நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் (ஐஎன்ஏ) மலேசியா, சிங்கப்பூரை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் இணைந்து பிரிட்டிஷ் படைக்கு எதிராக வீர, தீரத்துடன் போரிட்டனர். அவர்களில் பலர் உயிரோடு உள்ளனர்.
தற்போது மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மலேசிய நேதாஜி நல அறக்கட்டளை செயல்படுகிறது. இந்த அறக்கட்டளையில் ஐஎன்ஏ படை வீரர்கள், உயிரிழந்த வீரர்களின் வாரிசுகள் உறுப்பினர்களாக உள்ளனர். கோலாலம்பூரில் நேற்று மலேசிய நேதாஜி நல அறக்கட்டளை நிர்வாகிகளை...
ஐஎஸ்ஐ தொடர்பு குறித்து காங். எம்.பி. கவுரவ் கோகோயிடம் விசாரணை: அசாம் முதல்வர் வலியுறுத்தல்
admin - 0
”காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய், அவரது மனைவி எலிசபெத்திடம் பாகிஸ்தான் தொடர்பு குறித்து மத்திய ஏஜென்சி விசாரிக்க வேண்டும்” என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா வலியுறுத்தி உள்ளார்.
அசாம் மாநிலத்தின் காங்கிரஸ் எம்.பி.கவுரவ் கோகோய். இவரது மனைவி பிரிட்டனைச் சேர்ந்த எலிசபெத் கோல்பர்ன். இவர்கள் இருவருக்கும் பாகிஸ்தானுடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாகிஸ்தானின் திட்டக் குழு ஆலோசகர் தவ்கீர் ஷேக்கிடம், கவுரவ் மனைவி எலிசபெத் பணியாற்றி...
ஹரியானா மாநிலம் பரீதாபாத் அருகில் சூரஜ்குந்த் மேளா சுற்றுலாப் பொருட்காட்சி நடைபெறுகிறது.
இங்கு நேற்று முன்தினம் ராட்சத ராட்டினத்தில் 15 பேர் அமர்ந்து சுற்றிக் கொண்டிருந்தனர். அப்போது ராட்டினம் திடீரென உடைந்து விழுந்தது. இந்த விபத்தில் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 13 பேர் காயமடைந்தனர்.
விபத்து தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
எதிரி நாட்டு செயற்கைக்கோள்களை இனி இந்தியா உளவு பார்க்க முடியும் என்ற நிலையை அடைந்துள்ளது. விண்வெளியில் 50-க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை ஏவி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (இஸ்ரோ) நிர்வகித்து வருகிறது. இந்த செயற்கைக் கோள்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடிக்கும் மேல் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அகமதாபாத்தைச் சேர்ந்த அசிஸ்டா இண்டஸ்ட்ரீஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனம், ஒரு செயற்கைக் கோளில் இருந்து மற்றொரு பொருளைப் புகைப்படம்...
மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டின் முதல் கூட்டுறவு அடிப்படையிலான வாகன அழைப்புச் சேவையான ‘பாரத் டாக்ஸி’-யை நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசும்போது, “பாரத் டாக்ஸி சேவை முதற்கட்டமாக டெல்லி மற்றும் குஜராத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
அடுத்த 2 ஆண்டுகளுக்குள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படும். குறிப்பாக, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், துவாரகா முதல் காமாக்யா...
மேகாலயாவின் கிழக்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்டம், தாங்ஸ்கு பகுதியில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் நேற்று காலையில் வெடி விபத்து ஏற்பட்டது.
இது குறித்து மாநில காவல்துறை இயக்குநர் நோங்ராங் கூறுகையில், “இதுவரை 16 உடல்களை மீட்டுள்ளோம். வெடி விபத்து ஏற்பட்ட நேரத்தில் சுரங்கத்துக்குள் இருந்த தொழிலாளர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என கருதுகிறோம். வெடி விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இது குறித்து விசாரணை நடத்தப்படும்"...
அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்துள்ள மனுவில், “அரசியல் கட்சிகள் அறிவிக்கும் இலவச திட்டங்களை தேர்தல் முறைகேடு என அறிவிக்க வேண்டும். தேர்தல் அறிக்கைகளில் வெளியிடப்படும் இலவசத் திட்ட அறிவிப்புகளை முறைப்படுத்த வேண்டும்” என்று கோரியுள்ளார்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு மனுதாரர் அஸ்வினி குமார் உபாத்யாய் முன்வைத்த வாதத்தில் கூறியதாவது: தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற...
மேற்கு வங்க சட்டப்பேரவையில் நிதியமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா ரூ.4 லட்சம் கோடியில் 2026-27 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பெண்களைக் குறிவைத்து, ‘லக்ஷ்மிர் பந்தர்' திட்டத்தின் கீழ் மகளிருக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது.
வேலையில்லாத இளைஞர்களுக்காக யுவ சாத்தி திட்டத்தின் கீழ் 21 முதல் 40 வயதுக்குட்பட்ட வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும்...
ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமாகி மூன்றே மாதத்தில் கணவர் ஆஷிஷை (27) கொலை செய்து, அதை சாலை விபத்தாக ஜோடித்த மனைவி அஞ்சு என்கிற அஞ்சலி (23) மற்றும் அவரது ஆண் நண்பர் சஞ்சு என்கிற சஞ்சய் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் கடந்த மாதம் 30-ம் தேதி ராஜஸ்தானின் ஸ்ரீகங்காநகர் பகுதியில் நடந்துள்ளது. முதலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஆஷிஷ் உயிரிழந்ததாக...
ஆங்கில மருத்துவத்தை அடுத்து, யுனானி மருத்துவக் கல்வி இந்தியில் போதிக்கப்பட உள்ளது. நாட்டில் முதன்முறையாக மத்திய பிரதேச மாநிலத்தில் இது அமலாக உள்ளது.
பாஜக ஆளும் ம.பி.யில் ஆங்கில மருத்துவக் கல்வி இந்தியில் துவக்கப்பட்டது. அந்தவகையில் யுனானி மருத்துவ கல்வி இந்தியில் தொடங்கப்பட உள்ளது. யுனானி மருத்துவத்தை இந்தியில் போதிக்க அதன் பாடங்களை ம.பி. அரசு தயார் செய்து வருகிறது.
இந்நிலையில், அம்மாநிலத்தின் ஆயுஷ் துறை உருது புத்தகங்களை இந்தியில் மொழி...
