கருங்கல்: போலீஸ் பிடியில் இருந்து தப்பிய கொள்ளையன் கைது
பாலூர் பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஆல்வின் வீட்டில் கடந்த மாதம் 18 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக கருங்கல் போலீசார் பாலூர் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரைக் கைது செய்தனர். விசாரணையின் போது ஜெயக்குமார் போலீசாரை ஏமாற்றி தப்பி ஓடினார். பெங்களூருவில்...
குமரி: மதுவை மகள் கீழே கொட்டியதால் தொழிலாளி தற்கொலை
மணவாளக்குறிச்சி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த கட்டிட தொழிலாளி ராஜேந்திரன் (49), மது பாட்டிலை பீரோவில் மறைத்து வைத்திருந்தார். அவரது மகள் அதை ஊற்றியதால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த...
குமரி மாவட்ட வீராங்கனை சாதனை: பயிற்சியாளர் பெருமிதம்
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற 40வது தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக அணி சார்பாக குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ச. சித்ரா, 20 வயதுக்குட்பட்டோருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இது தமிழக தடகள வரலாற்றில் ஒரு...
தக்கலை: பெண் போலீசிடம் தகராறு; 4 பேர் மீது வழக்கு
தக்கலை காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலர் மேகலா (34) மீது, மணலி சந்திப்பில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்தவர்களை தடுத்ததால், ஆத்திரமடைந்த 4 பேர் தகாத வார்த்தைகளில் பேசி அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார் அளித்துள்ளார். இது குறித்து...
கிராத்தூர்: கூட்டுறவுசங்க அலுவலகம் முன் இன்ஜினியர் போராட்டம்
பொறியியல் பட்டதாரி சுஜின் (33), நித்திரவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன் உறுப்பினர்கள் சேர்க்கையில் முறைகேடு மற்றும் உரக்கள்ளச் சந்தை விற்பனை மூலம் ஊழல் நடப்பதாகக் கூறி பதாகையுடன் போராட்டம் நடத்தினார். நித்திரவிளை போலீசார் அவரை விசாரித்து, கூட்டுறவு சங்க ஊழியர்களுடன் பேச்சுவார்த்தைக்குப்...
நாகர்கோவிலில் இருசக்கர வாகனம் திருட்டு.
நாகர்கோவில் கோட்டார் டிவிடி காலனி பகுதியைச் சேர்ந்த முத்து (40) என்பவர் தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தார். நேற்று காலை வாகனம் திருடு போனது தெரியவந்தது. அருகிலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரண்டு வாலிபர்கள் வாகனத்தை திருடிச் சென்றது...
நாகர்கோவில் ரயிலில் 13 கிலோ கஞ்சா
சென்னையில் இருந்து குருவாயூருக்கு நேற்று இரவு வந்த ரயிலில், நாகர்கோவில் டவுன் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 13 கிலோ கஞ்சா சிக்கியது. ஒரிசாவைச் சேர்ந்த பிலாசினி (68) மற்றும் சாவித்திரி (55) ஆகியோரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ரயில்வே பாதுகாப்புப் படையினரும் ரயில்வே போலீசாரும் இணைந்து...
புளியடி மனநல காப்பகத்தில் தீபாவளி கொண்டாட்டம்.
நேற்று கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாகர்கோவில் அருகே புளியடி மனநல காப்பகத்தில் ஆதிபராசக்தி சித்தர் பீட கோவில் சார்பில் சிறப்பு விழா நடைபெற்றது. இதில் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு புதிய ஆடைகள் மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது. ஆதிபராசக்தி சித்தர் பீட கோவில் தலைவர் சின்னத்தம்பி தலைமையில்...
குளச்சல்: ஆக்கர் கடையில் திருட்டு போலீஸ் விசாரணை
ரீத்தாபுரம் பேரூராட்சி அலுவலகம் எதிரே கடை வைத்திருக்கும் ஸ்டார்வின் சுதர்சன் (47) என்பவர், தனது கடையை இரவு பூட்டிவிட்டுச் சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது, கடையில் இருந்த 15 கிலோ செம்பு கம்பி, 20 கிலோ பித்தளை மற்றும் ரூ. 1200 மதிப்பிலான பழைய கிழிந்த நோட்டுகள்...
அருமனை: பள்ளி மாணவனுக்கு வெட்டு; போலீஸ் வழக்கு
அருமனை அடுத்த முழுக்கோடு பகுதி பஸ் நிறுத்தத்தில் மாணவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 3 பள்ளி மாணவர்கள் ஒரு மாணவனை ஆஸ்பெட்டாஸ் சீட் துண்டால் தலையில் வெட்டி படுகாயம் ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர். அருமனை போலீசார் காயமடைந்த மாணவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில்,...













