மக்களவையில் நேற்று மத்திய மின்சாரத்துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத நாயக் கூறியதாவது:
மின்சார சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு தயாரித்துள்ளது. மின்சாரத்தை விநியோகிக்கும் பணியில் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் மிகவும் முக்கியக் காரணியாக உள்ளன. இந்த நிறுவனங்கள்தான், மின்சாரத்தை உற்பத்தி செய்வது, கொண்டு செல்வது, விநியோகிப்பது ஆகிய பணிகளைச் செய்கின்றன.
இந்த நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை குறைக்கும் வகையில், செலவை பிரதிபலிக்கும் கட்டணத்தை நிர்ணயிக்கும் விதியை மத்திய அரசு கொண்டு...
மகாராஷ்டிராவின் ஆளும் மகாயுதி கூட்டணியில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் துணை முதல்வராக இருந்த இக்கட்சியின் தலைவர் அஜித் பவார் விமான விபத்தில் நேற்று முன்தினம் இறந்தார். இவரது மனைவி சுனேத்ரா பவார் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார்.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் குறித்து இக்கட்சியைச் சேர்ந்த மாநில உணவுத்துறை அமைச்சர் நர்ஹாரி ஜிர்வால் கூறுகையில், ”மகாராஷ்டிர அமைச்சரவையில் அஜித் பவாரின் மனைவி...
மறைந்த அஜித் பவார் மீதான வழக்குகளை ரத்து செய்வதே உண்மையான அஞ்சலி: எம்.பி.சஞ்சய் ராவத் கருத்து
admin - 0
மறைந்த மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அஜித் பவார் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. புனே கூட்டுறவு வங்கித் தலைவராக இருந்த போது இவர் மீது ஊழல் புகார் எழுந்தது.
மேலும், வேளாண் துறை, மின்துறை, மண்வளப் பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் இவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளும், வழக்குகளும் உள்ளன. இவர் மீதான ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் சிவ சேனா (உத்தவ் அணி) மாநிலங்களவை எம்.பி....
மகாராஷ்டிராவில் நடைபெற்ற விமான விபத்தில் துணை முதல்வர் அஜித் பவார் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய மத்திய விமான போக்குவரத்து துறை உயர்நிலை விசாரணை நடத்த வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய விமான போக்குவரத்து துறைக்கு கடிதம் அனுப்பினார்.
இந்த கடிதத்துக்கு பதில் அளித்து முதல்வர் பட்னாவிஸுக்கு மத்திய விமான போக்குவரத்து...
மகாராஷ்டிராவில் நேற்று நிகழ்ந்த விமான விபத்தில் அம்மாநில துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் உயிரிழந்தார். இந்தியாவில் நடைபெற்ற விமான மற்றும் ஹெலிகாப்டர் விபத்துகளில் முதல்வர்கள், அமைச்சர்கள், முப்படை தளபதி உள்ளிட்ட பல தலைவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துள்ளனர். அதுபற்றி பார்க்கலாம்.
விஜய் ருபானி (2025): குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான விஜய் ருபானி கடந்த 2025ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி நிகழ்ந்த ஏர்...
பிஹார் தர்பங்கா எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? – மத்திய அரசுக்கு காங். கேள்வி
admin - 0
கடந்த பிப்ரவரி 2015-ல் பிஹாரின் தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
அதன்பின், நவம்பர் 13, 2024 அன்று பிரதமர் நரேந்திர மோடி தர்பங்காவின் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். இது ரூ.1,264 கோடியில் 187 ஏக்கரில் கட்டப்படுகிறது. ஆனால், கடந்த ஓராண்டாக மருத்துவமனையின் பிரதான வாயில் மட்டுமே கட்டப்பட்டுள்ளது என் மத்திய அரசை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இதுகுறித்து பிஹார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அசித் நாத்...
தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், கேரளா, அசாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையம் இந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக பிப்ரவரி 4 மற்றும் 5 தேதிகளில் ஆலோசனை நடத்த உள்ளது. இந்தக் கூட்டத்தில் தேர்தலுக்காக செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து விரிவான முறையில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
தேர்தல் பார்வையாளர்களாக பணியாற்ற உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள்,...
தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்பு: என்சிசி மாணவர்களிடம் பிரதமர் மோடி உறுதி
admin - 0
இந்தியா மேற்கொண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்திய இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உருவாகும் என என்சிசி மாணவர்களிடம் பிரதமர் மோடி கூறினார்.
குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்பதற்காக நாட்டின் பல பகுதிகளில் இருந்து என்சிசி மாணவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இந்த முகாமை குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் கடந்த 5ம் தேதி தொடங்கி வைத்தார்.
குடியரசு தினவிழா அணிவகுப்பு முடிந்ததும், என்சிசி மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை பிரதமர் பார்வையிடுவது வழக்கம்....
டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு மோதல் நடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு சென்றபோது காயமடைந்த கரண் என்ற 21 வயது இளைஞர் ஏற்கெனவே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. ஆனால், அந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கரணிடம் சிலர் பீடி பற்றவைக்கத் தீப்பெட்டி கேட்டுள்ளனர். அதை தர மறுத்ததால் ஆத்திரமடைந்த கும்பல் கரணை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளது. இதுகுறித்து போலீஸார்...
சமாஜ்வாதி கட்சியின் தேசியத் தலைவரும் மக்களவை உறுப்பினருமான அகிலேஷ் யாதவ், அவரது மனைவி டிம்பிள் யாதவ், அவர்களது குடும்ப நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவுக்குச் சென்றுள்ளனர். இந்நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை தலைமைச் செயலகத்தில் அகிலேஷ் யாதவ் நேற்று மதியம் சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அகிலேஷ் யாதவ் கூறியதாவது: சகோதரி (மம்தா) அமலாக்கத் துறையை வீழ்த்தியுள்ளார், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் பாஜகவை மீண்டும்...
