இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ள ஐரோப்பிய யூனியனின் செயல் ஏமாற்றமளிப்பதாக அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.
இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 27-ம் தேதி நிறைவடைந்தது. இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்கும் அமலுக்கு வரும் என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்த வர்த்தக ஒப்பந்தம், அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய் என்று...
ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டு வரும் நிலையில், ஈரானுக்கு சவூதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சவூதி பத்திரிகை நிறுவனம் (SPA) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானும், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் தொலைபேசியில் உரையாடினர். அப்போது, ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிப்பதில் சவூதி அரேபியாவின் நிலைப்பாட்டை இளவரசர் உறுதிப்படுத்தினார்.
மேலும், ‘ஈரானுக்கு எதிரான எந்த ஒரு ராணுவ நடவடிக்கைக்காகவும் சவூதி அரேபியா...
ஐரோப்பிய யூனியன் உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கே அதிக நன்மை கிடைக்கும் என்று அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள ஜேமிசன் கிரீர், ‘‘இந்த ஒப்பந்தத்தை வியூக ரீதியாக புரிந்து கொள்வது முக்கியம். அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்நாட்டு உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து, அமெரிக்க சந்தையை அணுகும் மற்ற நாடுகளுக்கான வரியை உயர்த்தியுள்ளார். இதனால், அந்த நாடுகள்...
உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், தனது கார்ப்பரேட் பிரிவில் பணியாற்றும் 16,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் அந்நிறுவனம் மேற்கொள்ளும் இரண்டாவது பெரிய பணிநீக்கம் இதுவாகும்.
அமேசான் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் பெத் காலெட்டி, இது குறித்து வெளியிட்ட பதிவில், “நிறுவனத்தின் படிநிலைகளைக் குறைக்கவும், அதிகாரத்துவத்தைக் களைந்து உரிமையை அதிகரிக்கவும் இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.
அமேசான் ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர்...
ஈரானை தாக்க தயாராகிறதா அமெரிக்கா? – மத்திய கிழக்குக்கு வந்த விமானம் தாங்கி போர்க்கப்பல்கள்!
admin - 0
ஈரானுடனான உறவில் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க கடற்படையின் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி போர்க் கப்பல் மத்திய கிழக்கு கடல் பகுதிக்குள் நுழைந்துள்ளது. இது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரான் மீது வான்வழித் தாக்குதலுக்கு உத்தரவிடக்கூடும் என்ற யூகங்களை உருவாக்கியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையிலான உறவில் கடும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழலில், இந்தோ-பசிபிக் பகுதியில் இருந்து அனுப்பப்பட்ட அமெரிக்க கடற்படையின் ஆபிரகாம்...
வங்கதேசத்தில் கடந்த 2024 ஜூலையில் இடஒதுக்கீட்டில் திருத்தம் கோரி மாணவர்கள் தொடங்கிய போராட்டம் மிகப்பெரிய கிளர்ச்சியாக மாறியது.
அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் அரசு கடும் ஒடுக்குமுறையில் ஈடுபட்டது. இதில் பலர் கொல்லப்பட்டனர். அப்போது நிகழ்ந்த மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. இதில் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சர்...
அமைதி வழங்கும் அமைப்பாக ஐ.நா. சபையை மக்கள் கருதவில்லை: இந்தியாவின் நிரந்தர தூதர் விமர்சனம்
admin - 0
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை வழங்கும் ஓர் அமைப்பாக ஐ.நா.வை உலக மக்கள் கருதுவதில்லை என்று இந்தியாவின் நிரந்தர தூதர் பர்வதனேனி ஹரீஷ் விமர்சித்துள்ளார்.
ஐ.நா.வில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த வாரம் அறிவித்தார். அத்துடன், ஐ.நா.வுக்கு மாற்றாக, ‘போர்டு ஆப் பீஸ்’ என்ற அமைப்பை தொடங்கினார். இதில் உறுப்பினராக இந்தியா உட்பட உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார். அதிபர் ட்ரம்ப்பின் தலைமையில் இயங்கும் இந்த அமைப்பில்,...
இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்ளும் ஊழியர்களுக்கு ரூ.12.5 லட்சம் பரிசு: துபாய் தொழிலதிபர் அறிவிப்பு
admin - 0
துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் கலாப் அல் ஹப்தூர், ஊழியர்களுக்கு திருமண பரிசாக ரூ.12.5 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த அல் ஹப்தூர் குழுமத்தின் தலைவர் கலாப் அல் ஹப்தூர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: திருமணம் செய்வதும், ஒரு குடும்பத்தை உருவாக்குவதும் வெறும் தனிப்பட்ட விஷயம் மட்டுமல்ல. அவை சமூக மற்றும் தேசிய பொறுப்புகள். ஏனெனில் குடும்பங்களின் மூலமே தேசங்கள் கட்டியெழுப்பப்படுகின்றன...
தென்கொரியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 25% ஆக உயர்த்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தங்கள் மிகவும் முக்கியமானவை. ஒப்புக்கொண்டபடி நாங்கள் வரியைக் குறைத்துள்ளோம். அதே வேகத்தை எங்கள் வர்த்தகக் கூட்டாளிகளிடமிருந்தும் எதிர்பார்க்கிறோம்" என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை அடுத்து தென்கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள், மரக் கட்டைகள் (Lumber) மற்றும்...
அமெரிக்காவின் மினியாபொலிஸ் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 37 வயதான அலெக்ஸ் ஜெஃப்ரி பிரெட்டியை குடியேற்ற அதிகாரிகள் 6 பேர் சூழ்ந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற புதிய வீடியோ வெளியாகி உள்ளது. இது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மினியாபொலிஸ் பகுதியில் கடந்த 7-ம் தேதி அன்று அமெரிக்க குடியேற்ற அதிகாரி ஒருவர், ரெனி குட் என்ற பெண்மணியை சுட்டுக்கொன்றனர். இது தேசிய அளவில் மக்களை கொதிப்படைய செய்தது....