Google search engine
நேதாஜி சுபாஷ் சந்​திர போஸின் இந்​திய தேசிய ராணுவத்​தில் (ஐஎன்ஏ) மலேசி​யா, சிங்​கப்​பூரை சேர்ந்த இந்​திய வம்​சாவளி​யினர் இணைந்து பிரிட்​டிஷ் படைக்கு எதி​ராக வீர, தீரத்​துடன் போரிட்​டனர். அவர்​களில் பலர் உயிரோடு உள்​ளனர். தற்​போது மலேசிய தலைநகர் கோலாலம்​பூரில் மலேசிய நேதாஜி நல அறக்​கட்​டளை செயல்​படு​கிறது. இந்த அறக்​கட்​டளை​யில் ஐஎன்ஏ படை​ வீரர்​கள், உயி​ரிழந்த வீரர்​களின் வாரிசுகள் உறுப்பினர்​களாக உள்​ளனர். கோலாலம்​பூரில் நேற்று மலேசிய நேதாஜி நல அறக்​கட்​டளை நிர்​வாகி​களை...
”​காங்​கிரஸ் எம்​.பி. கவுரவ் கோகோய், அவரது மனைவி எலிசபெத்​திடம் பாகிஸ்​தான் தொடர்பு குறித்து மத்திய ஏஜென்சி விசா​ரிக்க வேண்​டும்” என்று அசாம் முதல்​வர் ஹிமந்​த பிஸ்வா சர்மா வலி​யுறுத்தி உள்​ளார். அசாம் மாநிலத்​தின் காங்​கிரஸ் எம்​.பி.கவுரவ் கோகோய். இவரது மனைவி பிரிட்​டனைச் சேர்ந்த எலிசபெத் கோல்​பர்ன். இவர்​கள் இரு​வருக்​கும் பாகிஸ்​தானுடன் தொடர்பு இருப்​ப​தாக​ குற்றச்சாட்டு எழுந்​தது. பாகிஸ்​தானின் திட்​டக் குழு ஆலோ​சகர் தவ்​கீர் ஷேக்​கிடம், கவுரவ் மனைவி எலிசபெத் பணி​யாற்றி...
ஹரியானா மாநிலம் பரீதாபாத் அருகில் சூரஜ்குந்த் மேளா சுற்றுலாப் பொருட்காட்சி நடைபெறுகிறது. இங்கு நேற்று முன்தினம் ராட்சத ராட்டினத்தில் 15 பேர் அமர்ந்து சுற்றிக் கொண்டிருந்தனர். அப்போது ராட்டினம் திடீரென உடைந்து விழுந்தது. இந்த விபத்தில் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 13 பேர் காயமடைந்தனர். விபத்து தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
எ​திரி நாட்டு செயற்​கைக்​கோள்​களை இனி இந்​தியா உளவு பார்க்க முடி​யும் என்ற நிலையை அடைந்​துள்​ளது. விண்​வெளி​யில் 50-க்​கும் மேற்​பட்ட செயற்​கைக்​ கோள்​களை ஏவி இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிலை​யம் (இஸ்​ரோ) நிர்​வகித்து வரு​கிறது. இந்த செயற்​கைக்​ கோள்​களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடிக்​கும் மேல் என்று தெரிய​வந்​துள்​ளது. இந்நிலையில், அகம​தா​பாத்​தைச் சேர்ந்த அசிஸ்டா இண்டஸ்ட்ரீஸ் என்ற தனியார் விண்வெளி நிறு​வனம், ஒரு செயற்கைக்​ கோளில் இருந்து மற்​றொரு பொருளைப் புகைப்​படம்...
மத்​திய கூட்​டுறவுத் துறை அமைச்​சர் அமித் ஷா, நாட்​டின் முதல் கூட்​டுறவு அடிப்​படையி​லான வாகன அழைப்​புச் சேவை​யான ‘பாரத் டாக்ஸி’-யை நேற்று தொடங்கி வைத்​தார். இந்​நிகழ்ச்​சி​யில் மத்​திய அமைச்​சர் அமித் ஷா பேசும்​போது, “பாரத் டாக்ஸி சேவை முதற்​கட்​ட​மாக டெல்லி மற்​றும் குஜ​ராத்​தில் தொடங்​கப்​பட்​டுள்​ளது. அடுத்த 2 ஆண்​டு​களுக்​குள் அனைத்து மாநிலங்​கள் மற்றும் யூனியன் பிரதேசங்​களுக்​கும் இது விரிவுபடுத்தப்படும். குறிப்​பாக, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை​யிலும், துவாரகா முதல் காமாக்யா...
மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டம், தாங்ஸ்கு பகுதியில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் நேற்று காலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இது குறித்து மாநில காவல்துறை இயக்குநர் நோங்ராங் கூறுகையில், “இதுவரை 16 உடல்களை மீட்டுள்ளோம். வெடி விபத்து ஏற்பட்ட நேரத்தில் சுரங்கத்துக்குள் இருந்த தொழிலாளர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என கருதுகிறோம். வெடி விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படும்"...
அஸ்​வினி குமார் உபாத்​யாய் தாக்​கல் செய்​துள்ள மனு​வில், “அரசி​யல் கட்​சிகள் அறிவிக்​கும் இலவச திட்​டங்​களை தேர்​தல் முறை​கேடு என அறிவிக்க வேண்​டும். தேர்​தல் அறிக்கைகளில் வெளி​யிடப்​படும் இலவசத் திட்ட அறி​விப்​பு​களை முறைப்​படுத்த வேண்​டும்” என்று கோரி​யுள்​ளார். இதுதொடர்​பாக உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வு முன்பு மனு​தா​ரர் அஸ்​வினி குமார் உபாத்​யாய் முன்​வைத்த வாதத்​தில் கூறிய​தாவது: தமிழகம் உட்பட 5 மாநிலங்​களுக்கு விரை​வில் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற...
மேற்கு வங்க சட்​டப்​பேர​வை​யில் நிதி​யமைச்​சர் சந்திரிமா பட்​டாச்​சார்யா ரூ.4 லட்சம் கோடியில் 2026-27 நிதியாண்​டிற்​கான இடைக்​கால பட்​ஜெட்டை தாக்​கல் செய்​தார். பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பெண்​களைக் குறி​வைத்​து, ‘லக்​ஷ்மிர் பந்​தர்' திட்​டத்​தின் கீழ் மகளிருக்கு வழங்கப்​படும் மாதாந்​திர உதவித்​தொகை ரூ.500 உயர்த்தப்பட்டுள்​ளது. வேலை​யில்​லாத இளைஞர்​களுக்​காக யுவ சாத்தி திட்டத்தின் கீழ் 21 முதல் 40 வயதுக்​குட்​பட்ட வேலை​யில்​லாத இளைஞர்​களுக்கு வேலை கிடைக்​கும் வரை மாதம் ரூ.1,500 உதவித்​தொகை வழங்கப்​படும்...
ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமாகி மூன்றே மாதத்தில் கணவர் ஆஷிஷை (27) கொலை செய்து, அதை சாலை விபத்தாக ஜோடித்த மனைவி அஞ்சு என்கிற அஞ்சலி (23) மற்றும் அவரது ஆண் நண்பர் சஞ்சு என்கிற சஞ்சய் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் கடந்த மாதம் 30-ம் தேதி ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் பகுதியில் நடந்துள்ளது. முதலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆஷிஷ் உயிரிழந்ததாக...
ஆங்​கில மருத்​துவத்தை அடுத்​து, யுனானி மருத்துவக் கல்வி இந்​தி​யில் போதிக்​கப்பட உள்​ளது. நாட்​டில் முதன்​முறை​யாக மத்​திய பிரதேச மாநிலத்​தில் இது அமலாக உள்ளது. பாஜக ஆளும் ம.பி.​யில் ஆங்​கில மருத்​து​வக் கல்வி இந்​தியில் துவக்​கப்​பட்​டது. அந்​தவகை​யில் யுனானி மருத்​துவ கல்வி இந்தியில் தொடங்​கப்பட உள்​ளது. யுனானி மருத்​து​வத்தை இந்தியில் போதிக்க அதன் பாடங்​களை ம.பி. அரசு தயார் செய்து வரு​கிறது. இந்நிலை​யில், அம்​மாநிலத்​தின் ஆயுஷ் துறை உருது புத்தகங்களை இந்​தி​யில் மொழி...