காந்தி சிலை சேதம்: நடவடிக்கை கேட்டு பாஜக ஆர்ப்பாட்டம்
விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மருதங்கோடு கிராமம் காலனி பகுதியில், இரணியல் சர்வோதய வளாகத்தில் அமைந்திருந்த தேச தந்தை மகாத்மாகாந்தியின் திருவுருவ சிலையை அடித்து நொறுக்கியவர்களை கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டும், நடவடிக்கை எடுக்க விடாமல் காங்கிரஸ் கட்சி மக்கள் பிரதிநிதி மற்றும் கட்சி நிர்வாகிகள்...
நாகர்கோவிலில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் அமைந்துள்ள குமரி கிழக்கு மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 2026 இல் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் கழக நிர்வாகிகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து குமரி கிழக்கு மாவட்ட கழக...
கோட்டாரில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப் (வயது 70), ஆட்டோ டிரைவர். கடந்த சில மாதங்களாக அவர், உடல் நலகுறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் அவருக்கு உடல் நிலை சரியாக வில்லை. இதனால் மனமுடைந்த ஜேக்கப் நேற்று வீட்டில் தூக்கிட்டு...
குமரி அறிவியல் பேரவை சார்பில் காந்திய சேவை விருது
குமரி அறிவியல் பேரவை, ஆற்றூர் என் வி கே எஸ் கல்வியியல் கல்லூரி இணைந்து நடத்திய உலக அகிம்சை தினம், காந்தி பிறந்தநாள் மற்றும் காந்தி சேவை விருது வழங்கும் விழா போன்றவை கல்லூரி அரங்கில் நேற்று (2 -ம் தேதி) நடைபெற்றது. கல்லூரி இயக்குனர் ராமச்சந்திரன் நாயர்...
நாகர்கோவிலில் 133 மது பாட்டில்கள் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அஜய் ராஜா மற்றும் போலீசார் நேற்று நாடான்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு திருட்டு மது விற்பனையில் ஈடுபட்டதாக வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த லிப்பன் (வயது 40) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 133 மது...
மெக்கானிக்குக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கணபதிபுரம் ஸ்ரீகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் தர்மராய் (வயது 55). இவர் அதே பகுதியில் உள்ள சந்திப்பில் டி. வி. , மிக்ஸி போன்ற எலக்ட்ரிக் பொருட்கள் பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். இவரது கடையின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர்...
நாகர்கோவிலில் டீக்கடை உரிமையாளரை தாக்கிய வாலிபர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பள்ளிவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 33). இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு அறுகுவிளையை சேர்ந்த அருள் சிங் (32) வந்தார். அப்போது இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அருள் சிங், ராஜேஷை...
கடன் தொல்லையால் கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை
நித்திரவிளை அருகே உள்ள புல்லாணிவிளை பகுதியை சேர்ந்தவர் சுனில் (42) கொத்தனார். இவருக்கு அஜிதா (35) என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
அஜிதா அந்த பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் வேலை பார்த்து வருகிறார். சுனில் புதிதாக வீடு கட்டி உள்ளார். இதனால் அதிக கடன் சுமை...
மகாத்மா காந்தியின் பிட்னஸ் ரகசியம் தெரியுமா?
காந்தி தன் உணவு முறை குறித்து ஒரு புத்தகத்தில், “100 கி முளைக்கட்டிய கோதுமை, பாதாம் 100 கி, கீரை 100 கி, எலுமிச்சை, தேன் ஆகியவற்றை காலை 11 மணிக்கு உணவாக எடுத்துக் கொள்வேன். அடுத்த வேளை உணவை மாலை 6:15 மணியளவில் சூடான நீர்,...
போதையில் ஓடையில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
குலசேகரம் அருகே உள்ள உண்ணியூர் கோணம் பகுதியை சேர்ந்தவர் சுதர்சன் மகன் வினோத் (26). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வினோத் ரப்பர் மரங்களை பாரம் ஏற்றும் வேலை செய்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம்(செப்.30) இரவு பூலங்கோடு என்ற குளத்தில்...













