மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டம், தாங்ஸ்கு பகுதியில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் நேற்று காலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
இது குறித்து மாநில காவல்துறை இயக்குநர் நோங்ராங் கூறுகையில், “இதுவரை 16 உடல்களை மீட்டுள்ளோம். வெடி விபத்து ஏற்பட்ட நேரத்தில் சுரங்கத்துக்குள் இருந்த தொழிலாளர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என கருதுகிறோம். வெடி விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படும்"...
அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்துள்ள மனுவில், “அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச திட்டங்களை தேர்தல் முறைகேடு என அறிவிக்க வேண்டும். தேர்தல் அறிக்கைகளில் வெளியிடப்படும் இலவசத் திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த வேண்டும்” என்று கோரியுள்ளார்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு மனுதாரர் அஸ்வினி குமார் உபாத்யாய் முன்வைத்த வாதத்தில் கூறியதாவது: தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற...
மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிதியமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா ரூ.4 லட்சம் கோடியில் 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பெண்களைக் குறிவைத்து, ‘லக்ஷ்மிர் பந்தர்' திட்டத்தின் கீழ் மகளிருக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது.
வேலையில்லாத இளைஞர்களுக்காக யுவ சாத்தி திட்டத்தின் கீழ் 21 முதல் 40 வயதுக்குட்பட்ட வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும்...
ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமாகி மூன்றே மாதத்தில் கணவர் ஆஷிஷை (27) கொலை செய்து, அதை சாலை விபத்தாக ஜோடித்த மனைவி அஞ்சு என்கிற அஞ்சலி (23) மற்றும் அவரது ஆண் நண்பர் சஞ்சு என்கிற சஞ்சய் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் கடந்த மாதம் 30-ம் தேதி ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் பகுதியில் நடந்துள்ளது. முதலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆஷிஷ் உயிரிழந்ததாக...
ஆங்கில மருத்துவத்தை அடுத்து, யுனானி மருத்துவக் கல்வி இந்தியில் போதிக்கப்பட உள்ளது. நாட்டில் முதன்முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் இது அமலாக உள்ளது.
பாஜக ஆளும் ம.பி.யில் ஆங்கில மருத்துவக் கல்வி இந்தியில் துவக்கப்பட்டது. அந்தவகையில் யுனானி மருத்துவ கல்வி இந்தியில் தொடங்கப்பட உள்ளது. யுனானி மருத்துவத்தை இந்தியில் போதிக்க அதன் பாடங்களை ம.பி. அரசு தயார் செய்து வருகிறது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் ஆயுஷ் துறை உருது புத்தகங்களை இந்தியில் மொழி...
மணிப்பூர் முதல்வராக யும்நம் கேம்சந்த் பதவியேற்பு: குகி, நாகா எம்.எல்.ஏ-க்களுக்கு துணை முதல்வர் பதவி
admin - 0
கூட்டணி அரசில் சமூக சமநிலையைப் பேணும் விதமாக, குகி சமூகத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ நெம்சா கிப்ஜென் மற்றும் நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. எல். டிக்ஹோ ஆகியோர் துணை முதல்வர்களாகப் பதவியேற்றனர்.
இதில் நெம்சா கிப்ஜென், டெல்லியில் உள்ள மணிப்பூர் பவனில் இருந்து காணொலி வாயிலாகப் பதவியேற்றுக் கொண்டார்.மேலும், பா.ஜ.க-வின் கோவிந்தாஸ் கொந்தவுஜம், என்.பி.பி கட்சியின் கே. லோகன் சிங் ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர்.
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் புதிய...
உ.பி.யில் கொரியா ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையான 3 சகோதரிகள் 9-வது மாடியிலில் இருந்து குதித்து தற்கொலை
admin - 0
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த வெளிநாட்டு கரன்சி வியாபாரி பாரத் சிட்டி சொசைட்டி என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது தளத்தில் வசித்து வருகிறார். இவருக்கு 16, 14, 12 ஆகிய வயதில் 3 மகள்கள் இருந்தனர்.
இவர்கள் கரோனா காலத்தில் செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்புகளில் பாடம் கற்ற போது ஆன்லைன் விளையாட்டை கற்றுக் கொண்டனர். நாளடைவில் இவர்கள் கொரியன் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகியுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் நேற்று முன்தினம்...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நாடாளுமன்ற வளாகத்தின் `மகர துவார்' பகுதியில் ராகுல் காந்தி, பஞ்சாபைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது மத்திய ரயில்வே இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு அந்த வழியாக வந்தார். அப்போது காங்கிரஸ் எம்.பி.க்களைப் பார்த்த ரவ்னீத்சிங் பிட்டு, ஏதோ போரில் வெற்றி பெற்றவர்கள் போல இங்கு வந்து அமர்ந்திருக்கிறார்கள் என்று கருத்து தெரிவித்தார்.
இதற்கு ராகுல்...
ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டம் ராம்நகர் அருகே உள்ள வனப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு குகையில் இருந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.
இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். அவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கியை கைப்பற்றி உள்ளனர்.
மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: உணவில் உப்பு அதிகமாக சேர்த்துக் கொள்வதால் உயர் ரத்த அழுத்தம், இதயம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் கண்டறிந்துள்ளது.
இதையடுத்து ‘சரியான உணவை உண்பது’ என்ற இயக்கத்தை தேசிய அளவில் முன்னெடுத்துள்ளோம். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் மூலம் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அதிக...
