Google search engine

கொற்றிக்கோடு:  பெண்ணின் கவரிங் நகை பறிப்பு

கொற்றிக்கோடு அருகே உள்ள பெருஞ்சிலம்பு பகுதி சேர்ந்தவர் அமுதா (53). நேற்று(டிச.1) மாலை தனது வீட்டருகில் உள்ள ரப்பர் தோட்டத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் வந்துள்ளார். அவரை பார்த்தது சந்தேகம் அடைந்த அமுதா யாரை பார்க்க வேண்டும் என்று விசாரித்துள்ளார்.  அந்த சமயத்தில்...

கொல்லங்கோடு: காங்கிரஸ் கமிட்டி கூட்டம்; எம்.எல்.ஏ. பங்கேற்பு

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, கொல்லங்கோடு நகர காங்கிரஸ் கமிட்டி கூட்டம் தலைவர் பால்ராஜ் தலைமையில் இன்று (2-ம் தேதி) நடைபெற்றது. குமரி மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங் முன்னிலையில், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  கூட்டத்தில் நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கொல்லங்கோடு...

மார்த்தாண்டம்: அரசு பஸ் மோதி நிதி நிறுவன மேலாளர் பலி

மார்த்தாண்டம் அருகே காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன் மகன் ஸ்ரீனிவாசன் (45). தேனி மாவட்டத்தில் ஒரு நிதி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் (நவ.,1) தனது பைக்கில் மார்த்தாண்டத்தில் இருந்து இரவிபுதூர் கடைக்கு சென்று கொண்டிருந்தார்.  அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அரசு பஸ்...

களியக்காவிளை: முதியவரை தாக்கியவருக்கு 1 வருடம் சிறை

களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் பாலையன் (68). இவர் வீட்டை ஒட்டிய பகுதியில் தொழுவம் அமைத்து பசுமாடு வளர்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த மணி (53) என்பவருக்கு பாலையன் மாட்டுத் தொழுவத்திலிருந்து கழிவுநீர் பாய்ந்து செல்வதால் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் கடந்த...

வடசேரி பேருந்து நிலைய வாகன காப்பகத்தில் அதிக கட்டணம் வசூல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்லும் பயணிகள் தங்கள் இருசக்கர வாகனங்களை மாநகராட்சி மூலம் ஒப்பந்தம் இடப்பட்டு அமைக்கப்பட்டுள்ள காப்பகங்களில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதற்கு இருசக்கர வாகனத்திற்கு ஒரு நாளைக்கு ரூ. 10 தலைக்கவசத்திற்கு ரூ. 5 கட்டணம் என அறிவித்துவிட்டு...

கல்குறிச்சி: புனித லூர்து அன்னை சிற்றாலயம் அர்ச்சிப்பு

தக்கலை அருகே கல்குறிச்சியில் புனித சூசையப்பர் ஆலய வளாகத்தில் லூர்து அன்னையின் புதிய சிற்றாலயம் (கேபி) அமைக்கப்பட்டு அதன் அர்ச்சிப்பு விழா நேற்று (1-ம் தேதி) நடைபெற்றது.  குழித்துறை மன்ற மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ் தாஸ் தலைமை தாங்கி புனித லூர்து அன்னை புதிய சிற்றாலயத்தை ஜெபித்து...

தக்கலை: கொலை முயற்சி வழக்கில் தலைமறைவானவர் கைது

தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் என்கிற ஐயப்பன் (40). தொழிலாளி. இவர் மீது 2005 ஆம் ஆண்டு நடந்த அடிதடி சம்பவத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தக்கலை போலீசார் கைது செய்தனர்.  இந்த வழக்கு பத்மநாபபுரம் கோர்ட்டில் நடந்து வந்தது. மேலும்...

தக்கலை: பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

தக்கலை அருகே பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் ஜோபு கல்சன் மனைவி தனிஷா (29). நாகர்கோவில் உள்ள ஒரு நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு தனிஷா குளச்சல் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.  பள்ளியாடி பகுதியில் வந்த போது பின்னால் மோட்டார்...

பத்துகாணி: மீண்டும் தென்னை தோப்பில் புகுந்த யானை கூட்டம்

அருமனை அருகே பத்துகாணி மலையோர பகுதிகளில் சமீபகாலமாக யானைகள், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.  இந்த நிலையில் பத்துகாணி சிஎஸ்ஐ ஆலயத்தின் பின்பகுதியில் உள்ள தென்னை தோப்புக்குள் நேற்று முன்தினம் இரவு குட்டிகளுடன் தாய் யானை வந்துள்ளது. பின்னர் யானைகள் பட்டா நிலத்திலிருந்து தென்னை, கமுகு, இலவு மரங்களை...

மார்த்தாண்டம்: மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது

மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (70). விவசாயி. இவர் சம்பவ தினம் தனது மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டம் வெட்டுமணி பகுதிக்குச் சென்றிருந்தார்.  அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, சொந்த வேலைக் காரணமாகச் சென்றுவிட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது அங்கிருந்து மோட்டார் சைக்கிளை காணவில்லை....