Google search engine

தக்கலை: திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது

தக்கலை பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ரகுநாத் வீட்டில் கடந்த மாதம் 18ஆம் தேதி 29 பவுன் நகைகள் மற்றும் ரூ. 60 ஆயிரம் ரொக்கம் திருட்டுப் போனது. தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து, ஏற்கனவே 4 பேரை கைது செய்த நிலையில், திருட்டில்...

திருவட்டார்: லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

நேற்று இரவு 8.30 மணியளவில் ஆற்றூர் - சிதறால் சாலையில் பைக்கில் சென்ற வெல்டிங் தொழிலாளி ஸ்டாலின் (35) பருத்திவிளை பகுதியில் சாலையில் இருந்த பள்ளத்தில் விழுந்ததில், எதிரே வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ஸ்டாலின் உயிரிழந்தார். திருவட்டார் போலீசார்...

ஆரல்வாய்மொழி: பைக்கில் சத்தம்; இளைஞர்கள் மீது தாக்குதல்

ஆரல்வாய்மொழி கணேசபுரம் பகுதியில் பைக்கில் அதிக சத்தம் எழுப்பியதாக கேட்டதால், ராபின்சன் மற்றும் மெல்வின் ஆகியோர் புஷ்பராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோரை தாக்கி, கையில் இருந்த சாவியால் தலையில் குத்தியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து புஷ்பராஜ் அளித்த...

குமரி: சிறுமிக்கு பாலியல்; 5 ஆண்டுகள் சிறை

விரிகோடு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்து ஊழியர் நேசமணி (62), 2020 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், மாவட்ட போக்சோ நீதிமன்றத்தால் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 5000 அபராதமும் விதிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு...

குமரியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது.

நாகர்கோவில் மணிமேடை பகுதியில் வடசேரி போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகத்திற்கிடமான வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பிரவீன் (34) என்பதும், குமரியில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. திருச்சி போலீசாரால் தேடப்பட்டு வந்த இவர், சிகிச்சைக்காக...

குளச்சல்: பெண்களிடம் சில்மிஷம் செய்த அரசு பஸ் டிரைவர் கைது

குளச்சலில் உள்ள அரசு பஸ் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் சில்மிஷம் செய்த அரசு பஸ் டிரைவர் ஜவகர் (55) கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் ஜவகரை...

பாலப்பள்ளம்: ஐஆர்இஎல் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்

மணவாளக்குறிச்சியில் உள்ள ஐஆர்இஎல் நிறுவனம் சார்பில், பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட கடமாங்குழி சிஎஸ்ஐ சமுதாய நலக்கூடத்தில் நேற்று, 6-ம் தேதி, அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து முழுமையான இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. ஐஆர்இஎல் துணை பொது மேலாளர் சிவராஜ் முன்னிலையில், கடமாங்குழி சேகர போதகர்...

சேனம்விளை: அரசு மருத்துவமனைக்கு வாஷிங் மெஷின் வழங்கிய எம்எல்ஏ

நெய்யூர் அருகே சேனம்விளையில் உள்ள அரசு தாலுகா மருத்துவமனையில் நேற்று பிரின்ஸ் எம்எல்ஏ வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். நோயாளிகளைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தபோது, உள்நோயாளிகள் பயன்பாட்டிற்கான துணிகளைத் துவைக்க வாஷிங் மெஷின் இல்லை என்பதை அறிந்தார். உடனடியாக, எம்எல்ஏ தனது சொந்த நிதியிலிருந்து புதிய...

குமரி: மருத்துவமனை ஊழியர் போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

குமரி மாவட்டம் வள்ளியூரில், தங்க லட்சுமி (70) என்ற மூதாட்டியிடம் மருத்துவமனை ஊழியர் போல் நடித்து ஒருவர் ஒன்றரை பவுன் நகையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மகனைப் பார்க்க வந்த தங்க லட்சுமியிடம், அடையாள அட்டை கிடைத்தால்...

நித்திரவிளை: மின்கம்பத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு

பைங்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயது அஜிஸ், நண்பருடன் பைக்கில் சென்றபோது திடீரென வலிப்பு ஏற்பட்டு மின்கம்பத்தில் மோதி பலத்த காயமடைந்தார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி...