Google search engine

குமரி: புலிகள் கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்

கன்னியாகுமரி வன விலங்கு சரணாலயங்களான பூதப்பாண்டி, அழகியபாண்டியபுரம், வேளிமலை, குலசேகரம், களியல் உள்ளிட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணிகள் வரும் 7 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இதில் புலிகள், சிறுத்தை, புள்ளி மான் உள்ளிட்ட பல விலங்குகள் பற்றிய...

புலியூர்குறிச்சி: ஆற்றில் பாய்ந்த லோடு ஆட்டோ; வீடியோ வைரல்

தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லோடு ஆட்டோ வள்ளியாற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் காயமடைந்தார். அப்போது காரில் சென்ற குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, காரை நிறுத்தி காயமடைந்த ஓட்டுநரை தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஆற்றில் பாய்ந்த ஆட்டோவின் சிசிடிவி...

கல்குளம்: 1200 லிட்டர் மானிய விலை மண்ணெண்ணெய் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் பாரதி தலைமையில், ஓட்டுனர் ஜாண் பிரைட் குழுவினர் இன்று அதிகாலை 5.30 மணிக்கு முட்டம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நிற்காமல் வேகமாகச் சென்ற டாட்டா சுமோ வாகனத்தை துரத்திச் சென்று இரணியல் அருகே வள்ளி ஆற்றுப்பாலம்...

விளவங்கோடு: நள்ளிரவில் 600 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் அனிதா குமாரி தலைமையில் அதிகாரிகள் நேற்று நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கேரளா பதிவெண் கொண்ட வாகனத்தை துரத்தி சென்று திக்குறிச்சி பகுதியில் வைத்து மடக்கிப்பிடித்து சோதனை செய்தபோது, அதில் 600 லிட்டர் படகுகளுக்கு வழங்கும் மானிய விலை மண்ணெண்ணெய்...

கிள்ளியூர்: காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி பிரதநிதிகள் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளருமான நிவேதித்...

கருங்கல்: மாணவியின் வீடியோ எடுத்த தொழிலதிபர் கைது

கருங்கல், மிடாலம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி குளியலறையில் குளிக்கும் போது, கதவு இடுக்கு வழியாக கில்பர்ட் என்ற தொழிலதிபர் செல்போனில் வீடியோ எடுக்க முயன்றார். மாணவி செல்போனைப் பிடுங்கி, குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு...

தக்கலை: விபத்து; ஆட்டோ டிரைவரை சிகிச்சைக்கு அனுப்பிய கலெக

தக்கலையில் நேற்று நடைபெற்ற மருத்துவ முகாமை பார்வையிடச் சென்ற மாவட்ட கலெக்டர் அழகுமீனா, காரில் சென்று கொண்டிருந்தபோது, வள்ளியாற்றில் கவிழ்ந்த லோடு ஆட்டோவில் சிக்கிய வாலிபரை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கலெக்டரின் இந்த...

குழித்துறை: காங்கிரஸ் கட்சியினர் ஆர்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மகாத்மாவின் பெயரை மாற்றிய மத்திய பாஜக அரசை கண்டித்து, குழித்துறையில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளருமான நிவேதித் ஆல்வா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்....

குமரி: குப்பைகளுக்கு வைத்த தீயில் 4 படகுகள் எரிந்து நாசம்

இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தில் ஒருவர் தனது வீட்டருகே தேங்கியிருந்த குப்பைகளுக்கு நேற்று தீ வைத்தபோது, பலத்த காற்றில் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த நான்கு படகுகளில் தீப்பற்றி எரிந்தது. கொல்லங்கோடு தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தாலும், 4 படகுகளும் எரிந்து நாசமாகி, பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது....

நாகர்கோவில்: அனுமதியின்றி ‘பார்’ நடத்திய 3 பேர் கைது

நாகர்கோவில் கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக கார்த்திகேயன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம், கே. பி. சாலை மற்றும் ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு முன்பு அனுமதியின்றி மதுபான பார் நடத்தி வந்த மாதவன் (49), ஜான்...