தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் 2 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இது மாநிலத்தின் தேர்தல் வரலாற்றில் 25 ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாகும்.
மேற்கு வங்கத்தில் 2006ம் ஆண்டு 5, 2011ம்...
மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று பேசியதாவது: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றத்தால் நாடு முழுவதும் சமையல் எரிவாயு (எல்பிஜி) தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது ஏழைகள், நடுத்தரக் குடும்பங்கள், உணவகங்கள் மற்றும் விடுதிகளை கடுமையாகப் பாதித்துள்ளது.
பிராந்திய பதற்றம் பற்றி தெரிந்திருந்தும் அரசு ஏன் மாற்று ஏற்பாடுகளைச் செய்யவில்லை ? பொதுமக்களின் கவலையைப் போக்க எதிர்க்கட்சிகளை ஏன் ஒருங்கிணைக்கவில்லை ? எல்பிஜி பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையைத்...
ஒடிசாவின் கட்டாக் நகரில் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது.
இங்கு நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைத்தனர். எனினும் தீ விபத்தில் 10 நோயாளிகள் உயிரிழந்தனர். மேலும் மருத்துவமனை ஊழியர்கள் 11 பேர் காயம் அடைந்தனர்.
இச்சம்பவம் நிகழ்ந்த சிறிது நேரத்திலேயே, ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, அமைச்சர் முகேஷ் மகாலிங்குடன் மருத்துவமனைக்கு சென்று, நிலைமையை ஆய்வு...
மேற்கு வங்கத்தில் 144 தொகுதிக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு: மம்தாவை எதிர்த்து சுவேந்து போட்டி
admin - 0
மேற்கு வங்கத்தில் 144 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டது.
தமிழகம், அசாம் உட்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகளை நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி 152 தொகுதி, 2ம் கட்டமாக ஏப்ரல் 29ம் தேதி 142 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை...
மேற்கு வங்கத்துக்கு பிரதமர் மோடி சமீபத்தில் சென்றபோது, கொல்கத்தாவின் கிரிஷ் பார்க் பகுதியில் அமைச்சர் ஷாஷி பாஞ்சா வீட்டின் மீது சிலர் கல்வீச்சு தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டுக்கு எதிராக கொல்கத்தாவில் திரிணமூல் சார்பில் நேற்று பேரணி நடத்தப்பட்டது. இதில் மம்தா பானர்ஜி பேசியதாவது: அமைச்சர் ஷாஷி வீட்டின் மீது கல்வீச்சு நடத்தியதற்காக பாஜக வெட்கப்பட வேண்டும். முடிந்தால் என் வீடு மீதும், திரிணமூல் தலைவர்களின் வீடுகள்...
ஒடிசா மாநிலத்தின் கட்டாக் பகுதியில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 10 நோயாளிகள் உயிரிழந்தனர்.
அந்த மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் இன்று (மார்ச் 16) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அந்தப் பிரிவில் மருத்துவ சிகிச்சையில் இருந்த நோயாளிகள் 10 பேர் உயிரிழந்தனர். 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பத்திரமாக மீட்கப்பட்ட நோயாளிகள் சிலர், அந்த...
யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றதாக இளைஞரை கொண்டாடிய பிஹார் கிராம மக்கள் – வேறு ஒருவர் என தெரிந்ததால் ஏமாற்றம்
admin - 0
பிஹாரின் ஷேக்புரா மாவட்டம் பதேபூர் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித் குமார். யுபிஎஸ்சி நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், 440-வது ரேங்க் பெற்று ஐஏஎஸ் அதிகாரி ஆகியுள்ளதாக கிராம மக்களிடம் ரஞ்சித் குமார் கூறிஉள்ளார்.
இதையடுத்து கிராமமே கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இத்தகவல் சமூக ஊடகத்திலும் பரவிய நிலையில் ஷேக்புரா தொகுதி முன்னாள் ஆர்ஜேடிஎம்எல்ஏ விஜய் சாம்ராட் தனது ஆதரவாளர்களுடன் ரஞ்சித் குமார் வீட்டுக்கு வந்தார். பூங்கொத்தும்...
ஒடிசா மாநிலம் பஸ்தாரா- கும்சர் பகுதியில் உள்ள கலாஹண்டி, ராயகடா மற்றும் கந்தமால் மாவட்டங்களில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் இருந்து வந்தது. இங்கு பாதுகாப்பு படையினர் தொடர் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். மாவோயிஸ்ட்கள் சரணடைவதையும் ஊக்குவித்து வந்தனர்.
இந்நிலையில் இப்பகுதியில் மண்டல கமிட்டி உறுப்பினராக இருந்த மூத்த மாவோயிஸ்ட் தலைவர் நகுல் உட்பட 11 மாவோயிஸ்ட்கள் மாநில டிஜிபி குரானியா முன்னிலையில் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்தனர். இவரை பற்றி...
ஒடிசாவில் 4 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக தரப்பில் 3 பேர், பிஜு ஜனதா தளம் சார்பில் 2 பேர் என மொத்தம் 5 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஒரு வேட்பாளர் வெற்றி பெற 30 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. பாஜகவுக்கு 79 எம்எல்ஏக்களும், 3 சுயேச்சைகளின் ஆதரவும் உள்ளது. இதன் மூலம் 2 எம்பிக்களை பாஜகவால் தேர்வு செய்ய...
கேரள சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறுகிறது. மாநில முதல்வர் பினராயி விஜயன் ஏற்கெனவே 2 முறை வெற்றி பெற்ற தர்மடம் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இவரது மார்க்சிஸ்ட் கட்சி 86 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
கேரளாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சி மாற்றம் என்பது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இந்த வழக்கத்தை இடது ஜனநாயக முன்னணி கடந்த முறை தகர்த்தெறிந்து தொடர்ந்து இரண்டாவது முறை வெற்றி...










