குமரி: மழையால் ரம்மியமாக காட்சியளிக்கும் பேச்சிப்பாறை அணை
குமரியில் தற்போது தொடர் மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை அணையும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இந்த ஆண்டு பெரும்பாலான நாட்களிலும் 35 அடிக்கு அதிகமான தண்ணீர் இருந்து வந்தது. தற்போது நிரம்பிய நிலையில் எல்லா பக்கங்களிலும் நீர் சூழ்ந்து கடல்போல் காட்சியளிக்கிறது, காற்றின் வேகத்தில்...
மார்த்தாண்டம்: தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோவை இழுத்து போராட்டம்
குமரி மாவட்டம் திருவனந்தபுரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை பகுதி களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில் பழுதடைந்து பாதுகாப்பின்றி காணப்படுகிறது. இதனால் பல்வேறு விபத்துகள் நடப்பதாக புகார்கள் உள்ளன. குறிப்பாக மார்த்தாண்டம் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் அடிப்பகுதியில் உள்ள சாலை பல...
நித்திரவிளை: ஊர் எல்லை பிரச்சனை; 20 பேர் மீது வழக்கு
நித்திரவிளை அருகே பூத்துறை மீனவ கிராமத்தினருக்கும் இரையுமன்துறை கிராமத்தினருக்கும் பிரச்சனை இருந்து வருகிறது. இதனால் கடல் அலை தடுப்பு சுவருக்கு பெரிய கல் கொண்டு செல்வது தொடர்பாக அடிக்கடி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இரு கிராமத்தை பிரிக்கும் வகையில் நடப்பட்டிருந்த எல்லைக்கல்லை...
பார்த்திபபுரம்: இந்து முன்னணியினர் 230 பேர் மீது வழக்கு
புதுக்கடை அருகே பார்த்திப்புரத்தில் பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி கோவில் உள்ளது. மிகப் பழமைவாய்ந்த இந்த கோவிலில் உள்ள ஐம்பொன் சிலை, மற்றும் வெள்ளிக் கவசங்கள் கடந்த 13-ம் தேதி நள்ளிரவில் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. கோவிலில் கொள்ளையடித்த நபர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு...
மார்த்தாண்டம்: சாலைக்கு பாடை கட்டி பாஜக போராட்டம்
நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை குண்டும் குண்டும் குழியுமாக குளம்போல் காட்சியளிக்கிறது. இந்த சாலையை செப்பனிட 19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் அறிவித்தும் பணிகள் துவங்காத காரணத்தால் பல விபத்துக்கள் தொடர்கதையாகி வருவதை கண்டித்து குழித்துறை நகர பாஜக சார்பாக மார்தாண்டத்தில்...
பத்துகாணி: அரசு பள்ளி வளாகத்தில் புலி? கேமரா கண்காணிப்பு
அருமனை அருகே பத்துகணி பகுதியில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் (நவம்பர் 13) இரவு பள்ளியில் புலி நடமாடியதற்கான அறிகுறிகள் தெரிந்தன. நள்ளிரவில் பயங்கரமான சத்தம் கேட்டதாகவும், பள்ளி வளாகத்தில் சுற்றித்திரிந்த இரண்டு நாய்களை...
குழித்துறை: ரயிலில் தவறவிட்ட நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு
சென்னை தாம்பரம் பகுதியில் வசித்து வருபவர் டாக்டர் லதா ஜானகி (64). இவர் நேற்று(நவம்பர் 14) காலை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னையிலிருந்து திருநெல்வேலி வந்தார். ரயிலில் இருந்து இறங்கும்போது அவர் தனது கைப்பையை எடுக்க மறந்து விட்டார். இது பற்றி உடனடியாக அவர் ரயில்வே அவசர...
அழகியமண்டபம்: சாலை சீரமைக்கக் கோரி காங்கிரஸ் கட்சியினர் மறியல்
தக்கலை அருகே உள்ள அழகிய மண்டபத்திலிருந்து வேர் கிளம்பி செல்லும் சாலை பொதுமக்கள் பயணம் செய்ய முடியாத அளவுக்கு மிக மோசமான நிலையில் உள்ளது. தற்போது குடிநீர் திட்டங்களுக்கு குழாய் பதிக்க மேலும் தோண்டப்பட்டதால் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் தற்போது தொடர் மழை என்பதால்...
குளச்சல்: மின்னல் தாக்கி கடலில் தூக்கி வீசப்பட்ட மீனவர் மாயம்
குளச்சல் அருகே கோடிமுனை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜூடின் (48). மீனவரான இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம்(நவம்பர் 13) மாலை தனது வள்ளத்தில் மீன் பிடிக்க சென்றார். இரவு 7 மணி அளவில் இனையம் கடல் பகுதியில் 3 கிலோமீட்டர் தொலைவில் மீன் பிடித்துக்...
கருங்கல்: அரசு பள்ளியில் இலவச மருத்துவ முகாம்
கிள்ளியூர் வட்டார வளமையம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் கருங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. திப்பிரமலை பஞ்சாயத்து தலைவர் புஷ்பலதா, கிள்ளியூர் வட்டார கல்வி அலுவலர் கலாவதி, கருங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசெல்வம் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
இதில்...













