Google search engine
மகாராஷ்டிர மாநிலம் பாந்த்ராவிலிருந்து கோண்டியா நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து பிந்த்ரவன தோலா கிராமத்துக்கு அருகே திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 10 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்து கோண்டியா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், “ மகாராஷ்டிர மாநிலம் கோண்டியாவில் பேருந்து கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்....
கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவத்துக்காக 6 மாதம் ஜாமீன் வழங்க மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை உத்தரவிட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு படை போலீஸா் கடந்த ஏப்ரல் மாதம் ரயிலில் நடத்திய சோதனையில் ஒரு கும்பல் கஞ்சா கடத்தியது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 33 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களில் ஒரு பெண் சுர்பி சோனி. அவரது பைகளில் 7 கிலோ கஞ்சா இருந்தது. கைது...
தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தின் புகைப்படங்களை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இப்பாலம் நவீன பொறியியலின் அற்புதம் என்றும் அவர் வர்ணித்துள்ளார். இதுகுறித்து வைஷ்ணவ் கூறியுள்ளதாவது: தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் 105 ஆண்டு பழமையான பாலத்துக்கு மாற்றாக நவீன பொறியியல் முறைப்படி புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இது, "நவீன கால பொறியியலின் அற்புதம்". மேலும், இந்தியாவின் முதல் செங்குத்து லிஃப்ட் ரயில்வே கடல் பாலம்...
தெலங்கானா மாநிலம், குமரம்பீம் அசிஃபாபாத் மாவட்டம், கன்னாரம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (21). இவர் நேற்று காலை வயலில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது புலி பாய்ந்து, கழுத்தை கவ்வியது. உடன் இருந்தவர்கள் அலறியதால் வனப்பகுதிக்குள் புலி தப்பியோடி விட்டது. பலத்த காயமடைந்த லட்சுமியை, காகஜ்நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் காகஜ்நகர் வனத்துறை அலுவலகம்...
இந்திய ரயில்வேயின் முதல் புல்லட் ரயில், கவாச் தொழில்நுட்பத்துடன் உள்நாட்டில் தயாரிக்கப்படுகிறது எனவும், இது சராசரியாக 250 கி.மீ வேகத்தில் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புல்லட் ரயில் திட்டம் குறித்து மத்திய அரசின் உயர் அதிகாரிகள் கூறியதாவது: புல்லட் ரயில் தயாரிப்பை இந்திய ரயில்வே வேகப்படுத்தியுள்ளது. உள்நாட்டில் புல்லட் ரயில்கள் மற்றும் அதிவேக வழித்தடத்துக்கான சிக்னல் கருவிகளை தயாரிப்பதில் இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் தே.ஜ கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால்,...
ஆந்திர மாநிலம், காக்கிநாடா துறைமுகம் வழியாக ரேஷன் அரிசி டன் கணக்கில் கடத்தப்படுவதால், இது கடத்தல் காரர்களின் கூடாரமாகி விட்டதாகவும், அதற்காக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நேற்று அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்த ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் எச்சரிக்கை விடுத்துள்ளார். காக்கிநாடா துறைமுகம் வாயிலாக சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 640 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பிடிப்பட்டன. இவற்றை நேற்று ஆந்திர மாநில துணை முதல்வர்...
பெங்களூருவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பாவை இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதியை இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் ருவாண்டாவில் கைது செய்துள்ளனர். இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடர்பாளர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பின் உறுப்பினரான சல்மான் ரெஹ்மான் கான், பெங்களூருவில் பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர். இவர், ஆயுதங்கள், வெடிமருந்துகள், வெடிபொருட்கள் போன்றவற்றை சப்ளை செய்வதில் முக்கிய நபராக இருந்தவர். பயங்கரவாத தொடர்பான குற்றங்களுக்காக...
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்க சாவடிகள் மூலமாக மத்திய அரசுக்கு ரூ.1.44 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: தேசிய நெடுஞ்சாலைகளில் பிபிபி எனப்படும் பொது தனியார் பங்களிப்பு மாடல் கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கீழ் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள்...
ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் 4-வது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்டார். ராஞ்சியில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் சந்தோஷ் கங்வார், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கு கடந்த 13, 20-ம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. கடந்த 23-ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) 34, அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ்...
வரும் 2025 பட்ஜெட் கூட்டத் தொடர் முடியும் வரை வக்பு மசோதா ஜேபிசி பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின்போது, வக்பு வாரி யங்கள் தொடர்பான திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. அந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (ஜேபிசி) பரிசீலனைக்கு அனுப் பப்பட்டது. இந்தக் குழுவின் தலைவராக பாஜக மக்களவை எம்.பி. ஜெகதாம்பிகாபால் உள்ளார்....