Google search engine

திருவட்டாறு: ஆதிகேசவன் கோயிலில் மத்திய அமைச்சர் தரிசனம்

திருவட்டாரில் பிரதி பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோயில் உள்ளது. நேற்று இந்த கோவிலுக்கு மத்திய அமைச்சரும், பிரபல மலையாள நடிகருமான சுரேஷ் கோபி சாமி தரிசனம் செய்ய வந்தார். ஒற்றைக்கால் மண்டபத்தில் ஆதி கேசவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி உற்சவ மூர்த்தி விக்ரகங்களுக்கு நடந்த அபிஷேகத்தை...

களியங்காடு சிவன் கோயிலில் தேய்பிறை சிறப்பு பூஜை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் களியங்காடு சிவபுரம் சிவன் கோவிலில் அமைந்துள்ள கால பைரவர் சன்னதியில் தைமாத தேய்பிறை அஷ்டமியை யொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை யொட்டி காலை 10. 30 மணிக்கு காலபைரவர் சாமிக்கு மஞ்சள், அரிசி மாவு, பால், தயிர், பன்னீர், சந்தனம்,...

குமரி: குற்றங்களைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க அறிவுரை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் குற்ற நடவடிக்கைகள் குறித்தான ஆய்வுக் கூட்டம் நேற்று நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள சமூகநல கூடத்தில் மாவட்ட எஸ். பி. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குற்ற செயல்பாடுகளைத் தடுக்க காவல்துறையினர் விரைந்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று...

இரணியல்: 2 விபத்துகளில் 2 பேர் உயிரிழப்பு

கோட்டார் பகுதியைச் சேர்ந்தவர் சசி (59). இவர் மணக்கரையில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியாக உள்ளார். நேற்று (ஜனவரி 21) மாலை வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். வில்லுக்குறிப் பாலம் அருகில் செல்லும்போது பின்னால் வேகமாக வந்த கனிமவளக் லாரி பைக்கில்...

பளுகல்: கல்லூரி மாணவர் திடீர் மாயம் –  தாய் புகார்

களியக்காவிளை அடுத்த பளுகல் அருகே இளஞ்சிறை பகுதியைச் சேர்ந்தவர் சுமேஷ்ராஜ் (19). இவர் அந்தப் பகுதியில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவ தினம் வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர் பல்வேறு இடங்களில் மாணவனைத் தேடினார்கள்....

குளச்சல்: பள்ளி மாணவர்களின் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி

குளச்சலில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின்படி குளச்சல் ஏஎஸ்பி பிரவீன் கௌதம், போக்குவரத்து காவல் இன்ஸ்பெக்டர் சந்தனகுமார் ஆகியோர் மேற்பார்வையில் நேற்று பள்ளி மாணவர்களின் போக்குவரத்து விழிப்புணர்வு பேரணி குளச்சலில் நடந்தது. விகேபி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கிய இப்பேரணியை தலைமை ஆசிரியர்...

மார்த்தாண்டம்: சாலையில் பழுதாகி நின்ற லாரியால் நெரிசல்

மார்த்தாண்டம் வழியாக கேரளாவுக்கு தினம் தோறும் கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு அதிக அளவில் டாரஸ் லாரிகள் செல்கின்றன. எனவே காலை 6 மணி முதல் 11 மணி வரையும் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி நேரம் மேம்பாலத்தின் அடி பகுதியில் கனரக லாரிகள்,...

நித்திரவிளை: கல்லூரி மாணவர்கள் குளத்தில் தூய்மைப் பணி

நித்திரவிளை அருகேயுள்ள ஆலங்கோடு வலியகுளம் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. வாவறை ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அமைந்துள்ள இக்குளம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்குளத்தை மக்கள் குளிப்பதற்கும், விவசாயத்துக்கும் பயன்படுத்தி வந்தனர். இக்குளத்தில் அண்மைக்காலங்களில் பாசிகள் நிறைந்து தண்ணீர் துர்நாற்றம் வீசி வருவதுடன் மக்கள் பயன்படுத்த முடியாத...

கொல்லங்கோடு: பாறை பொடி கடத்திய டாரஸ் டிப்பர் லாரி பறிமுதல்

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு எம் சாண்ட், பாறைப் பொடி உள்ளிட்ட கனிம வளங்கள் கடத்தப்படுகிறது. இதை தடுக்க கொல்லங்கோடு அருகே செங்கவிளை பகுதியில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை சிறப்பு சோதனை சாவடி அமைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது. இந்த...

புதுக்கடை: அங்கன்வாடி மைய பிரச்சனை – பொதுமக்கள் போராட்டம்

புதுக்கடை அருகேயுள்ள தும்பாலி பொற்றவிளை பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ரூ. 14 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மைய புதிய கட்டிடம் அமைக்கப்பட்டது. இந்த கட்டிடம் கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி திறக்கப்பட்டது. அதன் பிறகு சிலரின் தூண்டுதலால் அங்கன்வாடி ஆசிரியையும், உதவியாளரையும்...