திங்கள்நகர்: பெண்ணிடம் பணம் திருடிய 3 பெண்கள் கைது

0
252

திங்கள்நகர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த குருந்தன்கோடு பகுதியைச் சேர்ந்த லலிதா (57) என்பவரின் பையில் இருந்த 23,700 ரூபாயை நேற்று 3 பெண்கள் திருடினர். பொதுமக்கள் அவர்களைப் பிடித்து இரணியல் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணாம்மாள் (60), சுப்பம்மாள் (50), கோழியம்மாள் (51) என்பது தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here