உதயமார்த்தாண்டம்: அரசு பள்ளி கட்டிடம் எம்எல்ஏ திறப்பு
மிடாலம் ஊராட்சி, உதயமார்த்தாண்டம் அரசு தொடக்க பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 27 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட 2 வகுப்பறை கட்டிடங்கள் மற்றும் கழிவறை கட்டிடங்கள் நேற்று திறக்கப்பட்டன. எம்.எல்.ஏ. ராஜேஷ் குமார் இந்த கட்டிடங்களை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில்...
இரணியல்: லாரி டிரைவர் கொலை மனைவி, மாமியார் கைது
தக்கலை பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் கிருஷ்ணதாஸ் (36) கடந்த 1-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இரணியல் போலீசார் இது தொடர்பாக கிருஷ்ணதாஸின் மனைவி பவித்ரா மற்றும் மாமியார் முத்துலட்சுமி (60) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், பவித்ரா ரமேஷ் என்பவருடன் உல்லாசமாக இருந்ததை கிருஷ்ணதாஸ் பார்த்ததால்...
குமரி: வீட்டை உடைத்து பெண் மீது தாக்குதல் 3 பேர் மீது வழக்கு
இரவிபுத்தன்துறை பகுதியைச் சேர்ந்த மேரி சந்திரிகா (39) என்பவரின் வீட்டில், சொத்து தகராறு காரணமாக பக்கத்து வீட்டில் வசிக்கும் சூசை அடிமை, அவரது மனைவி சபிதா, மகன் சுபின் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு கதவை உடைத்து புகுந்து மேரி சந்திரிகாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்....
புதுக்கடை: திருமண மோசடி; இளம்பெண் மீது வழக்கு
ராமன்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வெளிநாட்டில் வசிக்கும் சுஜின் (35), கேத்ரின் பிளஸ்சி (23) என்ற பெண்ணைக் காதலித்து 2023-ல் திருமணம் செய்துகொண்டார். சுஜின் கத்தார் சென்ற நிலையில், பிளஸ்சி கடந்த 2 ஆண்டுகளில் அவரிடம் ரூ. 12 லட்சம் வாங்கியுள்ளார். ஆனால், அவருடன் சேர்ந்து வாழ...
குமரி மாவட்டத்திற்கு 1260 டன் ரேஷன் அரிசி வருகை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்திற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து அரிசி வரவழைக்கப்படுகிறது. நேற்று திருச்சியில் இருந்து ரயில் மூலம் 1260 டன் அரிசி நாகர்கோவிலுக்கு வந்து சேர்ந்தது. இந்த அரிசி, நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து லாரிகள் மூலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்...
களியங்காடு சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு.
நாகர்கோவில் களியங்காடு சிவபுரம் சிவன் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு சிவபெருமான் மற்றும் நந்தி தேவருக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து அலங்காரம், பிரதோஷ சிறப்பு தீபாராதனை, மற்றும் எல்லா சாமிகளுக்கும் பதிவு தீபாராதனை நடைபெற்றது....
குளச்சல்: வாலிபர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
குளச்சல் அருகில் கோடிமுனை பகுதியைச் சேர்ந்த ஜாஸ் மோன் (29) என்பவர் வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மீன்பிடி தொழில் செய்து வந்த இவர் தனியாக வசித்து வந்துள்ளார். உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது இந்த துயர சம்பவம் தெரியவந்தது. தகவலறிந்து...
புலியூர்குறிச்சி: லாரிகள்மோதி விபத்து; போக்குவரத்து பாதிப்பு
தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் இன்று காலை 6.30 மணியளவில் சரக்கு லாரி மற்றும் கனிமவள டாரஸ் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று இரவு இதே பகுதியில் வேன் மற்றும் பைக் மோதியதில் இருவர் காயமடைந்தனர். இதனால், இப்பகுதியில் போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகள்...
குமரி: மருத்துவர் வீட்டில் 57 பவுன் நகை கொள்ளை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவி பேராசிரியராகப் பணிபுரியும் ஆக்சினி தர்ஷினி, வீட்டைப் பூட்டிவிட்டு கோவை சென்றிருந்தபோது, மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 57 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு...
குழித்துறை: நீதிமன்ற சந்திப்பில் 5 நாட்களாக மர்ம கார்
குழித்துறையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், சிறைசாலை, அரசு கருவூலகம், வட்ட வழங்கல் அலுவலகம், தாலுகா அலுவலகம் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலகங்கள் அமைந்துள்ளன. கடந்த 5 நாட்களாக கேரள பதிவெண் கொண்ட மர்ம வாகனம் ஒன்று இங்கு நிறுத்தப்பட்டுள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது...













