விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் படத்துக்கு ‘ரணபாலி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
‘கீதகோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ படங்களுக்குப் பிறகு இருவரும் ஜோடி சேரும் படம் இது. இதை ராகுல் சங்கிருத்யன் இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இதில் ‘தி மம்மி’ படம் மூலம் பிரபலமான அர்னால்ட் வோஸ்லூ, சர் தியோடோர் ஹெக்டர் என்ற பிரிட்டீஷ் அதிகாரியாக நடிக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
“1850-களில் நடந்த உண்மை சம்பவங்களை...
சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட, நினைவெல்லாம் நீயடா படங்களை இயக்கிய ஆதிராஜன், தனது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் நிறுவனம் சார்பில் எழுதி இயக்கி தயாரித்துள்ள படம் ‘தீராப்பகை’. விஜய ராகவேந்திரா நாயகனாக நடித்துள்ள இதி, ஹரிப்பிரியா நாயகியாக நடித்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ஷிந்தோகி, விஷால் ஹெக்டே, ரங்கா, ரஞ்சன் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தில் இடம் பெற்றிருக்கும் பார் பாடல் ஒன்றை இயக்குநர் ஆதிராஜன் எழுதியிருக்கிறார். நட்சத்திர ஹோட்டல் பாரில்...
தன் படங்கள் போதைப் பழக்கத்தை ஊக்குவிப்பதாக சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இது குறித்து கூறியதாவது: “என் படங்கள் மீது நீண்ட நாட்களாகவே இந்த குற்றச்சாட்டை வைக்கின்றனர். என்னுடைய படங்களை கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், போதைப் பொருட்களை பயன்படுத்தினால் சந்தோஷமாக இருக்கலாம் என்று நான் எங்குமே சொல்லி இருக்கமாட்டேன். கமர்ஷியல் படங்களே செய்தாலும் எனக்கென்று ஒரு...
மலையாளத்தில் முன்னணி இயக்குநராக இருந்து தற்போது முக்கிய நடிகர்களில் ஒருவராக மாறி இருப்பவர் பேசில் ஜோசப். இவர் இயக்கத்தில் உருவான ‘மின்னல் முரளி’ நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தொடர்ந்து நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்தார்.
இவர் நடித்த ‘ஜெய ஜெய ஹே’, ‘பொன்மேன்’, ‘ஃபேலிமி’ உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் ஆகின. தமிழிலும் இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. அண்மையில் வெளியான ‘பராசக்தி’ படத்தில்...
அருண்குமார் சேகரன் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள படம், ‘ப்ராமிஸ்’. நாயகியாக நதியா நடித்துள்ளார். சரவணதீபன் இசை அமைத்துள்ளார். சங்க மித்ரன் புரொடக் ஷன், அம்மன் ஆர்ட்ஸ் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
படக்குழுவினருடன் இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே.ராஜன், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தயாரிப்பாளர் என்.நாகராஜன் வரவேற்றார்.
கே.ராஜன் பேசும்போது, “தமிழ்...
நடிகர், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனின் டூரிங் டாக்கீஸ் நிறுவனமும், திரைப்பட மக்கள் தொடர்பாளர்களான சிங்காரவேலு, ரியாஸ் கே அகமது, பாரஸ் ரியாஸ் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்த ‘ஃபிரேம் அண்ட் ஃபேம்’ விருதுகள் வழங்கும் விழாவின் முதல் பதிப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், திரையுலகுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் படைப்பாளிகள் கவுரவிக்கப்பட்டனர்.
இந்த விருது தேர்வுக் குழுவின் தலைவராக கே.பாக்யராஜ் செயல்பட, குஷ்பு சுந்தர்,...
வருமானத்தை மறைத்ததாக கூறி, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்ததை எதிர்த்து, நடிகர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
கடந்த 2015-16-ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்தபோது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.
அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை...
நடிகர் மம்மூட்டி - இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் இருவரும் 32 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் படத்துக்கு ‘பாதயாத்ரா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. மம்மூட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பனி இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதற்கு முன்னதாக 1990-களில் வெளியான ‘விதேயன்’ மற்றும் ‘மதிலுகள்’ போன்ற கிளாசிக் படைப்புகளை தந்த இந்தக் கூட்டணி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைவது கவனம் பெற்றுள்ளது.
இன்று...
திரெளபதி-2 படத்தை வெளியிட தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த மகாமுனி அம்பலகாரர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு 14-ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த மன்னன் வீர வல்லாள தேவன். இவரின் வாழ்க்கை வரலாறு அடிப்படையில் திரௌபதி-2 படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
வீர வல்லாள தேவன் என்பவர் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்கு...
‘கொன்றால் பாவம்’, ‘மாருதி நகர் காவல் நிலையம்’ ஆகிய படங்களை இயக்கிய தயாள் பத்மநாபன், அடுத்து இயக்கியுள்ள திரைப்படம், ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’.
2எம் சினிமாஸ் சார்பில் கே.வி.சபரீஷ் தயாரிக்கும் இப்படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், கவிதா பாரதி, லொள்ளு சபா மாறன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுப.வீரபாண்டியன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரைக்கதை, வசனத்தை கவிதா பாரதியும் தயாள் பத்மநாபனும் இணைந்து...
