Google search engine
ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி, ஈரானின் கோம் நகரில் சுயநினைவற்ற நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் என ஒரு உளவுத்துறை தகவலை மேற்கோள் காட்டி டைம்ஸ் யுகே செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. டைம்ஸ் யுகேவின் செய்தியின்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், வளைகுடா நட்பு நாடுகளுடன் பகிர்ந்து கொண்ட உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், மொஜ்தபா காமேனி சுயநினைவற்ற நிலையில் இருப்பதாகவும், அவருக்கு கோம் நகரில் தீவிர...
அமெரிக்க போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டபோது காணாமல் போயிருந்த விமானி, பரபரப்பான துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். ஈரான் வான் பரப்​பில் பறந்த அமெரிக்க விமானப் படை​யின் எப் -35 மற்​றும் எப்- 15 இ ரக போர் விமானங்​களை நேற்று முன் தினம் சுட்டு வீழ்த்​தப்பட்டன. இதில் ஒரு விமானி பத்திரமாக திரும்பிய நிலையில், மற்றொரு விமானி காணாமல் போனார். இந்த சூழலில்...
வருங்காலங்களில் இந்தியா உடனான மோதல் எல்லையோரத்தில் இருக்காது. எங்கள் தாக்குதலை கொல்கத்தாவில் மேற்கொள்வோம் என பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து பாகிஸ்தான் நாட்டில் இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகளின் புகலிடங்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையை இந்தியா முன்னெடுத்தது. இதில் அந்த நாட்டில் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்தியா தெரிவித்தது. அதற்கு...
மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் பதற்றத்துக்கு மத்தியில், இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் 2019-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஏழு ஆண்டுகளில் முதன்முறையாக ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துள்ளது. மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ள நிலையில், இந்திய சுத்திகரிப்பு ஆலைகள் ஈரானிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்துள்ளன. உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடான இந்தியா, அமெரிக்கத் தடைகள்...
அமெரிக்க எஃப்-15 போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய பிறகு காணாமல் போன விமானியை தாங்கள் மீட்டுவிட்டதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியதைத் தொடர்ந்து, “தெற்கு இஸ்பஹானில் அமெரிக்கா ஒரு கசப்பான தோல்வியை சந்தித்துள்ளது. அதனை நியாயப்படுத்த ட்ரம்ப் முயல்கிறார்” என ஈரான் பதிலளித்துள்ளது. ஈரானின் பிரஸ் டிவியில், கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் ஸோல்ஃபகாரி கூறியதாவது: தெற்கு இஸ்ஃபஹானில் அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக ஈரானியப்...
அமெரிக்க படைத்​தளம் அமைந்​துள்ள வளை​குடா நாடு​கள் மீது ஈரான் தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இந்நிலையில், ஈரான் நடத்​திய ட்ரோன் தாக்​குதலில் ஐக்கிய அரபு அமீரகத்​தில் உள்ள துபாய் சர்​வ​தேச விமான நிலை​யத்​துக்கு அருகே உள்ள கட்​டிடம் சேதமடைந்துள்ளது. இதை புகைப்​படம் எடுத்​துப் பகிர்ந்​த​தாக 25 வயதுடைய பிரிட்​டன் விமானப் பணிப்​பெண் துபா​யில் கைது செய்யப்பட்​டுள்​ளார். ‘மிடில் ஈஸ்ட் ஐ’ செய்​தி​யின்​படி, அந்​தப் பெண் ஒரு வாட்​ஸ்​அப் குழு​வில் அந்​தப் புகைப்​படத்​தைப்...
நில​வுக்கு கடைசி​யாக நாசா கடந்த 1971-ம் ஆண்டு அப்​போலோ விண்​கலம் மூலம் 3 வீரர்​களை அனுப்பியது. 50 ஆண்டுக்கு ​பின் தற்​போது ஆர்​டெமிஸ்-2 திட்​டத்​தின் கீழ் எஸ்​எல்​எஸ் ராக்​கெட் மூலம் ஓரி​யான் விண்​கலத்தை நில​வுக்கு நாசா நேற்று பரிசோதனை முயற்​சி​யாக அனுப்பியது. இந்த விண்​கலத்​தில் நாசா கமாண்​டர் ரீட் வைஸ்​மேன், பைலட் விக்​டர் க்ளேவர், கிறிஸ்​டினா கோச், கனடா விண்​வெளி வீரர் ஜெரிமி ஹேன்​சன் ஆகியோர் பயணம் செய்​தனர். இந்த...
மத்​திய கிழக்கு பிராந்​தி​யத்​தில் அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும் என்று ஈரான் ராணுவம் திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​துள்​ளது. போரில் ஈரான் பலவீனமடைந்து வரு​வ​தாக அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் கூறி​யிருந்த நிலை​யில் ஈரான் ராணுவம் இவ்​வாறு கூறி​யுள்​ளது முக்​கி​யத்​து​வம் வாய்ந்ததாக பார்க்​கப்​படு​கிறது. இதுகுறித்து ஈரானின் மூத்த ராணுவ அதி​காரி இப்​ராஹிம் சல்ஃப​காரி வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறியுள்ளதாவது: எங்​களது ராணுவ வலிமை மற்​றும் தளவாடங்​கள் குறித்த உங்​களது (அமெரிக்​கா) உளவுத் தகவல்​கள்...
இஸ்​ரேல், அமெரிக்காவின் தாக்​குதலைத் தொடர்ந்​து, சர்​வ​தேச கடல்​வழிப் போக்​கு​வரத்​துப் பாதையான ஹார்​முஸ் ஜலசந்​தி​யை ஈரான் மூடி உள்​ளது. இதனால் இந்​தியா உட்பட பல நாடு​களுக்கு எரிசக்தி விநியோகத்​தில் பெரும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. இது தொடர்​பாக இந்​தி​யா​வில் உள்ள ஈரான் தூதரகம் எக்ஸ் தளத்​தில் நேற்று வெளி​யிட்​ட பதி​வில், "எங்​களது இந்திய நண்​பர்​கள் பாது​காப்​பான கரங்​களில் உள்​ளனர், கவலை வேண்​டாம்" என குறிப்​பிட்​டுள்​ளது. உலகின் 20% எரிசக்தி விநி​யோகம் நடை​பெறும் முக்​கிய வழித்​தட​மான...
பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை சுமார் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச நாடுகளில் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மேற்காசியாவில் நிலவும் போரை விரைந்து முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென உலக நாடுகள் விரும்புகின்றன....