Google search engine
பிரதமர் மோடி கடந்த சனிக்கிழமை ஒரு புகைப்படத்தை இன்​ஸ்​டாகி​ராமில் வெளி​யிட்​டார். அவர் வெளியிட்ட பதி​வில், “எனது வீட்​டுக்கு வந்த சின்​னஞ்​சிறு நண்பனுடன்​...” என்று குறிப்​பிட்​டிருந்​தார். அந்த புகைப்​படம் வைரலாகப் பரவி வரு​கிறது. பிரதமர் மோடியுடன் இருக்​கும் சின்​னஞ்​சிறு நண்​பன் யார் என்ற கேள்வி அனை​வரை​யும் துளைத்​தெடுத்​தது. நீண்ட தேடலுக்​குப் பிறகு அந்த சிறு​வன் கேரளாவை சேர்ந்த பிரபல நடிகரும் பாஜக மூத்த தலை​வரு​மான கிருஷ்ணகு​மாரின் பேரன் நியோம் என்​பது தெரிய​வந்​துள்​ளது....
 பிரதமர் மோடி நேற்று அரசுப் பதவியில் 8,931 நாட்​களைப் பூர்த்தி செய்​து, இந்​தி​யா​வில் மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவி​யில் இருந்​தவர் என்ற சாதனையைப் படைத்தார். இதற்கு முன்பு சிக்​கிம் மாநில முதல்​வ​ராக 24 ஆண்​டு​களுக்​கும் மேலாக (8,930 நாட்​கள்) பதவி வகித்த பவன் குமார் சாம்​லிங்​கின் சாதனையை பிரதமர் மோடி முறியடித்​துள்​ளார். பிரதமர் நரேந்திர மோடி அக்​டோபர் 7, 2001 முதல் மே 21, 2014 வரை தொடர்ந்து...
அமெரிக்​கா​வின் டெக்​சாஸ் மாகாணத்​தில் இருந்து 47,000 டன் சமையல் காஸ் ஏற்றி வந்த கப்​பல் நேற்று கர்​நாட​கா​வின் மங்​களூருக்கு வந்து சேர்ந்​தது. அமெரிக்​கா, இஸ்​ரேல் மற்​றும் ஈரான் இடையி​லான போரால் இந்​தி​யா​வில் சமையல் காஸுக்கு தட்​டுப்​பாடு ஏற்​பட்​டது. இது குறித்து ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி​யில் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். அதன் பிறகு ஈரான் ராணுவத்​தின் சிறப்பு அனு​ம​தி​யுடன் ஷிவாலிக் கப்​பல், நந்தா தேவி கப்​பல்,...
அசாம் பேரவை தேர்​தல் அடுத்த மாதம் 9ம் தேதி நடை​பெறவுள்​ளது. இதற்​காக அங்கு பாது​காப்பு ஏற்​பாடு​கள் பலப்படுத்​தப்​பட்டுள்ளன. இந்​நிலை​யில் தின்​சுகியா மாவட்​டத்​தின் ஜகுன் பகு​தி​யில் போலீஸ் கமாண்​டோ முகாம் அமைக்​கப்​பட்​டிருந்​தது. இந்த இடம் அசாம் - அருணாச்​சலப் பிரதேசம் எல்​லை​யில் அமைந்​துள்​ளது. இங்கு நேற்று அதி​காலை 2 மணி​யள​வில் சிலர் கண்​ மூடித்​தன​மாக துப்​பாக்கி சூடு நடத்​தி, 5 கையெறி குண்​டு​களை வீசினர். இதில் 4 போலீ​ஸார் காயம் அடைந்​தனர்....
மேற்கு வங்​கத்​தில் அடுத்த மாதம் 23 மற்​றும் 29ம் தேதி​களில் 2 கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெறவுள்​ளது. இதை முன்னிட்டு முதல்​வர் மம்தா பானர்ஜி திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி​யின் தேர்​தல் அறிக்​கையை நேற்று முன்​தினம் வெளியிட்டார். அப்​போது அவர் கூறிய​தாவது: திரிண​மூல் காங்​கிரஸ் தலைமையி​லான அரசு மேற்​கு​ வங்​கத்​தில் 15 ஆண்​டு​களை நிறைவு செய்​கிறது. இந்த கால​கட்​டத்​தில் அனைத்து துறைகளிலும் மிகப்பெரிய வளர்ச்​சியை மேற்​கு​ வங்​கம் கண்டுள்ளது. நாங்​கள் எங்​கள் பணி​யின்...
மேற்கு வங்க முதல்வர் மம்தாவை எதிர்த்து போட்டியிடும் சுவேந்து அதிகாரி நேற்று பிரச்சாரம் தொடங்கினார். மேற்கு வங்க மாநிலத்​தில் ஏப்​ரல் 23, 29 ஆகிய தேதி​களில் 2 கட்டமாக சட்​டப்பேரவை தேர்​தல் நடை​பெறவுள்​ளது. இதில் பவானிப்பூர் தொகுதியில் போட்டியிடும் முதல்​வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதி​காரி களமிறங்​கி​யுள்​ளார். இந்​நிலை​யில் தனது தேர்​தல் பிரச்​சா​ரத்தை அவர் பவானிப்​பூரில் நேற்று தொடங்​கி​னார். முன்​ன​தாக சக்​பெரியா சாலை​யில் பாஜக​வின் தேர்​தல்...
குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு நேற்று அயோத்தி ராமர் கோயி​லில் வழிபட்​டார். குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு நேற்று அயோத்​தி​யில் உள்ள ராமர் கோயிலுக்கு வருகை தந்​தார். அங்கு உத்தர பிரதேச மாநில ஆளுநர் ஆனந்​தி பென் படேல், முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத், ஆன்மிக தலைவர் மாதா அமிர்​தானந்​தமயி மற்​றும் முக்​கியப் பிரமுகர்​கள் முன்​னிலை​யில் ஸ்ரீ ராம யந்​திரத்தை அவர் பிரதிஷ்டை செய்​தார். பிறகு பால ராமருக்கு ஆரத்தி காட்டி...
மகா​ராஷ்டிர மாநிலம் நாக்​பூரில் ‘தருண் பாரத்’ என்ற மராத்தி நாளிதழின் நூற்​றாண்டு விழா​வில் பங்​கேற்ற ஆர்​எஸ்​எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசி​ய​தாவது: சமூக ஊடகங்​கள் மக்​களால் பெரு​மள​வில் பயன்படுத்தப்பட்டாலும், அவை நல்ல நோக்​கங்​களு​காகப் பயன்படுத்​தப்பட வேண்டும். மீம்​ஸ்​கள் மற்​றும் ரீல்​ஸ்​கள் ஏற்கெனவே புழக்​கத்​தில் உள்​ளன. ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் தகவல் தொடர்​புத் துறை மூலம் சில உள்​ளடக்​கங்​கள் பரப்பப்படுகின்​றன. மேலும் நமது தன்​னார்​வலர்​களும் சமூக ஊடகங்​களைப் பயன்​படுத்​துகின்​றனர். மேலும் ஆர்​எஸ்​எஸ் அமைப்​பின் பணி​கள்...
பெங்​களூரு குடிநீர் வடி​கால் வாரிய வழக்கை விசாரித்த உச்​ச நீ​தி​மன்ற 7 நீதிப​தி​கள் அடங்​கிய அரசி​யல்​ சாசன அமர்வு மருத்​து​வ​மனை​கள், கல்வி நிலை​யங்​கள், கிளப்​பு​கள், அரசின் நலத்​துறை​களில் பணிபுரி​யும் லட்​சக்​கணக்​கான தொழிலா​ளர்​களை தொழில் தகராறு சட்​டத்​தின் கீழ் கொண்டு வந்து தொழிற்​சாலை என்​ப​தற்​கான வரையறையை அளித்​தது. இதனிடையே இதை எதிர்த்து மத்​திய அரசும், குஜ​ராத், மத்​திய பிரதேசம், ஹரி​யாணா உள்​ளிட்ட மாநில அரசுகளும், பழனி அருள்​மிகு தண்​டா​யுத​பாணி சுவாமி கோயில்...
தொழில்​நுட்​பக் கோளாறு காரண​மாக அயர்லாந்​தின் ஷானன் நகரில் தவித்​துக் கொண்​டிருந்த ஏர் இந்​தி​யா​வின் சிறப்பு விமானம் வியாழக்​கிழமை அதிகாலை தலைநகர் டெல்​லியை வந்​தடைந்​தது. கடந்த திங்​கள்​கிழமை, நியூ​யார்க்​கி​லிருந்து டெல்லி நோக்கி வந்து கொண்​டிருந்த ஏர் இந்​தி​யா​வின் ‘ஏ350’ ரக விமானம் (AI102), திடீர் தொழில்​நுட்​பக் கோளாறு காரணமாக அயர்லாந்​தின் ஷானன் நகருக்​குத் திருப்பிவிடப்​பட்​டது. அங்கு விமானம் தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்​து, அதிலிருந்த 220-க்​கும் மேற்​பட்ட பயணி​களும் ஊழியர்​களும் அங்​கேயே தவிக்கும் சூழல்...