யுஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார்.
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று அதிகாலை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீராங்கனையுமான சபலென்காவும், அமெரிக்க வீராங்கனையும், போட்டித் தரவரிசையில் 8-ம் நிலையில் இருப்பவருமான அமண்டா அனிசிமோவாவும்...
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(பிசிசிஐ) வருவாய் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.14,627 கோடியாக அதிகரித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பணக்கார விளையாட்டு அமைப்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்படும் ஐபிஎல் உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகள், ஸ்பான்ஸர் செய்யும் நிறுவனங்கள், விளம்பரங்கள், டிக்கெட் மூலம் வருவாய் என பலவழிகளில் பிசிசிஐ வருவாயை ஈட்டுகிறது.
இந்நிலையில் பிசிசிஐ-க்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.14,627 கோடி வருவாய் அதிகரித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் பிரேனலன் சுப்ராயன் போட்டிகளில் பந்துவீச சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) அனுமதி வழங்கியுள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிக்காக போட்டிகளில் பங்கேற்று வருகிறார் சுப்ராயன். இந்நிலையில் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவர் பங்கேற்றார்.
அப்போது அவர் பந்துவீசுவதில் சந்தேகம் இருப்பதாக புகார் எழுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனிலுள்ள நேஷனல் கிரிக்கெட் சென்டரில், அவரது பந்துவீச்சு பரிசோதனை செய்யப்பட்டது. சுயபரிசோதனை...
ஐயன்மேன் 5150 டிரையத்லான் போட்டியின் அறிமுக விழா சென்னை தேனாம்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ‘ஐயன்மேன் 5150 டிரையத்லான் சென்னை’ போட்டி குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த டிரையத்லான் போட்டி வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எம்ஜிஎம் பீச் ரிசார்ட்டில் நடைபெறுகிறது. டிரையத்லான் போட்டியானது 1.5 கிலோ மீட்டர் நீச்சல், 40 கிலோ...
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், முதல் நிலை வீராங்கனையுமான பெலாரஸின் அரினா சபலென்கா, 4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா...
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 330 ரன்கள் குவித்தது. மேத்யூ ப்ரீட்ஸ்கே 77 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் விளாசினார். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 62 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 58 ரன்கள்...
நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த ராஸ் டெய்லர் கடந்த 2022-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். நியூஸிலாந்து அணிக்காக அவர், 112 டெஸ்ட் போட்டிகள், 236 ஒருநாள் போட்டி, 102 சர்வதேச டி 20 போட்டிகளில் விளையாடி இருந்தார்.
டெஸ்ட் போட்டிகளில் 19 சதங்கள் உட்பட 7,683 ரன்கள் குவித்திருந்தார். ஒருநாள் போட்டிகளில் 8,607 ரன்களும், சர்வதேச டி 20 போட்டிகளில் 1,909...
யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் கார்லோஸ் அல்கராஸ்,ஜோகோவிச் ஆகியோர் அரை இறுதிக்கு முன்னேறினர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றயைர் பிரிவு கால் இறுதி சுற்றில் 2-ம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், 20-ம் நிலை வீரரான செக் குடியரசின் ஜிரி லெஹெக்காவுடன் மோதினார். இதில் அல்கராஸ் 6-4, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு...
இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று ஹராரே நகரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான பிரையன் பென்னட் 57 பந்துகளில், 12 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் விளாசினார். சிகந்தர் ராசா 28, ரியான்...
முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. செதிகுல்லா அடல் 45 பந்துகளில், 3...










