Google search engine

தேங்காபட்டணம்: சொத்து பிரச்சனையில் தாக்குதல் – வழக்கு பதிவு

தேங்காபட்டணம் பகுதியைச் சேர்ந்த அஜின் (33) என்ற தொழிலாளிக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், பிரச்சனைக்குரிய பகுதியில் உள்ள பாறையை அஜின் தந்தை அசோகன் (55), சகோதரர்கள் அனி (35), அஜித் (29) ஆகியோர் உடைத்துள்ளனர். இதை அஜின் தட்டிக் கேட்டபோது,...

இரணியல்: டியூஷன் ஆசிரியை தாயார் மீது போக்சோ வழக்கு

இரணியல் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டியூஷன் ஆசிரியையின் தாய் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி மருத்துவமனையில்...

கொல்லங்கோடு: மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை

மனைவி தன்னை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதால் மனமுடைந்த வெல்டிங் தொழிலாளி கிருஷ்ணமூர்த்தி (46) நேற்று (22-ம் தேதி) தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கொல்லங்கோடு போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்கு...

அருமனை: வீட்டுக்குள் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்

மேல்புறம் பகுதியைச் சேர்ந்த 56 வயதான தொழிலாளி அனில் குமார், முதல் மனைவி இறப்பு மற்றும் இரண்டாம் மனைவி பிரிந்து சென்றதால் தனிமையில் வாடி வந்தார். இந்நிலையில், நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து, கதவை உடைத்து பார்த்தபோது அனில் குமார் அழுகிய நிலையில்...

திருவட்டார்: மனைவி, மாமியாரை வெட்டிய மீன் வியாபாரி

திருவட்டார் பகுதியைச் சேர்ந்த மீன் வியாபாரி மைக்கேல் ராஜ் (42), கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த தனது மனைவி பியூலா மேரி (37) மற்றும் மாமியாரை நேற்று (செப்.22) கழுத்தில் வெட்டினார். சென்னையில் பணிபுரியும் பியூலா மேரி ஊருக்கு வந்திருந்த நிலையில், மாமியார் வீட்டிற்கு...

புதுக்கடை: கோர்ட்டில் ஆஜராகாத நபருக்கு பிடிவாரண்ட்

புதுக்கடை அருகே அனந்தமங்கலத்தைச் சேர்ந்த ராஜாமணி மீது அடிதடி, மோசடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்ததால், குழித்துறை கோர்ட் அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்துள்ளது. அவரைப் பிடித்து ஆஜர்படுத்த புதுக்கடை போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை புதுக்கடை போலீஸ்...

காளி மலை ரத யாத்திரை: நாகர்கோவிலில் ஆலோசனை

நாகர்கோவிலில் காளி மலை சமுத்திரகிரி ரத யாத்திரையை சிறப்பாக நடத்துவது குறித்து நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் பெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டனர். யாத்திரையை வெற்றிகரமாக நடத்த விரிவான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது.

குமரி: தி. மு. க. விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள் கூட்டம்

குமரி கிழக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நகர, பகுதி, ஒன்றிய புதிய நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் அறிமுக கூட்டம் நேற்று நாகர்கோவிலில் நடைபெற்றது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்டங்கள் வழங்குதல், நாகர்கோவில், கன்னியாகுமரி,...

குளச்சல் துறைமுகத்தில் மீனவர் ஓய்வறை: எம்எல்ஏ அடிக்கல்

குளச்சல் துறைமுகத்தில் மீனவர்களுக்காக ரூ. 10 லட்சம் மதிப்பில் புதிய ஓய்வறை அமைக்க சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பிரின்ஸ் எம்.எல்.ஏ...

தக்கலை: பார் உரிமையாளரை மிரட்டி பணம் பறிப்பு 2 பேர் கைது

மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த ஜான் (50) என்பவர் சாமியார்மடத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் பார் நடத்தி வருகிறார். நேற்று பார் பகுதிக்குச் சென்றபோது, அங்கு நின்றுகொண்டிருந்த சாரோன் பிரபு, ஆல்பர்ட், ஆண்டோ பிரபு மற்றும் சுனில் ஆகிய 4 பேர் ஜாணைத் தடுத்து நிறுத்தி, அவரது சட்டைப்...