மார்த்தாண்டம்: பஸ்ஸிலிருந்து விழுந்த முதியவர் படுகாயம்
மார்த்தாண்டத்தில் இருந்து கொல்லங்கோட்டிற்கு நேற்று (4-ம் தேதி) தடம் எண் 82 எம் என்ற அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. பஸ்சில் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் படிக்கட்டின் மேல்...
பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு அவர்கள் தங்குவதற்கு புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று(டிச.3) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வீடுகள் தரமானதாக கட்டப்பட்டுள்ளதா, அதில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் தரமானதாக உள்ளதா என்பது...
இரணியல்: பஸ் நிறுத்தத்தில் மயங்கி கிடந்த முதியவர் இறப்பு
இரணியல் அருகே உள்ள பரிசேரி பஸ் நிறுத்தத்தில் நேற்று முதியவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இது குறித்து அந்த பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி...
குளச்சல்: குழந்தைகளுக்கான சித்த மருத்துவ முகாம்
குமரி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் இரா. அனிதா அறிவுரைப்படி, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு நீக்கும் சித்த மருத்துவ பஞ்ச கட்டி கஞ்சி பற்றிய விழிப்புணர்வு முகாம் குருந்தன் கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று(டிச.3) நடந்தது. ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செந்பகவல்லி...
மணவாளக்குறிச்சி: நள்ளிரவில் நர்சிங் மாணவி மாயம்
மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் கஸ்பர் மகள் ஆன்சிலின் மெசி (25). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்சிலின் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் சம்பவ தினம் இரவு...
குழித்துறை: தடுப்பணையில் மீண்டும் போக்குவரத்து துவக்கம்
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் குழித்துறை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணை மீது வாகனங்கள், பொதுமக்கள் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. இதற்காக இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டது.
இதனால் கடந்த ஒரு மாதமாக தடுப்பணை...
நித்திரவிளை: பைக்கிலிருந்து விழுந்த மெக்கானிக் உயிரிழப்பு
நித்திரவிளை அருகே உள்ள எஸ் டி மங்காடு பகுதியை சேர்ந்தவர் விஜயன் (64). இவர் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். சம்பவ தினம் மாலையில் விஜயன் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க நடைக்காவு என்ற பகுதிக்கு மோட்டார் சைக்கிள் சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென...
குளச்சல்: விசைப்படகில் தவறி விழுந்த குமரி மீனவர் மாயம்
குளச்சல் அருகே கோடிமுனை பகுதியைச் சேர்ந்தவர் ஏசுதாசன் (45) மீன்பிடித் தொழிலாளி. இவர் கடந்த 27ஆம் தேதி கேரள மாநிலம் முனம்பம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஸ்ரீலால் என்பவரது விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றார்.
கடந்த 30ஆம் தேதி கோழிக்கோடு மாவட்டம் வேப்பூர் பகுதியில் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் பலத்த...
நாகர்கோவில் அருகே நள்ளிரவில் கடையில் புகுந்து திருட்டு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் பேக்கரியில் நேற்று (டிச.,2) நள்ளிரவு 3 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் கடையில் புகுந்து பணத்தை திருடியுள்ளார். இது குறித்து கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில், சிசிடிவிகாட்சிகளை ஆய்வு செய்து கோட்டார் போலீசார் விசாரணை...
வேளிமலை: வனச்சரகம் சார்பில் கடற்கரை தூய்மை பணி
குமரி மாவட்ட வனத்துறை சார்பில் வேளிமலை வனச்சரக பணியாளர்களும், சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனம் சேர்ந்து வேளிமலை வனச்சரக எல்லைக்குட்பட்ட அழிக்கால் மண்டபம், லெமூர்பீச், ராஜாக்கமங்கலம் துறை கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் நேற்று (டிச 1-ம் தேதி) தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
பிளாஸ்டிக் பாட்டில்கள், நெகிழிகள், கண்ணாடிப் பாட்டில்கள் போன்றவை...













