மேற்கு வங்கத்தில் பாஜக அபார வெற்றிக்கு அதிபர் ட்ரம்ப் வாழ்த்து; பிரதமர் மோடிக்கு சர்வதேச ஊடகங்கள் புகழாரம்
admin - 0
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. மொத்தம் 293 தொகுதிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 207 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு உள்ளன.
பிரிட்டனை சேர்ந்த பிபிசி, ‘‘மோடியின் பாஜக வங்கத்தை வென்றிருக்கிறது’’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு உள்ளது. பல்வேறு சவால்கள் நிறைந்த மேற்குவங்கத்தில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இது மோடி ஆட்சியின் முக்கிய மைல்கல் என்று பிபிசி...
ஜம்மு- காஷ்மீரில் ‘போதைப் பொருள் இல்லாத ஜம்மு- காஷ்மீர் அபியான்' திட்டத்தின் கீழ், போதைப் பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தை துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி வைத்தார்.
இதன் ஒரு பகுதியாக போதைப் பொருள் தடுப்பு சோதனை நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் போது 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் காஷ்மீர் மண்டலத்தில் ரூ.12.66 லட்சம் மதிப்பிலான 6...
இந்தியா மற்றும் ஜமைக்கா நாடுகளுக்கு இடையே பல் வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. ஜமைக்கா நாட்டுக்கு 9 நாள் பயணமாகச் சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் காமினா ஜே.ஸ்மித்தை திங்கள்கிழமை சந்தித்து விரிவாகப் பேசினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் ஜெய்சங்கர் கூறியதாவது: டிஜிட்டல் பரிமாற்றம், கலாச்சாரம், விளையாட்டு மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஆகிய துறைகளில் சமீபத்தில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
கரீபியன் நாடுகளுக்கான...
பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணியில் முதல்வர் நிதிஷ் குமார் மாநிலங்களவை எம்.பி.யானார். இதனால் முதல்வராக பாஜக மூத்த தலைவர் சாம்ராட் சவுத்ரி பிஹாரின் புதிய முதல்வராக பதவியேற்றார்.
ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பிஜேந்திர பிரசாத் யாதவ், விஜய் குமார் சவுத்ரி ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவியேற்றனர். இந்த சூழலில் பிஹார் அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது.
பாஜகவை சேர்ந்த 12 பேர், ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த...
வியட்நாம் அதிபர் தோலாம், நேற்று 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று பிஹார் மாநிலம் கயாவுக்கு அவர் வருகை தந்தார். இதையொட்டி கயா விமான நிலையத்துக்குச் சென்ற முதல்வர் சாம்ராட் சவுத்ரி, அதிபர் தோ லாமுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தார்.
இது குறித்து தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் முதல்வர் சாம்ராட் கூறும்போது, “வியட்நாம் அதிபரின் வரலாற்றுச் சிறப்புமிக்க வருகை, ஏற்கெனவே வலுவாகவும், பிணைப்பாகவும் உள்ள இந்தியா-வியட்நாம் உறவுகளை சந்தேகமின்றி...
மேற்குவங்கத்தில் 207 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக அபார வெற்றி பெற்றிருக்கிறது. திரிணமூல் காங்கிரஸுக்கு 80 தொகுதிகள் கிடைத்துள்ளன.
மேற்குவங்கத்தில் மொத்தம் 294 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு கடந்த 23, 29-ம் தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன. இதில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நிலவியது.
ஒரு தொகுதியில் மறுதேர்தல்: கடந்த...
கேரள சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அபார வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது.
கேரள சட்டப்பேரவையில் 140 தொகுதிகள் உள்ளன. இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும்(எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்(யுடிஎஃப்) கடும் போட்டி இருந்தது.
மொத்தமுள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஐக்கிய ஜனநாயக முன்னணியில் காங்கிரஸ் 95 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 27...
ஐந்து மாநிலங்களில் உள்ள 7 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 2 தொகுதிகளில் காங்கிரஸ், ஒரு தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
குஜராத், நாகாலாந்து, திரிபுரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 7 தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாயின. இதில் குஜராத்தின் உம்ரேத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹர்சத்பாய் கோவிந்த்பாய் பர்மர் வெற்றி பெற்றார். நாகாலாந்து கோரிடாங் தொகுதியில்...
தமிழக சட்டப்பேரவை தேர்தல் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்றுள்ளது.
இது குறித்து ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் வெளியிட்டுள்ள செய்தியில், ”தமிழ்நாட்டில் விஜய் பெரும்பான்மையான மக்களின் மனதை வென்று, வெற்றிக் கனியை பறித்துள்ளார். கட்சியை தொடங்கிய சிறிது காலத்திலேயே மாபெரும் வெற்றியை ருசித்த விஜய்யை நான் மனதார வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும், கல்வி அமைச்சருமான லோகேஷ் தனது...
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி) தலைவர் மம்தா பானர்ஜி கடந்த 15 ஆண்டுகளாகக் கட்டி எழுப்பியிருந்த கோட்டையை பாஜக தகர்த்துள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்த 2011-ல் டிஎம்சி முதன்முறையாக ஆட்சிக்கு வந்தது. இடதுசாரி கட்சிகளின் கோட்டையாக திகழ்ந்த பகுதிகளைத் தகர்த்து, மம்தா பானர்ஜி வரலாற்றுச் சாதனை படைத்தார். எனினும், கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த டிஎம்சிக்கு எதிராக, ‘ஆட்சியாளர் மீதான அதிருப்தி அலை' உருவானது.
மேற்கு வங்கத்தில் சுமார்...










