கடந்த 11 மாதங்களில் மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 9.22 லட்சம் உயர்ந்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி கீழமை நீதிமன்றங்களில் 4.44 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருந்தன. கடந்த நவம்பர் 15-ம் தேதி நிலவரப்படி இந்த எண்ணிக்கை 4.53 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 11...
மகாராஷ்டிராவின் புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, தேவேந்திர பட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் டெல்லியில் நேற்று சந்தித்து பேசினர்.
மகாராஷ்டிராவில் 288 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 20-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. கடந்த 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஆளும் மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை...
டெல்லியில் இணைய குற்ற வழக்கில் தொடர்புடைய இடங்களில் நேற்று சோதனை நடத்திய அமலாக்க துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கியூஆர் குறியீடு மோசடி, பிஷிங், பகுதிநேர வேலை மோசடி போன்ற இணைய குற்றங்கள் குறித்து ஐ4சி மற்றும் நிதி புலனாய்வு பிரிவிடமிருந்து (எப்ஐயு) அமலாக்க இயக்குநரகத்துக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய ஆய்வில், இந்த மோசடி மூலம் சம்பாதித்த பணத்தை 15 ஆயிரம் போலி...
உலகம் முழுவதும் இந்திய கலாச்சாரம் ஒளிர்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டு உள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் பிரதமர் மோடி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் அண்மையில் பயணம் மேற்கொண்ட நாடுகளின் வீடியோ தொகுப்பு பிரதமரின் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
அதில், ஆஸ்திரியாவில் வந்தே மாதரம் பாடல், போலந்து, ரஷ்யா, பூடானில் கர்பா நடனம், பூடானில் இந்திய...
ஆட்கடத்தல் வழக்கில் 6 மாநிலங்களில் உள்ள 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து கவர்ச்சிகரமான சம்பளத்துடன் வரும் வேலைவாய்ப்புகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்நாடுகளுக்கு செல்லும் இந்திய இளைஞர்கள் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக சைபர் குற்றங்களில் ஈடுபடுத்தப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுகின்றனர். இவ்வாறு இந்த நாடுகளில் மோசடி கும்பல்களிடம் சிக்கித் தவித்த பலரை மத்திய அரசு...
சிவன் கோயிலை இடித்து அஜ்மீர் தர்கா கட்டியதாக வழக்கு: தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு நோட்டீஸ்
admin - 0
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் 12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது காஜா மொய்னுதீன் சிஷ்தி தர்கா. இந்த தர்காவுக்கு நாடு முழுவதிலும் இருந்து முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர்.
தர்கா இருந்த இடத்தில் சங்கட் மோர்ச்சன் மஹாதேவ் எனும் சிவன் கோயில் இருந்ததாகப் பல ஆண்டுகளாகப் புகார் உள்ளது. இதை குறிப்பிட்டு கடந்த 2022-ம் தேதி காங்கிரஸ் முதல்வராக இருந்த அசோக் கெலாட்டிடம் முதல் முறையாக புகார் அளிக்கப்பட்டது. மகாரானா பிரதாப்...
பிஜியில் 80 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழ் வகுப்புகள்: இந்திய அரசு நிதி உதவியுடன் துவக்கம்
admin - 0
பிஜி நாட்டில் சுமார் 80 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் வகுப்புகள் துவங்கப்பட்டன. இந்திய அரசின் நிதி உதவியுடன் நேற்று தமிழ் மொழி கற்பித்தல் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
பிஜி நாட்டிலுள்ள இந்திய சமூகத்தில் தமிழர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இன்றைய தமிழ்நாட்டிலிருந்து பிஜிக்கு வந்த ஒப்பந்த தொழிலாளர்கள். இவர்களது சந்ததியினர் சார்பில் பிஜியில் நீண்டகாலமாக ஒரு கோரிக்கை எழுந்து வந்தது. இதில் அவர்கள் பிஜியில்...
ஜம்முவிலிருந்து டெல்லிக்கு வழக்கை மாற்றக் கோரும் சிபிஐ மனு மீது பதில் அளிக்க யாசின் மாலிக் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
admin - 0
ஜம்முவிலிருந்து டெல்லிக்கு வழக்கை மாற்றக் கோரும் சிபிஐ மனு மீது பதில் அளிக்க காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக். காஷ்மீரை தனி நாடாக அறிவிக்கக் கோரும் இவரது அமைப்பு தீவிரவாத செயலில் ஈடுபட்டு வந்தது. தீவிரவாத செயலுக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மாலிக் டெல்லி திஹார் சிறையில் உள்ளார்.
காஷ்மீர் முன்னாள்...
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக பல வன்முறை சம்பவங் கள் தொடர்ந்து நடைபெறுவதுடன் பல இந்து கோயில்களும் அடித்து நொறுக்கப்பட்டு வருகின்றன. அடக்குமுறைகள் அதிகரித்து வரும் நிலையில், இஸ்கான் கோயில் மதகுருவான சின்மய் கிருஷ்ண தாஸை அந்நாட்டு போலீஸார் டாக்கா விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர்.
இந்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு தங்களின் மதகுருவை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இஸ்கான் அமைப்பு கோரியுள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநில துணை...
ரஷ்யாவில் ரயில் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியாவில் அதிக முதலீடுகளை செய்ய அந்த நாடு ஆர்வம் காட்டி வருகிறது. அத்துடன் இந்தியாவிலேயே ரஷ்யாவுக்கு தேவையான ரயில் பெட்டிகளை தயாரிப்பதற்கான உற்பத்தி மையத்தை தொடங்கவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக கடந்த வாரம் ரஷ்யாவின் மிகப்பெரிய ரயில் நிறுவனமான டிஎம்எச், இந்திய ரயில்வே அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. ரஷ்யாவின் டிஎம்எச் நிறுவனம் ஏற்கெனவே இந்தியாவில் படுக்கை வசதியுடன் கொண்ட வந்தே பாரத்...










