Google search engine
சக்​தி​வாய்ந்த ஜி7 நாடு​களின் வெளி​யுறவு அமைச்​சர்​கள் கூட்​டத்​தில் பங்​கேற்​ப​தற்​காக மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சா் எஸ். ஜெய்சங்கர் நேற்று பிரான்ஸ் நாட்​டுக்கு பயணம் மேற்​கொண்​டார். மேற்கு ஆசி​யா​வில் நிலவி வரும் போர் பதற்​றத்​தைத் தணிப்​பது மற்​றும் சர்வ​தேச வர்த்​தகத்​துக்​கான கடல்​சார் பாதையான ஹார்​முஸ் ஜலசந்​தியை எவ்​விதத் தடையுமின்றி இயக்​கு​வது குறித்து இந்த மாநாட்​டில் விரிவாக ஆலோ​சிக்​கப்பட உள்​ளது. இந்த சக்​தி ​வாய்ந்த ஜி7 கூட்​டமைப்​பில் இந்​தியா உறுப்பின​ராக இல்​லாத​போ​தி​லும், தற்​போதைய...
மேற்கு ஆசிய போரால் ஏற்​பட்​டுள்ள பிரச்சினைகளை சமாளிக்​கும் தயார் நிலை குறித்து மாநில முதல்வர்​களு​டன் காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்​துகிறார். ஈரான் போர் காரண​மாக ஹார்​முஸ் ஜல சந்​தி​யில் கச்சா எண்ணெய் கப்​பல்​களின் போக்​கு​வரத்து தடைபட்​டுள்​ளது. இதன் காரண​மாக கச்சா எண்​ணெய் விலை அதி​கரித்​துள்​ளது. வளைகுடா நாடு​களில் இருந்து உரங்​கள் விநி​யோகத்​தி​லும் பாதிப்பு ஏற்​பட்​டுள்​ளது. மேற்​காசிய நில​வரம் குறித்து அனைத்து கட்சி பிர​தி​நி​தி​களிடம் மத்​திய அரசு...
ஆந்​திராவில் நேற்று காலை டிப்​பர் லாரி​ மீது தனியார் பேருந்து மோதிய விபத்​தில், இரு வாக​னங்​களும் தீப்பற்றி எரிந்​தன. இதில் 14 பேர் உயி​ரிழந்​தனர். தெலங்​கானா மாநிலம், நிர்​மல் பகு​தி​யில் இருந்து தனி​யார் சொகுசு பேருந்து 41 பயணி​களு​டன் ஆந்​திர மாநிலம் நெல்லூருக்கு நேற்று முன்​தினம் இரவு புறப்​பட்​டது. ஆந்​திர மாநிலம், மார்க்​காபுரம் மாவட்​டம், ராய​வரம் பகு​திக்கு நேற்று காலை 6.30 மணிக்கு வந்​த​போது, பேருந்தை ஒரு டிப்​பர் லாரி...
உ.பி.யின் சீதாப்பூர் மாவட்டம் பகைன் கிராமத்தை சேர்ந்தவர் ரவி கோபால் (26). சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் கடந்த ஓராண்டாக ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அவர் உயிரிழந்தார். அவரது உடல், வெளியுறவு அமைச்சகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் பகைன் கிராமத்துக்கு நேற்று முன்தினம் கொண்டுவரப்பட்டது. அன்று மாலையில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. கிராம மக்கள்...
உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியின் மணிகர்னிகா மயானத்தில் எரியும் உடல்களுக்கு இடையே இளம் பெண்கள் நடனம் நடைபெற்றது. இரவு முழுவதுமான இந்த பாரம்பரிய நடன நிகழ்ச்சி, கடந்த 282 வருடங்களாகத் தொடர்கிறது. உ.பி.யின் முக்கியப் புனித நகரமாக இருப்பது வாரணாசி. மிகவும் பழமையான நகரமாகக் கருதப்படும் இங்கு பல பாரம்பரியங்களும், கலாச்சாரங்களும் பல நூற்றாண்டுகளாகத் தொடர்கின்றன. இதில் ஒன்றாக தற்போது துவங்கி நடைபெறும் நவராத்திரி நாட்களில் மயான நடனம் இடம்...
ஆந்திராவின் ஸ்ரீஹரி​கோட்​டா, தமிழகத்தின் குலசேகர பட்​டினத்துக்கு அடுத்​த​தாக நாட்​டின் 3-வது ராக்​கெட் ஏவுதளத்தை குஜ​ராத் மாநிலம் கிர் சோம்​நாத் மாவட்​டம் அருகே அமைக்க மாநில அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. குஜ​ராத் சட்​டப்​பேர​வை​யில் பட்​ஜெட் கோரிக்கை குறித்து அறிவியல் மற்​றும் தொழில் ​நுட்​பத் ​துறை அமைச்​சர் அர்​ஜுன் மோத்​வாடியா பேசுகை​யில், ”ராக்​கெட் ஏவுதளம் அமைப்பதற்கான இடம் கிர் சோம்​நாத் மாவட்​டம் அருகே அரபிக் கடல் பகு​தி​யில் அடை​யாளம் காணப்​பட்​டுள்​ளது. விண்​வெளித்​ துறை​யின் கீழ் செயல்​படும்...
மேற்கு ஆசிய நிலவரம் குறித்து ஆலோ​சிக்க நேற்று அனைத்​துக் கட்சி கூட்​டத்​துக்கு மத்​திய அரசு அழைப்பு விடுத்​தது. பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தலை​மை​யில் நடை​பெற்ற கூட்​டத்​தில், வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்​சங்​கர், பெட்​ரோலி​யத்​துறை அமைச்​சர் ஹர்​தீப் சிங் புரி உட்பட பலர் கலந்து கொண்​டனர். இதில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர். மேற்கு ஆசிய நில​வரம் குறித்து வெளி​யுறவுத்​துறை செய​லா​ளர் விக்​ரம் மிஸ்ரி விரி​வான விளக்​கம் அளித்​தார். அதைத் தொடர்ந்து மத்​திய...
மக்​களவை​யில் திருநங்​கைகள் தொடர்​பான சட்​டத் திருத்த மசோதா மீதான விவாதத்​தில் தென் சென்னை தொகுதி எம்​.பி.தமிழச்சி தங்​க​பாண்​டியன் பேசி​ய​தாவது: இது சாதாரண சட்​டத் திருத்​தம் அல்ல. மனித உரிமை, மரி​யாதை​யுடன் வாழும் உரிமை மற்​றும் ஒரு சமூகத்​தின் இருப்​பின் மீது எழுப்​பப்​படும் கேள்​வி. ஒரு நபரின் அடை​யாளத்தை அரசு தீர்​மானிக்க முடி​யாது. இது குறித்து திருநங்கை சமூகத்​தினரின் கருத்​துகள் கேட்கப்படவில்​லை. உச்ச நீதி​மன்​றத்​தின் நல்சா தீர்ப்​பின்​படி, சுய அடை​யாளம் என்​பது...
மகாராஷ்டிராவில் கட்சிரோலி பகுதி ஒரு காலத்தில் நக்​சலைட் ஆதிக்​கம் மிகுந்து காணப்​பட்​டது. இங்​குள்ள விவ​சா​யிகள் தொடர்ந்து அச்​சத்​தில் வாழ்ந்தனர். அரசின் ஆதரவை பெறு​வது அவர்​களுக்கு கடின​மாக இருந்​தது. இந்​நிலை​யில் மத்​திய, மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கை காரண​மாக இப்​பகுதி இடது​சாரி தீவிர​வாதத்​தில் இருந்து மீண்டு வந்​துள்​ளது. இது​வரை கட்​சிரோலி​ ​பகு​திக்கு அறி​முகமில்​லாத ஸ்ட்​ராபெர்​ரி​யின் விளைச்​சல் இந்த ஆண்டு அதிக லாபத்தை தந்​துள்​ள​தால் விவ​சா​யிகள் மகிழ்ச்சி அடைந்​துள்​ளனர். கட்​சிரோலி​யில் உள்ள முல்​சே​ரா,...
பொது சிவில் சட்டத்தை நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தராகண்ட் கடந்த 2024ம் ஆண்டு அமல்படுத்தியது. இந்நிலையில், ‘குஜராத் பொது சிவில் சட்டம் 2026’ மசோதாவை முதல்வர் புபேந்திர படேல், சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். இது குறித்து அவையில் தொடர்ந்து 7 மணி நேரத்துக்கு மேல் விவாதம் நடைபெற்றது. அதன்பின் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மத பாகுபாடின்றி திருமணம், விவாகரத்து, திருமணம் செய்யாமல் இணைந்து...