Google search engine

திக்குறிச்சி: ஆற்றில் சிப்பி எடுக்கச் சென்றவர் பலி

திக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஜஸ்டஸ் குமார் (49) என்பவர், தனது நண்பருடன் தாமிரபரணி ஆற்றில் சிப்பி எடுக்கச் சென்றபோது நீரில் மாயமானார். இது குறித்து குழித்துறை தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் நேற்று மாலை 4 மணியளவில் ஜஸ்டஸ் குமாரின் உடலை புல் செடிகளுக்கு...

கன்னியாகுமரி: அம்ரித் பாரத் ரயில் தொடக்கம்

பிரதமர் நரேந்திர மோடி நேற்று திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இதில் முக்கியமாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து ஹைதராபாத் வரை இயக்கப்படும் அம்ரித் பாரத் ரயில் சேவையை காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்....

குமரி: ரயில் பாதைக்கு நீர்நிலைகள் மூடல் – ஆய்வு தொடக்கம்

கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இரட்டைரயில் பாதை பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தியதில் மாவட்டத்தில் ஏராளமான நீர்நிலைகள் மூடப்பட்டதாக பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ தமிழக முதல்வரிடம் புகார் அளித்தார். முதல்வர் உத்தரவின் பேரில், நேற்று முதல் ரயில்வே துறை மற்றும் பாசனத்துறை உயர் அதிகாரிகள் இப்பிரச்சினை குறித்து ஆய்வு...

குமரி: ஒலிப்பெருக்கிகளுக்கு கட்டுப்பாடு; எஸ்பி உத்தரவு

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுவதையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பொது இடங்களில் ஒலிபெருக்கிகள் மற்றும் அதிக சத்தம் எழுப்பும் இசைக்கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது எனத்...

மண்டைக்காடு: நள்ளிரவில் ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலின் இறுதி நாளான நேற்று நள்ளிரவில் ஒடுக்கு பூஜை நடைபெற்றது. அம்மனுக்கு பிடித்தமான உணவு பதார்த்தங்களை 13 மண்பானைகளில் மூடி, தலையில் சுமந்து அம்மன் சன்னதிக்கு கொண்டு வந்து பூஜைகள் நடத்தப்பட்டன. நள்ளிரவு 12:30 முதல் 1...

பூத்துறை: கால்வாய் சீரமைக்க காமராஜர் மக்கள் இயக்கம் தர்ணா

குமரி கடற்கரை கிராமங்கள் வழியாக செல்லும் ஏவிஎம் கால்வாய் புதர் மண்டி, தூர்வாரப்படாமல் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பயன்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்கக் கோரி, காமராஜர் மக்கள் இயக்கம் சார்பில் பூத்துறை மீனவ கிராமத்தில்...

குமரி: 117 மையங்களில் இன்று 10ம் வகுப்பு தேர்வு துவக்கம்

இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 21,466 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக மார்த்தாண்டம் பகுதியில் 67 மையங்களும், நாகர்கோவில் பகுதியில் 50 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தனித் தேர்வர்களுக்காக 5 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில்...

நாகர்கோவில்: இரவில் பெட்ரோல் திருடும் வாலிபர் -வீடியோ

நாகர்கோவிலில் ஆசாரிமார் வடக்கு தெரு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் இருந்து தொடர்ச்சியாக பெட்ரோல் திருட்டு நடைபெற்று வந்தது. இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோலை திருடிச் செல்லும் வாலிபர் ஒருவர் கண்காணிப்பு கேமராவில்...

குமரி: தேர்தல் பணிக்கு துணை ராணுவ வீரர்கள் வருகை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து 11 பெண்கள் உட்பட 90 துணை ராணுவ வீரர்கள் வந்துள்ளனர். நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆயுதப்படை காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். வீரர்கள் நேற்று முதல் சோதனைச் சாவடிகளில்...

திற்பரப்பு: கோயில் கிணற்றில் உயிரிழந்து மிதக்கும் பாம்பு

குமரியில் மஹா சிவாலய ஓட்டம் நடக்கும் 12 சிவாலயங்களில் 3வது சிவாலயமான திற்பரப்பு மகாதேவர் கோயில் திற்பரப்பு அருவியோரம் அமைந்துள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் தினமும் இலவச அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் தயார் செய்யும் கோயில் கிணற்றில் பாம்பு ஒன்று உயிரிழந்த நிலையில் செத்து...