‘முண்டாசுப்பட்டி’யில் நடிகராக அறிமுகமான முனீஷ்காந்த், இப்போது முக்கியமான குணச்சித்திர நடிகர். சமீபத்தில் வெளியாகி இருக்கிற ‘தாய் கிழவி’யில் அவர் கதாபாத்திரம் பேசப்பட்டிருக்கிறது. சினிமாவில் 12 ஆண்டுகளைக் கடந்திருக்கும் அவரிடம் பேசியதில் இருந்து...
Q
‘தாய் கிழவி’ல உங்க நடிப்பு பாராட்டப்பட்டு வருது...
A
‘முண்டாசுப்பட்டி’ மாதிரி, ‘தாய் கிழவி’ படமும் என் கேரியர்ல முக்கியமான படம். இதுல நடிச்சு முடிச்சுட்டு டப்பிங் பேசும்போதுதான், உடல் மொழி மட்டுமல்ல, டப்பிங்கும் ஒரு நடிப்புத்தான்னு புரிஞ்சுகிட்டேன். இந்தப்...
வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
முன்னணி காமெடி நடிகரான வடிவேலு தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘மாமன்னன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதே போல் தற்போது ‘போர்முழக்கம்’ என்ற படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
லாலு மற்று டோனா தாமஸ் தயாரிக்கும் இப்படத்தினை பினில் இயக்கவுள்ளார். ‘போர்முழக்கம்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் வக்கீலாக வடிவேலு நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. முழுக்க...
‘கெணத்த காணோம்’ பட அறிமுக விழா – மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா குறித்து யோகி பாபு நெகிழ்ச்சி
admin - 0
இயக்குநர் சுரேஷ் சங்கையா இந்தப் படத்தை கொடுத்தது பாக்கியமாக பார்க்கிறேன் என்று ‘கெணத்த காணோம்’ நிகழ்ச்சியில் யோகி பாபு பேசினார்.
ஜியோ ஹாட்ஸ்டார் வழங்க ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கெணத்த காணோம்’. இப்படத்தினை சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார். இதன் இறுதிகட்டப் பணிகளின் போது உடல்நிலை சரியில்லாமல் காலமாகிவிட்டார். அவருடன் பணிபுரிந்தவர்கள் இறுதிகட்டப் பணிகளை முடித்து, இப்போது ‘கெணத்த காணோம்’ வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது.
யோகி பாபு...
சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ள டார்க் காமெடி படம் ‘முஸ்தபா முஸ்தபா’. இதில் சுரேஷ் ரவி, கருணாகரன், புகழ், மோனிகா, மானசா சவுத்ரி, ஐஸ்வர்யா தத்தா, பாவல் நவநீதன் என பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் பிரவீன் சரவணன் இயக்கியுள்ளார்.
மார்ச் 6-ல் வெளியாகும் இப்படம் பற்றி நடிகர் சதீஷ் கூறும்போது, “இது ஜாலியான படமாக இருக்கும். ‘முஸ்தபா முஸ்தபா’ என்றால் நமக்கு நட்பு பாடல் தான் ஞாபகம் வரும். அதை...
எழுத்தாளர்களின் படைப்புகள் திரைப்படமாவது இப்போது அதிகரித்து வருகின்றன. ஜெயமோகன், பூமணி, பெருமாள் முருகன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் கதைகள் படமாக்கப் பட்டு வரும் நிலையில் இப்போது பிரபல எழுத்தாளரும் நடிகரும் கதை சொல்லியுமான பவா செல்லத்துரை எழுதிய ‘நீர்’ என்ற கதை திரைப்படமாகிறது.
இதை ஹரிஷங்கர், சங்கீதா கல்யாண் உள்பட பலர் நடித்து வெளியான ‘பராரி’ படத்தை இயக்கிய எழில் பெரியவேடி இயக்குகிறார்.
சினிமாவுக்காக ‘நீர்’ கதையில் சில மாற்றங்களைச் செய்து இயக்க...
பியார் பிரேமா காதல்’ ரைசா வில்சன், ‘ஆண்மை தவறேல்’ துருவா நடிக்கும் படம், ‘நோவா: பேஸ் ஒன் - தி அரைவல்’. இதில் அத்விதி ஷெட்டி, பெங்காலி நடிகை கிருத்திகா பிஸ்வாஸ், ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், ஃபைனலி ஸ்வாதிகா, கிருஷ்ணா என பலர் நடித்துள்ளனர்.
ஆதி, ஹன்சிகா நடித்த ‘பார்ட்னர்’ படத்தைத் தொடர்ந்து ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் இதைத் தயாரித்துள்ளது. விளம்பர படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட மைலோ...
மலையாள இயக்குநரான ஜிதின் லால் இயக்கத்தில் படம் ஒன்றில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் விக்ரம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் விக்ரம். இப்படத்தை அருண் விஸ்வா தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் 4 படங்கள் நடிப்பதற்கு கதைகள் கேட்டு முடிவு செய்திருப்பதாக விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அதில் ஒரு படத்தை ‘இருமுகன்’...
முழுமையான சயின்ஸ் ஃபிக்ஷன் கதையுடன் உருவாகியுள்ள திரைப்படம், ‘மகரம்’. அகஸ்டின் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை ராக்ஸ் நேச்சர் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. ஆதர்ஷ் சந்திர சேகரன் இசை அமைத்துள்ளார். அமல் டோமி ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜித், இஷிதா, அமர் ரமேஷ், நிர்மல், சாமி, அசோக் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் அகஸ்டின் பிரபு கூறும்போது, “4 கதைகளை ஒன்றோடொன்று இணைத்து ஒரு...
விமல் நடிக்கும் ‘வடம்’ படத்தை வி.கேந்திரன் இயக்கியுள்ளார். மாசாணி பிக்சர்ஸ் சார்பில் ஆர்.ராஜசேகர் தயாரிக்கும் இதில் நட்டி நட்ராஜ், சனஸ்கா ஸ்ரீ, முனீஸ்காந்த், பால சரவணன், ‘ஆடுகளம்’ நரேன், மது சூதன் ராவ், தீபா, இந்து மதி மணிகண்டன், ஷரவண சக்தி, மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மஞ்சு விரட்டுப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மார்ச் 6ல் வெளியாகும் இப்படத்தின்...
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
‘அரசன்’ படத்தை முடித்துவிட்டு, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு. இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் கதை மற்றும் திரைக்கதையினை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் சிம்பு. தற்போது சிம்பு, அஸ்வத் மாரிமுத்து மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் சந்தித்து படத்தின் பணிகளைத் துரிதப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட படங்களை...










