புதுக்கடை: வாகனத்தில் பிணமாக காணப்பட்ட டிரைவர்
கிள்ளியூர், முளங்குழியைச் சேர்ந்த 31 வயது அஜின், நேற்று புதுக்கடை பகுதியில் சாலையோரம் தனது வாகனத்தில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். குடிப்பழக்கம் கொண்ட அஜின், சொந்தமாக பிக்கப் வாகனம் ஓட்டி வந்தார். இது குறித்து புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் உடலை மீட்டு குழித்துறை...
குமரி: கஞ்சா விற்பனை; விரட்டி பிடித்த போலீசார்
நாகர்கோவில் மது விலக்கு போலீசார் நேற்று தக்கலை அருகே அழகியமண்டபம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தினர். அப்போது போலீசாரை கண்டதும் தப்பியோடிய சுமன் (26) என்பவரை துரத்திப் பிடித்தனர். அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம்...
குமரி: கோதையாற்றில் வலம் வரும் ஒற்றை யானை
குமரி மலைகிராமங்களில் காட்டு யானைகளின் அட்டகாசம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கோதையாறு அரசு ரப்பர் தோட்டம் மற்றும் பேச்சிப்பாறை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் ஒற்றை யானை சுற்றி திரிவதால் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர். யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமரி: வரதட்சணை கொடுமை ; கணவர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு
மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த சுபைதா (27) - ஜெரின் (27) இருவருக்கும் 2021 ல் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பிறகு, குழந்தை பிறப்பதைத் தடுக்க கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும்படி கணவர் குடும்பத்தினர் வற்புறுத்தியதாகவும், மேலும் வரதட்சணை கேட்டு சுபைதாவை வீட்டை விட்டு விரட்டியதாகவும் கூறப்படுகிறது....
ராமன்துறை: தாயை தாக்கிய மகள், மருமகன் மீது வழக்கு
ராமன்துறை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த சுபேதா (58) என்பவரின் மகள் கோகிலா, தனது தாய் வசிக்கும் வீட்டை தங்களது பெயருக்கு எழுதித் தருமாறு தாய் சுபேதாவிடம் கேட்டுள்ளார். தாய் மறுத்ததால், மகள் கோகிலாவும் அவரது கணவர் ஜெர்மன்ஸ்சும் சேர்ந்து சுபேதாவை தாக்கி, அவரது உடையைக் கிழித்து, மானபங்கப்படுத்தி,...
நாகர்கோவில்: கேரளாவுக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்
நாகர்கோவில் கோர்ட்டு ரோட்டில் நேற்று (ஜனவரி 20) வாகன சோதனையில் ஈடுபட்ட பறக்கும் படை தனி தாசில்தார் பாரதி தலைமையிலான குழுவினர், கேரளாவிற்கு கடத்த முயன்ற 3½ டன் ரேஷன் அரிசியை வாழை இலைகளுக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த டெம்போவை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய ஓட்டுநரை...
திங்கள்நகர்: பெண்ணிடம் பணம் திருடிய 3 பெண்கள் கைது
திங்கள்நகர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த குருந்தன்கோடு பகுதியைச் சேர்ந்த லலிதா (57) என்பவரின் பையில் இருந்த 23,700 ரூபாயை நேற்று 3 பெண்கள் திருடினர். பொதுமக்கள் அவர்களைப் பிடித்து இரணியல் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணாம்மாள் (60),...
திருவட்டாறு: தொழிலாளி குளத்தில் பிணமாக மீட்பு
வேர்க்கிளம்பி பகுதியை சேர்ந்த தொழிலாளி செல்வின் ஜெபக்குமார் (44) மதுப்பழக்கத்தால் மனைவியுடன் பிரிந்து வாழ்ந்து வந்தார். நேற்று அப்பகுதியில் உள்ள குளத்தில் அவரது உடல் பிணமாக கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திருவட்டாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை கைப்பற்றி குமரி அரசு...
மார்த்தாண்டம்: கோயிலில் வெள்ளி முக அங்கி திருட்டு
மார்த்தாண்டம், ஆயிரம்தெங்கு பகுதியில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில், திருவிழாக் காலங்களில் அம்மனுக்கு அணிவிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான வெள்ளி முக அங்கி மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் அம்மனுக்கு நேர்ச்சையாக வழங்கிய இந்த அங்கியை காணாமல் போனது குறித்து...
கொல்லங்கோடு: வக்கீலுக்கு கொலை மிரட்டல் – வழக்கு பதிவு
கொல்லங்கோடு அருகே சூரியகோடு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் துளசிதாஸ் (51) என்பவரின் நிலத்தின் கேட் முன்பு பாத்திமாநகர் பகுதியைச் சேர்ந்த ரவீந்திரன் (53) என்பவர் பாறாங்கற்களை இறக்கிப் போட்டு, கேட்டை சேதப்படுத்தி, நிலத்திற்குச் செல்லும் பாதையை அடைத்துள்ளார். இது குறித்து துளசிதாஸ் கேட்டபோது, ரவீந்திரன் தகாத வார்த்தைகள்...













