கம், தமிழ்​நாடு உள்​ளிட்ட 11 மாநிலங்​களில் வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்​தப் பணி நடை​பெற்று வரு​கிறது. இந்​நிலை​யில் மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி தலை​மைத் தேர்​தல் ஆணை​யத்​துக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறி​யுள்​ள​தாவது: மே.வங்​கத்​தில் அவசர அவசர​மாக வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்​தப் பணி நடை​பெற்று வரு​கிறது. வாக்​குச்​சாவடி நிலை அதி​காரி​கள் மீதான அழுத்​தம் காரண​மாக பலர் தற்​கொலை செய்​து​ கொண்​டனர். இந்​நிலை​யில் தற்​போது இந்​தப் பணி​களில்...
டெல்லில் காற்று மாசுபாட்டின் அளவை அரசு கட்டுப்படுத்த தவறியதாக கூறி நகரின் பல இடங்களில் மக்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்தியா கேட் பகுதியில் டெல்லி ஒருங்கிணைப்பு கமிட்டி சார்பில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் ஆம்புலன்ஸ்கள், மருத்துவ குழுக்கள் செல்வது தடைபட்டுள்ளதால் அவற்றுக்கு வழிவிடுமாறு போலீஸார் கேட்டுக்கொண்டனர். எனினும் போராட்டக்காரர்கள் நகர மறுத்ததால் அவர்களை போலீஸார் பலவந்தமாக அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது சிலர் போலீஸார் மீது...
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் சனத் நகரில் இஎஸ்ஐ மருத்துவமனை உள்ளது. இங்கு அவசர சிகிச்சை பிரிவில் சில நாட்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இதனால் நோயாளிகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர். சுமார் 20-க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் இங்கு பணியாற்றி வந்தனர். நேற்றும் வழக்கம்போல் மேற்கூரையில் பராமரிப்புப் பணிகளை தொழிலாளர்கள் மேற்கொண்டனர். அப்போது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் கீழ் தளத்தில் பணி செய்து கொண்டிருந்த 3...
காற்று தரக் குறியீடு (ஏ.கியூ.ஐ.) 6 வகைகளாக தரம் பிரிக்கப்பட்டிருக்கிறது. 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் பாதுகாப்பானது. 51-100 புள்ளிகள் இருந்தால் மிதமானது. 101 முதல் 150 புள்ளிகள் இருந்தால் நோயாளிகளின் உடல்நலத்துக்கு தீங்கானது. 151 முதல் 200 புள்ளிகள் வரை இருந்தால் ஆரோக்கியமான மக்களின் உடல் நலனுக்கும் தீங்கு விளைவிக்கும். 201 முதல் 300 வரை இருந்தால் மக்களின் உடல்நலனுக்கு அதிக தீங்கினை விளைவிக்கும். 301 முதல் 500...