Google search engine
பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் கடத்தப்படுவது தொடர்பாக 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். பாகிஸ்தானில் இருந்து ட்ரோன்கள் மூலம் காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட எல்லையோர மாநிலங்களுக்கு ஏகே 47 ரக துப்பாக்கிகள், வெடிபொருட்கள் கடத்தப்படுகின்றன. இந்தக் கடத்தலை தடுக்க எல்லை பாதுகாப்பு படை மற்றும் அந்தந்த மாநிலபோலீஸார் அதிதீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு செயற்கைக்கோள் கட்டுப்பாட்டில்...
நீடித்த உழைப்​பு, உற்​பத்தி செலவு குறைவு ஆகியவை காரண​மாக நாட்​டில் பிளாஸ்​டிக் கரன்​சிகளை புழக்​கத்​தில் விட ரிசர்வ் வங்கி திட்​டமிட்​டுள்​ளது. நாட்​டில் டிஜிட்​டல் பண பரிவர்த்​தனை​கள் அதி​கரித்​தா​லும், கரன்சி நோட்​டு​களின் தேவை​யும் அதி​கள​வில்​தான் உள்​ளன. கடந்த 2024-ம் நிதி​யாண்​டில் கரன்சி நோட்​டு​கள் அச்​சிட ரூ.5,101.4 கோடி செல​வானது. இது 2025-ம் நிதி​யாண்​டில் ரூ.6,372.8 கோடி​யாக அதி​கரித்​தது. அதிக கரன்சி நோட்​டு​கள் அச்​சிட ஆர்​டர் கொடுக்​கப்​பட்​ட​தால் இதற்​கான செல​வும் அதி​கரித்​தது. மேலும் கரன்சி...
மகாராஷ்டிர மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தின் பிம்ப்ரி சிஞ்ச்வாட் நகரின் புகேவாடி, தபோடி பகுதிகளில் 13 பேரும், புனே நகரின் ஹடப்சர், காலேபடல் பகுதிகளில் 5 பேரும் சாராயம் குடித்ததால் உயிரிழந்தனர். பிஎன்எஸ் மற்றும் மதுவிலக்கு சட்டப்பிரிவுகளின் கீழ்போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த...
மருத்​துவ இளநிலை படிப்​பு​களுக்​கான நீட் நுழைவுத் தேர்வுக்கான வினாத்​தாள் முன்​கூட்​டியே கசிந்​திருப்​பது கண்​டு​பிடிக்​கப்​பட்​டது. மகா​ராஷ்டி​ரா​வின் புனே நகரை சேர்ந்த சில பேராசிரியர்​கள், நீட் வினாத்​தாள் தயாரிப்​பில் ஈடு​பட்டு இருந்​தனர். அவர்​கள் மூல​மாக நாடு முழு​வதும் வினாத்​தாள் கசிந்​திருப்​பது சிபிஐ விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது. இதுதொடர்​பாக இது​வரை 13 பேர் கைது செய்​யப்​பட்டனர். இந்த சூழலில் நீட் மறு​தேர்வு ஜுன் 21-ம் தேதி நடை​பெறும் என்று தேசிய தேர்வு முகமை அறி​வித்​துள்​ளது.இதுகுறித்து மத்​திய...
கர்​நாடக முதல்​வர் சித்​த​ராமை​யா​வின் ராஜி​னா​மாவை ஆளுநர் ஏற்று கொண்​டார். இதைத்​தொடர்ந்​து, புதிய முதல்​வரை தேர்வு செய்ய மாநில காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் கூட்​டம் பெங்​களூரு​வில் இன்று கூடு​கிறது. புதிய அமைச்​சரவை தொடர்​பாக சித்​த​ராமை​யா​வும், டி.கே.சிவகு​மாரும் டெல்​லிக்கு சென்று மேலிடத் தலை​வர்​களு​டன் ஆலோ​சனை நடத்​தினர். கர்​நாடக முதல்​வ​ராக‌ சித்​த​ராமையா 3 ஆண்​டு​களை நிறைவு செய்த நிலை​யில், காங்​கிரஸ் மேலிடம் அவரை பதவி வில​கு​மாறு வலி​யுறுத்​தி​யது. இதையடுத்து நேற்று முன்​தினம் அவர் தனது முதல்​வர் பதவியை...
கென்​-பெட்வா நதி இணைப்பு திட்​டத்தை பின்​பற்​றி, மாநிலங்​களுக்கு இடையே​யான நதிநீர் பிரச்​சினை​களுக்கு ஒத்துழைப்பு மூலம் தீர்வு காணுங்​கள் என மாநிலங்​களை பிரதமர் மோடி அறி​வுறுத்​தி​யுள்​ளார். மத்​திய மற்​றும் மாநில அரசுகளின் முயற்​சிகளை தடை​யின்றி ஒருங்​கிணைப்​ப​தன் மூலம், திட்​டங்​களை சரி​யான நேரத்​தில் செயல்​படுத்​து​வதை நோக்​க​மாகக் கொண்ட ஒரு தகவல் மற்​றும் தகவல் தொடர்பு தொழில்​நுட்​பம் சார்ந்த பன்​முக தளம் பிரக​தி. இதன் 51-வது கூட்​டம் பிரதமர் மோடி தலை​மை​யில் நேற்று முன்தினம்...
மேகேதாட்டு அணை திட்ட விவ​காரத்​தில் தாக்​கல் செய்த மனுவை​யும், மறு ஆய்வு மனுவை​யும் உச்ச நீதி​மன்​றம் தள்ளு​படி செய்த நிலை​யில், அடுத்த கட்ட நடவடிக்​கை​யாக சீராய்வு மனு தாக்​கல் செய்​வ​தா, தேசிய பசுமை தீர்ப்​பா​யத்தை நாடு​வதா என்​பது குறித்து தீவிர ஆலோ​சனை​யில் தமிழ்​நாடு அரசு ஈடு​பட்டு வரு​கிறது. மேகே​தாட்டு அணை திட்​டம் தொடர்​பான விரி​வான திட்ட அறிக்கையை ஆய்வு செய்​யக் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்​துக்​குத் தடை​வி​திக்​கக் கோரி தமிழக...
தெலுங்கு நடிகை ட்விஷா சர்மா மர்​மச்​சாவு வழக்​கில் அவரது மாமி​யாரும், ஓய்வு பெற்ற நீதிப​தி​யு​மான கிரி​பாலா சிங்கை சிபிஐ அதி​காரி​கள் நேற்று கைது செய்​தனர். தெலுங்கு நடிகை​யான ட்விஷா சர்மா (33) கடந்த மே 12ம் தேதி போபாலில் உள்ள அவரது கணவர் வீட்​டில் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் சடல​மாக மீட்​கப்​பட்​டார். இது தொடர்​பாக வரதட்சணை கொடுமை மற்​றும் தற்​கொலைக்கு தூண்​டிய​தாக ட்விஷா​வின் கணவரும் வழக்​கறிஞரு​மான சமரத் சிங், முன்​னாள்...
மரண தண்​டனையில் காப்பாற்றப்பட்டு 20 ஆண்டு​ சிறை​யில் இருந்த அப்​துல் ரஹீம் நேற்று கேரளா​ திரும்பினார். கேரளாவைச் சேர்ந்த அப்​துல் ரஹீம் சவுதி அரேபியாவில் அப்துல்லா என்பவரின் வீட்டில் 2006-ல் கார் ஓட்​டுநராகப் பணியாற்றினார். அப்​துல்​லா​வின் மகன் ஒரு மாற்​றுத்​திற​னாளி. அந்த சிறு​வனை​யும் பராமரிக்​கும் பொறுப்பு ரஹீமிடம் ஒப்படைக்கப்​பட்​டது. ஒரு​நாள் சிறு​வனை காரில் ரஹீம் அழைத்துச் சென்​ற​போது சிறு​வனின் கழுத்தில் இணைக்கப்பட்டிருந்த செயற்கை சுவாசக் ​குழாய் மீது ரஹீமின்கை தவறு​தலாகப்...
ரீல்ஸ் மூலம் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட வீடியோ முயற்சியை ஆந்திர மாநில அமைச்சர் நாரா லோகேஷ் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் நாரா லோகேஷ் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியது: “முதலீட்டாளர்களை அணுக அமைச்சர் கீர்த்தனா மேற்கொண்ட முன்முயற்சியை பாராட்டுகிறேன். தொழில்துறை அமைச்சர்கள் தங்கள் மாநிலத்தை சந்தைப்படுத்த வேண்டும், முதலீட்டாளர்கள் மத்தியில் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும், வேலைவாய்ப்பை அளிப்பவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். வெற்றுக்...